இலங்கைஉலகம்செய்திகள்

காஸாவில் போர் நிறுத்தத்திற்கு ஆதரவு தெரிவித்த இலங்கை

Share
rtjy 76 scaled
Share

காஸாவில் போர் நிறுத்தத்திற்கு ஆதரவு தெரிவித்த இலங்கை

பாலஸ்தீனப் பிரதேசமான காஸாவில் உடனடி போர் நிறுத்தத்தை அறிவிக்க வேண்டும் என்ற ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புச் சபையின் யோசனைக்கு 97 நாடுகளுடன் சேர்ந்து இலங்கையும் வாக்களித்துள்ளது.

குறித்த யோசனைக்கு பாதுகாப்பு சபையின் 15 உறுப்பினர்களில் 13 பேர் தீர்மானத்திற்கு வாக்களித்த போதிலும் அமெரிக்கா அந்த யோசனையை வீட்டோ செய்துள்ளது.

பிரான்ஸ், ரஸ்யா மற்றும் சீனா ஆகிய இரண்டு நிரந்தர உறுப்பினர்களுடன் உடனடி போர் நிறுத்தத்திற்கு வாக்களித்ததோடு ஐக்கிய இராச்சியம் வாக்களிக்கவில்லை என கூறப்படுகிறது.

முன்னதாக ஐக்கிய நாடுகளின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ், ஐக்கிய நாடுகள் சாசனத்தின் அரிதாகப் பயன்படுத்தப்படும் பிரிவு 99 ஐப் உபயோகப்படுத்தினார்.

இதன்படி, காஸாவில் மனிதாபிமான அமைப்பின் சரிவு மற்றும் “மனிதாபிமான பேரழிவை” தடுக்க பாதுகாப்பு சபையின் அவசரக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்து, காஸா பகுதியில் உடனடியாக போர் நிறுத்தத்திற்கு அவர் அழைப்பு விடுத்தார்.

ஐக்கிய அரபு இராச்சியத்தின் அனுசரணையுடன் பாதுகாப்புச் சபையில் விவாதிக்கப்பட்ட தீர்மானத்திற்கு இலங்கை உட்பட 97 க்கும் மேற்பட்ட நாடுகள் இணை அனுசரணை வழங்கியுள்ளன.

இந்நிலையில் பாலஸ்தீன ஹமாஸ் குழுவிற்கு எதிரான இஸ்ரேலின் இராணுவத் தாக்குதலில் இதுவரை 17,500 பேர் உயிரிழந்துள்ளனர் பெரும்பாலும் பெண்கள் மற்றும் குழந்தைகள் என்று பல்லாயிரக்கணக்கானோர் காயமடைந்தனர்.

மேலும், இந்த தீர்மானத்தில் கையெழுத்திட்ட நாடுகளில் பெல்ஜியம், ஸ்லோவேனியா, ஸ்பெயின், பின்லாந்து, அயர்லாந்து, ஐஸ்லாந்து, நோர்வே, போலந்து மற்றும் போர்த்துக்கல் போன்ற பல ஐரோப்பிய நாடுகள் அடங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share
Related Articles
23 3
உலகம்செய்திகள்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் மூன்றாவது முறையும் போட்டி.! ட்ரம்ப் அளித்த பதில்

அமெரிக்க(us) ஜனாதிபதியாக 3வது முறையாக போட்டியிடுவது குறித்துதான் தீவிரமாக யோசிக்கவில்லை என ஜனாதிபதி ட்ரம்ப்(donald trump)...

22 3
உலகம்செய்திகள்

மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தி மிரட்டும் பாகிஸ்தான்

இந்தியாவுடனான(india) பதற்றத்திற்கு மத்தியில், 2 நாட்களில் 2வது முறையாக ஏவுகணை சோதனை மேற்கொண்டதாக பாகிஸ்தான்(pakistan) தெரிவித்துள்ளது....

21 4
உலகம்செய்திகள்

53 ஆண்டுகள் கழித்து பூமியில் விழும் விண்கலம் : எப்போது தெரியுமா?

53 ஆண்டுகளுக்கு முன்பு விண்ணில் ஏவப்பட்டு தோல்வியடைந்த சோவியத் (Soviet Union) கால விண்கலம் விரைவில்...

25 2
இலங்கைசெய்திகள்

சட்டவிரோத வர்த்தகம் : இலங்கை எத்தனையாவது இடம் பிடித்துள்ளது தெரியுமா…!

சட்டவிரோத வர்த்தகத்தின் சவால்களை சமாளிக்க முடிந்த 158 நாடுகளை உள்ளடக்கிய சமீபத்திய தரவரிசைப்படி, டென்மார்க்(denmark) முதலிடத்திலும்,...