சுவிஸ் ராணுவ சேவையை புறக்கணிக்க அழைப்பு விடுத்த இளைஞர்களை விடுவித்த உச்ச நீதிமன்றம்!
உலகம்செய்திகள்

சுவிஸ் ராணுவ சேவையை புறக்கணிக்க அழைப்பு விடுத்த இளைஞர்களை விடுவித்த உச்ச நீதிமன்றம்!

Share

சுவிஸ் ராணுவ சேவையை புறக்கணிக்க அழைப்பு விடுத்த இளைஞர்களை விடுவித்த உச்ச நீதிமன்றம்!

ராணுவ சேவையை புறக்கணிக்க அழைப்பு விடுத்த சமூக ஆர்வலர்களை உச்ச நீதிமன்றம் விடுவித்துள்ள ஆச்சரிய சம்பவம் ஒன்று சுவிட்சர்லாந்தில் நிகழ்ந்துள்ளது.

ராணுவ சேவையை புறக்கணிக்க அழைப்பு விடுத்ததற்காக அபராதம்
2020ஆம் ஆண்டு, இளைஞர்களான மூன்று சமூக ஆர்வலர்கள், ராணுவ சேவையை புறக்கணிக்குமாறும், கட்டாய ராணுவ சேவை செய்யாத இளைஞர்களுக்கு விதிக்கப்படும் கூடுதல் வரியையும் புறக்கணிக்குமாறும் அழைப்பு விடுத்தார்கள்.

அவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டு, அவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

ஆனால், ஜூலை, அதாவது கடந்த மாதம் 27ஆம் திகதி, உச்ச நீதிமன்றம், அந்த இளைஞர்களை விடுவிப்பதாக தெரிவித்துள்ளதுடன், அவர்கள் செலவிட்ட தொகையை ஃபெடரல் அரசு திருப்பிக் கொடுக்கவேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.

அவர்களுடைய செயல்கள் சட்டத்துக்கு விரோதமானவை என்றும், கோவிட் காலகட்டத்தில் ராணுவம் மக்களைக் காக்கும் முக்கிய பணியில் ஈடுபட்டிருந்த நேரத்தில், நாட்டின் பாதுகாப்பை அபாயத்துக்குள்ளாக்கும் விதத்தில் அவர்களுடைய நடவடிக்கைகள் அமைந்திருந்ததாகவும் அவர்கள் மீது முன்பு குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

ஆனால், உச்ச நீதிமன்ற தீர்ப்பாணைய நீதிபதியோ, முந்தைய தீர்ப்பு, மக்களுக்கு தங்கள் கருத்தை வெளிப்படுத்தும் உரிமையை அளிக்கும் அரசியல் சாசன உரிமைக்கு முரணானது என்று கூறி அவர்களை விடுவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Share

1 Comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...