1 1 9 scaled
உலகம்செய்திகள்

ஹமாஸ் படைகளை தடை செய்ய முன்மொழிந்த சுவிஸ் அரசாங்கம்: விரிவான தகவல்

Share

ஹமாஸ் படைகளை தடை செய்ய முன்மொழிந்த சுவிஸ் அரசாங்கம்: விரிவான தகவல்

சுவிட்சர்லாந்திற்குள் ஹமாஸ் நடவடிக்கைகள் அல்லது பாலஸ்தீனிய போராளிக் குழுவிற்கு ஆதரவை வெளிப்படையாகத் தடை செய்யும் சட்ட வரைவை பிப்ரவரி இறுதிக்குள் கொண்டு வரப் போவதாக சுவிஸ் அரசாங்கம் புதன்கிழமை அறிவித்தது.

இது தொடர்பில் சுவிஸ் அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அக்டோபர் 7 முதல் மத்திய கிழக்கில் நிலவும் சூழ்நிலைக்கு இது மிகவும் பொருத்தமான பதில் என்றும், ஹமாஸ் படைகளை தடை செய்யும் பெடரல் சட்டத்தை உருவாக்க பெடரல் கவுன்சில் முடிவு செய்துள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளது.

சுவிட்சர்லாந்தில் ஹமாஸ் படைகளின் நடவடிக்கை அல்லது அந்த அமைப்புக்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை கட்டுப்படுத்த இந்த சட்டம் பயன்படும்.

ஹமாஸ் படைகள் அக்டோபர் 7ம் திகதி முன்னெடுத்த கொடூரத்தாக்குதலில் இஸ்ரேலிய மக்கள் 1,200 பேர்கள் கொல்லப்பட்டனர். அத்துடன் 240 பேர்கள் பணயக்கைதிகளாகவும் சிறைபிடிக்கப்பட்டனர்.

இதனையடுத்து இஸ்ரேல் முன்னெடுத்த கண்மூடித்தனமான தாக்குதலில் கொல்லப்பட்ட பாலஸ்தீன மக்களின் எண்ணிக்கை 14,128 என்றும் இதில் சிறார்கள் எண்ணிக்கை 4,000 கடந்துள்ளது என்றும் அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளனர்.

ஹமாஸ் படைகளுக்கு எதிரான சட்டத்தை உருவாக்க சுவிஸ் அரசாங்கம் 7 உறுப்பினர்கள் கொண்ட குழுவை உருவாக்கியுள்ளது. மேலும் சர்வதேச மனித உரிமைகள் சட்டத்தை மதிப்பதாகவும் குறிப்பாக அப்பாவி மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதை ஆதரிப்பதாகவும் சுவிஸ் அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.

மட்டுமின்றி, இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதலை மிகவும் தீவிரமாக கண்டிப்பதுடன் ஆயிரக்கணக்கான அப்பவி மக்கள் கொல்லப்பட்டுள்ளதற்கு ஆழ்ந்த வருத்தமும் தெரிவித்துள்ளது.

மேலும் தனது சொந்த பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான இஸ்ரேலின் உரிமையை சுவிட்சர்லாந்து அங்கீகரிக்கிறது என்றும் தெரிவித்துள்ளது.

Share
தொடர்புடையது
images 23
செய்திகள்இலங்கை

கொட்டாஞ்சேனைக் கொலைச் சம்பவம்: ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் துப்பாக்கிதாரி கைது – 72 மணி நேர தடுப்புக் காவலில் விசாரணை!

கொட்டாஞ்சேனைப் பிரதேசத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தி நபரொருவரைக் கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய துப்பாக்கிதாரி, ‘ஐஸ்’...

image 17
இலங்கைசெய்திகள்

வெளிநாட்டவர்களுக்கான சாரதி அனுமதிப்பத்திரக் கட்டணங்கள் அதிரடி உயர்வு: வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு!

வெளிநாட்டவர்களுக்கான சாரதி அனுமதிப்பத்திரம் (Driving License) வழங்குவதற்கான கட்டணங்களைத் திருத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. போக்குவரத்து,...

MediaFile 14
செய்திகள்இலங்கை

சபாநாயகர் தலைமையில் பாராளுமன்ற நடவடிக்கைகள் தற்போது ஆரம்பம்

சபாநாயகர் தலைமையில் பாராளுமன்ற நடவடிக்கைகள் தற்போது ஆரம்பமாகியுள்ளன. இன்றைய பாராளுமன்ற நடவடிக்கைகள், மு.ப. 09.00 –...

20250719 124156
செய்திகள்இலங்கை

இந்திய முதலீட்டாளர்களுக்கு இலங்கை அழைப்பு: சுற்றுலா மற்றும் திரைப்படத் திட்டங்களில் ஒத்துழைக்க விஜித ஹேரத் வலியுறுத்தல்!

நாட்டில் புதிய சுற்றுலா முயற்சிகள் மற்றும் திரைப்படத் திட்டங்களை ஆராய்வதற்காக இந்திய முதலீட்டாளர்கள் மற்றும் திரைப்படத்...