உலகம்செய்திகள்

தமிழ்நாட்டின் பெண் கோடீஸ்வரர்… மொத்த சொத்து மதிப்பு 32,800 கோடி

Share

தமிழ்நாட்டின் பெண் கோடீஸ்வரர்… மொத்த சொத்து மதிப்பு 32,800 கோடி

மென்பொருள் மற்றும் சேவைகள் துறையில் உலகிலேயே இரண்டாவது பெரிய கோடீஸ்வரராக அறியப்படும் ராதா வேம்பு, மென்பொருள் நிறுவனமான Zoho-வின் இணை நிறுவனர் ஆவார்.

தமிழகத்தில் பெண் கோடீஸ்வரர்களில் முதலிடத்தில் இருக்கும் ராதா வேம்பு Zoho நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் இணை நிறுவனரான ஸ்ரீதர் வேம்புவின் சகோதரி ஆவார்.

Zoho நிறுவனத்தின் தற்போதைய சொத்து மதிப்பு 19,000 கோடி என்றே கூறப்படுகிறது. இதனால் மென்பொருள் மற்றும் சேவைகள் துறையில் உலகிலேயே இரண்டாவது பெரிய கோடீஸ்வரராக ராதா வேம்பு அறியப்படுகிறார்.

Zoho நிறுவனத்தில் ஸ்ரீதர் வேம்புவின் பங்கு வெறும் 5 சதவீதம் என்றே கூறப்படுகிறது. ஆனால் ராதா வேம்பு 47.8 சதவீத பங்கினை கொண்டுள்ளார். 2022ல் மட்டும் Zoho நிறுவனத்தின் வருவாய் என்பது 2,700 கோடி என்றே கூறப்படுகிறது.

சென்னையில் பிறந்த ராதா வேம்பு, ஐஐடி மெட்ராஸில் தொழில்துறை நிர்வாகத்தில் பட்டப்படிப்பை முடித்துள்ளார். 1996ல் தமது உயர் கல்வியை தொடரும் போது தமது சகோதரர் ஸ்ரீதர் வேம்பு உடன் இணைந்து AdvenNet என்ற மென்பொருள் மற்றும் சேவைகள் நிறுவனத்தை நிறுவியுள்ளார்.

இந்த நிறுவனமே பின்னர் Zoho கார்ப்பரேஷன் என பெயர் மாற்றம் பெற்றது. 2023ல் வெளியான தரவுகளின் அடிப்படையில் ராதா வேம்புவின் மொத்த சொத்து மதிப்பு 32,800 கோடி என்றே தெரியவந்துள்ளது

Share
தொடர்புடையது
25 68f495a7c6b1e
செய்திகள்இலங்கை

அரச கிளவுட் செயலிழப்பு: பல அரச இணைய சேவைகள் பாதிப்பு!

இலங்கை அரச கிளவுட் (Lanka Government Cloud – LGC) சேவையில் ஏற்பட்ட தொழில்நுட்பச் செயலிழப்பு...

IMG 20241217 095933 800 x 533 pixel
செய்திகள்இலங்கை

தேசிய மக்கள் சக்தி சார்பில் சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம்

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை முன்வைப்பதற்கான...

AP20222207925030
செய்திகள்இலங்கை

“மக்களுடனான பிணைப்பே ஆரோக்கியத்தின் ஆதாரம்” – முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச

தங்காலை, கால்டன் இல்லத்தில் இருந்தவாறு தனது அதிகாரப்பூர்வ சமூக ஊடகப் பக்கத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த...

BIA 692136
இலங்கைசெய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் புதிய வசதி அறிமுகம் – பயணிகளுக்கு கிடைத்துள்ள நன்மை

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இலங்கை கடவுச்சீட்டு வைத்திருப்பவர்களுக்காக புதிய வசதி அறிமுகப்படுத்தப்படவுள்ளது. அதற்கமைய, பிரத்தியேகமாக தானியங்கி...