4 2 scaled
உலகம்செய்திகள்

இஸ்ரேல் பாலஸ்தீனத்தில் 11 மனித உரிமை அமைப்புகளுக்கு நிதி உதவி நிறுத்தம்: சுவிட்சர்லாந்து முடிவு

Share

இஸ்ரேல் பாலஸ்தீனத்தில் 11 மனித உரிமை அமைப்புகளுக்கு நிதி உதவி நிறுத்தம்: சுவிட்சர்லாந்து முடிவு

இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்தில் உள்ள, பெண்கள் மனித உரிமைகள் அமைப்பு உள்ளிட்ட 11 மனித உரிமை அமைப்புகளுக்கான நிதியுதவியை நிறுத்த, சுவிஸ் பெடரல் வெளியுறவுத்துறை முடிவு செய்துள்ளது.

சுவிஸ் அரசாங்கம், நிதி வழங்கல் தொடர்பில், புதிய, ஆழமான பகுப்பாய்வு ஒன்றை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளதாகவும், திட்டங்களை மதிப்பிட உள்ளதாகவும் விளக்கமளித்துள்ளது.

காசாவில் 2.2 மில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கு, உணவு, தண்ணீர், மின்சாரம், எரிபொருள் மற்றும் மருந்துகள் வழங்கலை இஸ்ரேல் துண்டித்ததால், அது சர்வதேச மனிதநேய சட்டத்தின் கீழ் ஒரு போர்க்குற்றம் என்று கூறி, இந்த மாத துவக்கத்தில், ஐரோப்பிய அரசாங்கங்கள் 150 மில்லியன் டொலருக்கும் அதிகமான நிதி உதவியை நிறுத்தின.

தற்போது, சுவிட்சர்லாந்தும், இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்தில் உள்ள 11 மனித உரிமை அமைப்புகளுக்கான நிதியுதவியை நிறுத்த, முடிவு செய்துள்ளது.

அக்டோபர் 7 அன்று ஹமாஸ் ஆயுதக்குழு இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து, சுமார் 1,400 பேர் கொல்லப்பட்டனர், சுமார் 230 பேர் பிணைக் கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்டனர்,

அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், இஸ்ரேல் ராணுவம் காசாவில் ஆயிரக்கணக்கான வான்வழித் தாக்குதல்களை நடத்தியது, காசாவில் உள்ள வீடுகளில் கிட்டத்தட்ட பாதி இந்த தாக்குதலில் அழிக்கப்பட்டன அல்லது சேதப்படுத்தப்பட்டன.

காசா அதிகாரிகளின் கூற்றுப்படி, அக்டோபர் 7 முதல், 3,500க்கும் மேற்பட்ட குழந்தைகள் உட்பட 8,500க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். நிதியுதவி இடைநிறுத்தப்பட்டுள்ள பல அமைப்புகளின் தாயகமான மேற்குக் கரையில், கொல்லப்பட்ட அல்லது தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருப்பவர்களின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது.

மனித உரிமைகள் பாதுகாவலர்களைப் பாதுகாப்பதற்கான சுவிஸ் வழிகாட்டுதல்கள், மனித உரிமைகள் பாதுகாவலர்களுக்கான ஐரோப்பிய ஒன்றிய வழிகாட்டுதல்கள் மற்றும் ஐரோப்பாவில் பாதுகாப்புக்கும் ஒத்துழைப்புக்குமான அமைப்பின் மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கான வழிகாட்டுதல்கள் ஆகியவற்றின் பாதுகாவலர்களுடன் நிற்பதற்கு சுவிட்சர்லாந்து உறுதிபூண்டுள்ளது.

ஆனால், தற்போது இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்தில் உள்ள, பெண்கள் மனித உரிமைகள் அமைப்பு உள்ளிட்ட 11 மனித உரிமை அமைப்புகளுக்கான நிதியுதவியை நிறுத்த, சுவிஸ் பெடரல் வெளியுறவுத்துறை முடிவு செய்துள்ளது.

சுவிட்சர்லாந்து நிதி உதவியை நிறுத்துவதாக தற்போது எடுத்துள்ள இந்த முடிவு, மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கான வழிகாட்டுதல்களின் பாதுகாவலர்களுடன் நிற்பதாக எடுத்த உறுதிப்பாட்டை கைக்கொள்வதை கடினமாக்கியுள்ளது.

இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன மனித உரிமை பாதுகாவலர்களின் பணி முன்னெப்போதையும் விட தற்போது மிகவும் முக்கியமானதாக ஆகியுள்ள நிலையில் சுவிட்சர்லாந்து இப்படி ஒரு முடிவு எடுத்துள்ளது, அவர்களைத் திணறடிப்பதாக அமையும். ஆகவே, மீளாய்வை மேற்கொள்ளும் அதே நேரத்தில், சுவிட்சர்லாந்து இந்த மனித உரிமைப் பாதுகாவலர்களுக்கான நிதியுதவியையும் நிறுத்தாமல் தொடரவேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Share
தொடர்புடையது
30 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ரியாத் மற்றும் டுபாய்க்கான விமான சேவைகளை மீண்டும் ஆரம்பிக்கிறது ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்!

மத்திய கிழக்கில் நிலவும் மோதல் நிலைமைகளுக்கு மத்தியில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த ரியாத் மற்றும் டுபாய்க்கான தினசரி...

29 2
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

சர்வதேச பொருளாதார சவால்களை எதிர்கொள்ள இலங்கை தயார்: மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க நம்பிக்கை

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு...

23 4
செய்திகள்இலங்கை

தமிழக சட்டமன்ற தேர்தல்: தவெக-அதிமுக கூட்டணி குறித்து வெளியாகும் பரபரப்பு தகவல்கள்

தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, நடிகர் விஜய்யின்...

22 7
செய்திகள்அரசியல்இலங்கை

முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் அடிப்படை உரிமை மனு: விசாரணை வரும் 13-ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது...