உலகம்செய்திகள்

தமிழ்நாட்டின் பெண் கோடீஸ்வரர்… மொத்த சொத்து மதிப்பு 32,800 கோடி

Share

தமிழ்நாட்டின் பெண் கோடீஸ்வரர்… மொத்த சொத்து மதிப்பு 32,800 கோடி

மென்பொருள் மற்றும் சேவைகள் துறையில் உலகிலேயே இரண்டாவது பெரிய கோடீஸ்வரராக அறியப்படும் ராதா வேம்பு, மென்பொருள் நிறுவனமான Zoho-வின் இணை நிறுவனர் ஆவார்.

தமிழகத்தில் பெண் கோடீஸ்வரர்களில் முதலிடத்தில் இருக்கும் ராதா வேம்பு Zoho நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் இணை நிறுவனரான ஸ்ரீதர் வேம்புவின் சகோதரி ஆவார்.

Zoho நிறுவனத்தின் தற்போதைய சொத்து மதிப்பு 19,000 கோடி என்றே கூறப்படுகிறது. இதனால் மென்பொருள் மற்றும் சேவைகள் துறையில் உலகிலேயே இரண்டாவது பெரிய கோடீஸ்வரராக ராதா வேம்பு அறியப்படுகிறார்.

Zoho நிறுவனத்தில் ஸ்ரீதர் வேம்புவின் பங்கு வெறும் 5 சதவீதம் என்றே கூறப்படுகிறது. ஆனால் ராதா வேம்பு 47.8 சதவீத பங்கினை கொண்டுள்ளார். 2022ல் மட்டும் Zoho நிறுவனத்தின் வருவாய் என்பது 2,700 கோடி என்றே கூறப்படுகிறது.

சென்னையில் பிறந்த ராதா வேம்பு, ஐஐடி மெட்ராஸில் தொழில்துறை நிர்வாகத்தில் பட்டப்படிப்பை முடித்துள்ளார். 1996ல் தமது உயர் கல்வியை தொடரும் போது தமது சகோதரர் ஸ்ரீதர் வேம்பு உடன் இணைந்து AdvenNet என்ற மென்பொருள் மற்றும் சேவைகள் நிறுவனத்தை நிறுவியுள்ளார்.

இந்த நிறுவனமே பின்னர் Zoho கார்ப்பரேஷன் என பெயர் மாற்றம் பெற்றது. 2023ல் வெளியான தரவுகளின் அடிப்படையில் ராதா வேம்புவின் மொத்த சொத்து மதிப்பு 32,800 கோடி என்றே தெரியவந்துள்ளது

Share
தொடர்புடையது
Untitled 1 2
சினிமாசெய்திகள்

ஜனநாயகன் கடைசி படம் இல்லையா? விஜய் பதிலால் குஷியில் ரசிகர்கள்

இன்று நடிகர் விஜய்யின் பிறந்தநாள் என்பதால் அதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அவர் ஏற்கனவே அரசியல்...

Untitled 1 1
சினிமாசெய்திகள்

விஜய்க்காக த்ரிஷா போட்ட பதிவு.. வைரலாகும் போட்டோவை பாருங்க

நடிகர் விஜய்க்கு இன்று பிறந்தநாள் என்பதால் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்....

19 1
உலகம்செய்திகள்

டொனால்ட் ட்ரம்பின் நீண்ட கால திட்டம்! குறி வைக்கப்பட்டுள்ள ஈரானின் முக்கிய இடங்கள்

ஒன்று அமைதி, இல்லாவிட்டால் ஈரானுக்கு அழிவு. ஈரானில் இன்னும் பல முக்கிய இடங்களை குறி வைத்துள்ளோம்...

18 2
இலங்கைசெய்திகள்

நாடாளுமன்ற ஊழியர்களுக்கான உணவு கட்டணத்தில் மேற்கொள்ளப்படும் திருத்தம்

நாடாளுமன்ற ஊழியர்களுக்கு விதிக்கப்படும் உணவு கட்டணங்களை திருத்தியமைக்க நாடாளுமன்ற குழு தீர்மானித்துள்ளது. நாடாளுமன்ற குழு கூடியபோது...