5 25 scaled
உலகம்செய்திகள்

புலம்பெயர்தலை நிறுத்துங்கள் என்று சுவிஸ் மக்கள் சொல்லும் நிலை உருவாகலாம்

Share

புலம்பெயர்தலை நிறுத்துங்கள் என்று சுவிஸ் மக்கள் சொல்லும் நிலை உருவாகலாம்

புலம்பெயர்தலை நிறுத்துங்கள் என்று சுவிஸ் மக்கள் சொல்லும் ஒரு நிலை உருவாகலாம் என சுவிஸ் முன்னாள் ஜனாதிபதி ஒருவர் கூறியுள்ளார்.

சமீபத்தில் ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்த சுவிஸ் முன்னாள் ஜனாதிபதியும், ஆளும் சுவிஸ் பெடரல் கவுன்சில் உறுப்பினருமான Guy Parmelin, புலம்பெயர்தலை நிறுத்துங்கள் என்று சுவிஸ் மக்கள் சொல்லும் ஒரு நிலை உருவாகலாம் என்று கூறியுள்ளார்.

கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை என்றொரு பழமொழி உண்டு. அதுபோல, உலக நாடுகள் பல திறன்மிகுப் பணியாளர் தட்டுப்பாட்டால் அவதியுற்று வருகின்றன. அதே நேரத்தில், புலம்பெயர்வோர் தங்கள் நாடுகளுக்கு வருவதை அவை ஏற்க மறுக்கின்றன.

சுவிட்சர்லாந்திலும் அந்த நிலை காணப்படுகிறது. பல துறைகளுக்கு திறன்மிகுப் பணியாளர்கள் தேவைப்படுகிறார்கள். ஆனால், புலம்பெயர்தலை மக்கள் எதிர்க்கிறார்கள்.

சுவிஸ் மக்களின் பிரதிநிதியாக, அவர்களுடைய எண்ணங்களைத்தான் தற்போது வெளிப்படுத்தியுள்ளார் Guy Parmelin.

இப்படியே புலம்பெயர்தல் தொடரமுடியாது என்று கூறியுள்ள அவர், சுவிட்சர்லாந்தில் வீடுகள் பற்றாக்குறைக்கு பாதிக்குப் பாதி புலம்பெயர்ந்தோர்தான் காரணம் என்கிறார்.

புலம்பெயர்தல், திறன்மிகுப் பணியாளர்கள் தட்டுப்பாட்டை தீர்க்க உதவுகிறது. ஆனால், இப்படியே தொடரமுடியுமா என்பதில் எனக்கு சந்தேகம் உள்ளது என்று கூறும் Guy Parmelin, ஒரு கட்டத்தில் சுவிஸ் மக்கள், புலம்பெயர்தல் போதும் என கூறுவார்கள் என தன்னால் உறுதியாகக் கூறமுடியும் என்கிறார்.

Share
தொடர்புடையது
world 34
செய்திகள்இந்தியா

சாத்தான்குளம் வழக்கு: 9 காவல்துறை அதிகாரிகளுக்கு மரண தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு!

இந்தியாவையே உலுக்கிய தமிழ்நாட்டின் சாத்தான்குளம் தந்தை-மகன் மரண வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட 9 காவல்துறை அதிகாரிகளுக்கும்...

world 33
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையின் கையிருப்பு சொத்துக்கள் மார்ச் மாதத்தில் வீழ்ச்சி: மத்திய வங்கி வெளியிட்ட புதிய அறிக்கை!

நாட்டின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்களின் அளவு 2026 மார்ச் மாத இறுதியில் 3.5 சதவீதம் வரை...

world 32
செய்திகள்இலங்கை

மத்திய கிழக்கில் அமைதி நிலவ வேண்டும்: ஜனாதிபதி அநுரகுமார வலியுறுத்தல்!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றங்கள் தணிந்து விரைவில் அமைதி நிலைநாட்டப்பட வேண்டும் என்பதே...

world 31
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஆற்றில் பெண் ஒருவரின் சடலம் மீட்பு: அடையாளம் காண்பதில் சிக்கல்!

நோர்வூட் பகுதியில் பாயும் கெசல்கமுவ ஆற்றில் அடையாளம் தெரியாத பெண் ஒருவரின் சடலம் இன்று (ஏப்ரல்...