13 15
உலகம்செய்திகள்

நாட்டை விட்டு வெளியேற பணம் தரும் ஐரோப்பிய நாடு!

Share

நாட்டை விட்டு வெளியேற பணம் தரும் ஐரோப்பிய நாடு!

ஸ்வீடன் (Sweden) தனது சொந்த குடிமக்களுக்கு நாட்டை விட்டு வெளியேற பணம் செலுத்துகிறது.

ஸ்வீடன் குடிவரவு அமைச்சர் மரியா மல்மர் ஸ்டான்கார்ட் (Maria Malmer Stenergard) இந்த முன்மொழிவை முன்வைத்துள்ளதை தொடர்ந்து தனது சொந்த குடிமக்களை நாட்டை விட்டு வெளியேற்ற ஸ்வீடன் முன்வந்துள்ளது.

அதாவது, ஸ்வீடன் கலாச்சாரத்தை விரும்பாதவர்கள் அல்லது இங்கு ஒன்றிணைந்து இருக்க முடியாதவர்கள் ஸ்வீடனை விட்டு வெளியேறலாம்” என குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ஸ்வீடன் நாட்டை விட்டு வெளியேறுவதற்கு பணமும் செலுத்துகிறது என ஐரோப்பிய வலைத்தளமொன்றும் குறிப்பிட்டுள்ளது.

முன்னதாக, இந்த விதி வெளிநாட்டிலிருந்து வந்து ஸ்வீடனில் குடியேறும் குடிமக்களுக்கு மட்டுமே பொருந்தும். ஆனால் புதிய ஏற்பாட்டின் கீழ், இந்த விதி நாட்டில் பிறந்த குடிமக்களுக்கும் பொருந்தும்.

இந்த புதிய விதிகளின்படி, ஸ்வீடன் நாட்டை விட்டு வெளியேறும் ஒருவருக்கு 10,000 Swedish crowns ( இலங்கை பணமதிப்பில் ரூ .285,500)பணமாக கொடுக்கப்படுகின்றது.

குழந்தைகள் நாட்டை விட்டு வெளியேறினால் அதில் பாதி (5000 Swedish crowns) கிடைக்கும். இது தவிர, அவர்களது பயண செலவுக்கும் பணம் தரப்படும். அவர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதற்கு முன்பு இந்த பணத்தை ஒரே நேரத்தில் பெறலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
1769359891 pak navy
செய்திகள்இலங்கை

நடுக்கடலில் தத்தளித்த இலங்கையர்: 1,500 மைல் தொலைவில் மனிதாபிமானத்துடன் மீட்டது பாகிஸ்தான் கடற்படை!

பாகிஸ்தான் கடற்கரையிலிருந்து சுமார் 1,500 கடல் மைல் தொலைவில் உள்ள ஆழ்கடல் பகுதியில், கடும் உடல்...

Beijing Capital Airlines A330
செய்திகள்இலங்கை

இலங்கை – சீனா இடையே புதிய வான்வழித் தொடர்பு: பெய்ஜிங் கெபிடல் எயார்லைன்ஸ் விமானம் கட்டுநாயக்க வருகை!

இலங்கை மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளுக்கும் இடையிலான வான்வழித் தொடர்புகளை மேலும் வலுப்படுத்தும் வகையில்,...

9c76037bfb42191521634b808e1834c1
உலகம்செய்திகள்

அமெரிக்காவில் அதிரடி: 30 இலட்சம் பக்கங்கள், 2,000 காணொளிகள் – எப்ஸ்டீன் கோப்புகளை வெளியிட்டது நீதித்துறை!

அமெரிக்காவின் பிரபல நிதி ஆலோசகரும், பாலியல் குற்றவாளியுமான மறைந்த ஜெப்ரி எப்ஸ்டீன் (Jeffrey Epstein) தொடர்பான...

MediaFile 1 9
செய்திகள்இலங்கை

டித்வா புயல் பாதிப்பு: மீளமைப்புப் பணிகளுக்காக மேலும் 10 பெய்லி பாலங்களை வழங்கியது இந்தியா!

டித்வா புயலினால் ஏற்பட்ட அனர்த்தங்களினால் சேதமடைந்த போக்குவரத்து உட்கட்டமைப்புகளைச் சீரமைக்கும் நோக்கில், இந்தியா மேலும் 10...