செய்திகள்உலகம்

லண்டனில் உச்சத்தைத் தொடும் வெயில் – மாத இறுதியில் வெள்ளப்பெருக்கு !!!!

லண்டனில் உச்சத்தைத் தொடும் வெயில் - மாத இறுதியில் வெள்ளப்பெருக்கு !!!!
லண்டனில் உச்சத்தைத் தொடும் வெயில் - மாத இறுதியில் வெள்ளப்பெருக்கு !!!!
Share

லண்டனில் உச்சத்தைத் தொடும் வெயில் – மாத இறுதியில் வெள்ளப்பெருக்கு !!!!

லண்டனில் இவ்வாரம் வெப்பநிலை 24 செல்ஸியஸ் வெப்பநிலையைத் தொட சாத்தியம் உள்ளது என இங்கிலாந்து வானிலை அவதானிப்பு நிலையம் தெரிவித்துள்ளது.

இங்கிலாந்தில் கோடை காலம் ஆரம்பிக்கத் தொடங்கும் நிலையில், இந்த வாரம் முழுவதும் லண்டனில்
சூடான மற்றும் வறண்ட காலநிலையை உணர முடியும். இங்கிலாந்தின் வெப்பமான பகுதிகளில் ஒன்றாக லண்டன் இருக்கும் என்று வானிலை அவதானிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, ஸ்கொட்லாந்து மற்றும் வடக்கு அயர்லாந்தின் சில பகுதிகள் உயர் வெப்ப அழுத்தத்தின் காரணமாக 26 செல்ஸியஸ் வெப்பநிலையில் காணப்படும்.

வானிலை அவதானிப்பு நிலைய அதிகாரிகளின் அறிக்கையின்படி, லண்டன் உட்பட இங்கிலாந்தின் பல பகுதிகள் வழக்கத்தை விட, இம் மாதத்தின் இறுதிப் பகுதியில் வெள்ளத்தில் மூழ்க வாய்ப்புக்கள் உள்ளன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இவ்வாரம் சில பகுதிகளில் வெப்பநிலை உயர்வாகக் காணப்படினும், வட கடலில் இருந்து வீசக்கூடிய காற்று காரணமாக, சில பிராந்தியங்கள் வாரத்தின் இறுதிப் பகுதியில் குளிர்ச்சியாக காணப்பட வாய்ப்புக்கள் உண்டு.

குறிப்பாக புதன்கிழமை (இன்று முதல் ), இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் பகுதிகளில் வெப்பநிலையானது 24 செல்ஸியஸ் உச்சத்தை எட்டக்கூடும், அதே நேரத்தில் ஸ்காட்லாந்து மற்றும் வடக்கு அயர்லாந்தில் மேற்கு பகுதிகள் 26 செல்ஸியஸ் வரை இருக்கும்.

இந்த வெப்பநிலை அதிகரிப்பானது, வடக்கு பகுதியிலிருந்து வீசம் காற்றால், குறைவடைந்து செல்வதற்கு வாய்ப்புக்கள் உள்ளன.

கடந்த வார இறுதியில் இங்கிலாந்து, வேல்ஸ் மற்றும் வடக்கு அயர்லாந்தின் சில பகுதிகளில் பலத்த மழை மற்றும் இடி தாக்கியபோது மஞ்சள் வானிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இருப்பினும், இது நாடு முழுவதையும் பிரதிநிதித்துவப்படுத்தவில்லை.

இதேவேளை, ஸ்கொட்லாந்தின் சில பகுதிகள் வழக்கத்தை விட வறட்சியடைந்து காணப்படுகின்றன. தென்கிழக்கில் உள்ள பகுதிகளில் அண்மையில் அடைமழை பெய்தது. இதனால், நாடு இந்த மாதத்துக்கான அதன் சராசரி மழைப்பொழிவில் 72% ஐக் கண்டுள்ளது.

இருப்பினும், இம் மாதத்தின் இறுதிப் பகுதியில் கிடைக்கவுள்ள மழையால், பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்க சாத்தியம் உள்ளது என வானிலை அவதானிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
15 7
இலங்கைசெய்திகள்

தமிழரசின் பெருவெற்றி – நான் கூறியது நடந்து விட்டது….! மார்தட்டும் சுமந்திரன்

அன்று நான் கூறியது இன்று நிரூபணமாகியுள்ளது என இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரான ஜனாதிபதி...

16 7
உலகம்செய்திகள்

ஹவுதிகளுக்கு பேரிழப்பு : யேமனின் முக்கிய விமான நிலையத்தை தகர்த்து அழித்தது இஸ்ரேல்

யேமனின் தலைநகரிலுள்ள சர்வதேச விமான நிலையத்தை வான்வழித் தாக்குதல்கள் மூலம் தகர்த்து அழித்துள்ளதாக இஸ்ரேல் இராணுவம்...

13 7
இலங்கைசெய்திகள்

நான் கூறியதை கேட்டிருந்தால் வெற்றி – ரணில் விக்ரமசிங்க

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து சபைகளில் கூட்டணியாக போட்டியிட்டிருந்தால் ஐம்பது முதல் நூறு எண்ணிக்கையிலான இடங்களை வென்றிருக்க முடியும்...

12 7
இலங்கைசெய்திகள்

பல்கலைகளில் தொடரும் அடாவடித்தனம் : ஆறு மாணவர்கள் அதிரடியாக கைது

சக மாணவர் ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலையை (University of Sri Jayewardenepura)...