11 8
உலகம்செய்திகள்

ஏமன் துறைமுகம் மீது திடீர் வான்வழித் தாக்குல் நடத்திய இஸ்ரேல்

Share

ஏமன் துறைமுகம் மீது திடீர் வான்வழித் தாக்குல் நடத்திய இஸ்ரேல்

ஹவுதி கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள ஏமனின் செங்கடல் துறைமுக நகரமான ஹூடைடா மீது இஸ்ரேல் ட்ரோன்கள் மூலம் வான்வழித் தாக்குதல் நடத்தி உள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த தாக்குதலானது ஹூடைடாவில் உள்ள எண்ணெய் சேமிப்பு நிலையங்கள் மற்றும் மின் உற்பத்தி நிலையத்தை குறிவைத்து நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த சம்பவத்தில் அப்பகுதி தீ பற்றி எரிந்ததாகவும், வான்வழித் தாக்குதல்கள் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும் சுகாதார அதிகாரிகள் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலால் ஏமனில் தொடர் பதற்றம் நிலவுகிறது.

இந்நிலையில் இஸ்ரேல் -காசா போரில் ஹமாஸ் அமைப்பினருக்கு ஆதரவாக ஏமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்கள் செயல்படுகின்றனர். இதனால் செங்கடல் வழியாக செல்லும் இஸ்ரேல் தொடர்புடைய கப்பல்கள் மீது அவர்கள் தாக்குதல் நடத்துகின்றனர்.

இதனை கட்டுப்படுத்த அமெரிக்கா தலைமையில் ஒரு கூட்டுப்படை உருவாக்கப்பட்டுள்ளதோடு, கிளர்ச்சியாளர்கள் செங்கடல் பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு பதிலடி கொடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
images 3 2
இலங்கைசெய்திகள்

மாகாண சபைத் தேர்தல் விரைவில்: 2026 வரவு செலவுத் திட்டம் மக்கள் நலன் சார்ந்ததாக அமையும் என எதிர்பார்ப்பு

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசு, மாகாண சபைத் தேர்தலை இயலுமானவரை...

24112021 capsized ferry reuters
செய்திகள்இலங்கை

கிண்ணியா புதிய படகுப் பாதை தொடக்க விழாவில் விபத்து: கடலில் கவிழ்ந்த பொக்லைன் இயந்திரம்!

கிண்ணியா – குறிஞ்சாக்கேணிக்கு இடையேயான புதிய படகுப் பாதை சேவையை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வின் போது...

25 68f4d447e68d6
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

ஊழல் வழக்குகளை விரைவுபடுத்த: சம்பந்தன் உள்ளிட்ட முக்கிய நபர்களின் உத்தியோகபூர்வ இல்லங்கள் மேல் நீதிமன்றங்களாக மாற்றம்!

ஊழல் எதிர்ப்பு தேசிய செயல் திட்டத்தை (2025–2029) வலுப்படுத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, கொழும்பு 7...

images 2 4
பிராந்தியம்இலங்கைசெய்திகள்

பொத்துவில் முஹுது மஹா விகாரைக்கு இந்திய உயர்ஸ்தானிகர் விஜயம்: தொல்லியல் இடங்களைப் பாதுகாக்க கோரிக்கை

பொத்துவில் பகுதியில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க முஹுது மஹா விகாரையை இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா...