rtjy 10 scaled
உலகம்செய்திகள்

சீனாவின் கப்பல்கள், போர் விமானங்கள் அழித்து ஒழிக்கப்படும்: தைவான்

Share

தங்கள் நாட்டின் சர்வதேச எல்லைப் பிராந்தியத்திற்குள் வரும் சீன விமானங்கள் மற்றும் கப்பல்கள் அழிக்கப்படும் என தைவான் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஒருப்பக்கம் உக்ரைன் ரஷ்யா இடையிலான போர், மற்றொரு பக்கம் தைவான் மற்றும் சீனா இடையிலான பதற்றம் என உலக அமைதியில் ஸ்திரத்தன்மையற்ற நிலை நிலவி வருகிறது.

தீவு நாடான தைவானை சீனா தங்கள் நாட்டின் ஒற்றை அங்கமாக அறிவித்து வருகிறது, இதற்கு தைவான் குடியரசு முழு எதிர்ப்பு தெரிவித்து வருவதோடு தங்களை சுதந்திர நாடாக அறிவித்து வருகிறது.

ஆனால் தைவானின் இந்த நிலைப்பாட்டை எதிர்த்து சர்வதேச தைவான் கடல் ஜலசந்தியில் சீனா தங்களது போர் கப்பல்கள் மற்றும் போர் விமானங்களை அத்துமீறி நுழைய செய்வதோடு பிரமாண்ட போர் ஒத்திகை பயிற்சியையும் அவ்வப்போது நடத்தி வருகிறது.

இதனால் இந்த இருநாடுகளுக்கும் இடையே எப்போது வேண்டும் என்றாலும் போர் வெடிக்கலாம் என்ற பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.

இந்நிலையில் தீவு நாடான தைவானுக்கு அருகில் உள்ள 12-மைல் மண்டலம் என அழைக்கப்படும் பகுதிக்குள் நுழையும் சீனாவின் போர் விமானங்கள் மற்றும் போர் கப்பல்களை தைவான் ஆயுதப்படை அழித்து ஒழிக்கும் என தைவான் பாதுகாப்பு துறையின் செய்தித் தொடர்பாளர் மேஜர் ஜெனரல் லின் வென்ஹுவாங் எச்சரித்துள்ளார்.

இந்த 12-மைல் மண்டலம் என்பது தைவானுக்கு சொந்தமான நீர் மற்றும் வான்பரப்பை உள்ளடக்கிய பகுதியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Share

1 Comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 53
செய்திகள்உலகம்

மத்திய கிழக்கு போர்நிறுத்தம்: ஜெருசலேமின் புனிதத் தலங்கள் மீண்டும் திறப்பு!

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள தற்காலிக போர்நிறுத்தத்தைத் தொடர்ந்து, ஜெருசலேமில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க புனிதத் தலங்கள்...

world 52
செய்திகள்இலங்கை

பெண் எம்.பி.க்களை இழிவுபடுத்துவோர் மீது நடவடிக்கை தேவை: சபாநாயகர் மீது சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க குற்றச்சாட்டு!

நாடாளுமன்றில் பெண் பாராளுமன்ற உறுப்பினர்களைக் குறிவைத்து, கௌரவத்திற்கு ஒவ்வாத மற்றும் அவதூறான மொழியைப் பயன்படுத்தும் எதிர்க்கட்சி...

world 51
செய்திகள்இந்தியா

இந்தியாவில் 24 நாட்களுக்குத் தேவையான நிலக்கரி கையிருப்பு: அரசு அதிகாரி தகவல்!

இந்தியாவின் சுரங்கங்கள் மற்றும் மின் உற்பத்தி நிலையங்களில், தொடர்ந்து 24 நாட்களுக்கு மின்சாரம் உற்பத்தி செய்வதற்குத்...

world 50
செய்திகள்உலகம்

ஈரான் உடன்படிக்கையை மீறினால் கடும் இராணுவ நடவடிக்கை: ‘ட்ரூத் சோஷியல்’ தளத்தில் டிரம்ப் எச்சரிக்கை!

அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே எட்டப்பட்டுள்ள உடன்படிக்கையைத் தெஹ்ரான் முழுமையாகக் கடைப்பிடிக்கும் வரை, அமெரிக்கப் படைகள் ஈரானைச்...