rtjy 76 scaled
இலங்கைஉலகம்செய்திகள்

காஸாவில் போர் நிறுத்தத்திற்கு ஆதரவு தெரிவித்த இலங்கை

Share

காஸாவில் போர் நிறுத்தத்திற்கு ஆதரவு தெரிவித்த இலங்கை

பாலஸ்தீனப் பிரதேசமான காஸாவில் உடனடி போர் நிறுத்தத்தை அறிவிக்க வேண்டும் என்ற ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புச் சபையின் யோசனைக்கு 97 நாடுகளுடன் சேர்ந்து இலங்கையும் வாக்களித்துள்ளது.

குறித்த யோசனைக்கு பாதுகாப்பு சபையின் 15 உறுப்பினர்களில் 13 பேர் தீர்மானத்திற்கு வாக்களித்த போதிலும் அமெரிக்கா அந்த யோசனையை வீட்டோ செய்துள்ளது.

பிரான்ஸ், ரஸ்யா மற்றும் சீனா ஆகிய இரண்டு நிரந்தர உறுப்பினர்களுடன் உடனடி போர் நிறுத்தத்திற்கு வாக்களித்ததோடு ஐக்கிய இராச்சியம் வாக்களிக்கவில்லை என கூறப்படுகிறது.

முன்னதாக ஐக்கிய நாடுகளின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ், ஐக்கிய நாடுகள் சாசனத்தின் அரிதாகப் பயன்படுத்தப்படும் பிரிவு 99 ஐப் உபயோகப்படுத்தினார்.

இதன்படி, காஸாவில் மனிதாபிமான அமைப்பின் சரிவு மற்றும் “மனிதாபிமான பேரழிவை” தடுக்க பாதுகாப்பு சபையின் அவசரக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்து, காஸா பகுதியில் உடனடியாக போர் நிறுத்தத்திற்கு அவர் அழைப்பு விடுத்தார்.

ஐக்கிய அரபு இராச்சியத்தின் அனுசரணையுடன் பாதுகாப்புச் சபையில் விவாதிக்கப்பட்ட தீர்மானத்திற்கு இலங்கை உட்பட 97 க்கும் மேற்பட்ட நாடுகள் இணை அனுசரணை வழங்கியுள்ளன.

இந்நிலையில் பாலஸ்தீன ஹமாஸ் குழுவிற்கு எதிரான இஸ்ரேலின் இராணுவத் தாக்குதலில் இதுவரை 17,500 பேர் உயிரிழந்துள்ளனர் பெரும்பாலும் பெண்கள் மற்றும் குழந்தைகள் என்று பல்லாயிரக்கணக்கானோர் காயமடைந்தனர்.

மேலும், இந்த தீர்மானத்தில் கையெழுத்திட்ட நாடுகளில் பெல்ஜியம், ஸ்லோவேனியா, ஸ்பெயின், பின்லாந்து, அயர்லாந்து, ஐஸ்லாந்து, நோர்வே, போலந்து மற்றும் போர்த்துக்கல் போன்ற பல ஐரோப்பிய நாடுகள் அடங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share

Recent Posts

தொடர்புடையது
GGw2UsoWoAAu19A scaled 1
செய்திகள்அரசியல்இலங்கை

மொட்டு கட்சியில் இருந்து விலகினார் சோமரதன தேரர்! – திஸ்ஸகுட்டி ஆராச்சியின் போக்கிற்கு எதிர்ப்பு!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அநுராதபுர மாவட்டத் தலைவர் திஸ்ஸகுட்டி ஆராச்சியின் தன்னிச்சையான செயற்பாடுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து,...

images 15
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலவச விசா வழங்குவதில் சட்டத் தடை! – தனியார் நிறுவன ‘விசா டீல்’ வழக்கால் முட்டுக்கட்டை என ருவான் ரணசிங்க தகவல்!

இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளுக்கு இலவச விசா வழங்கும் திட்டத்தைச் செயல்படுத்துவதில் பாரிய சட்டச்...

1996569 stone quarry
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பண்டாரவளையில் அதிர்ச்சி: வெடிவைத்தபோது பாறைகள் சரிந்து விபத்து! – இடிபாடுகளுக்குள் சிக்கிய இருவரை மீட்கப் போராட்டம்!

பண்டாரவளை – மாபிட்டிய பகுதியில் அமைந்துள்ள கல் உடைக்கும் குவாரி ஒன்றில் இன்று காலை இடம்பெற்ற...

MediaFile 1 1
செய்திகள்உலகம்

குற்றங்களுக்கு வயது தடையில்லை! – ஆர்ஜென்டீனாவில் சிறார் குற்றவாளிகளுக்கான வயது 14 ஆகக் குறைப்பு; புதிய சட்டம் நிறைவேற்றம்!

ஆர்ஜென்டீனாவில் சிறார் குற்றவாளிகளாகக் கருதப்படும் குறைந்தபட்ச வயது வரம்பை 16-லிருந்து 14 ஆகக் குறைக்கும் வரலாற்றுச்...