23 65545af0a43e0
உலகம்செய்திகள்

பதவிநீக்கம் செய்யப்பட்ட சுவெல்லா பிரித்தானிய பிரதமர் ரிஷி மீது கடும் தாக்குதல்

Share

பதவிநீக்கம் செய்யப்பட்ட சுவெல்லா பிரித்தானிய பிரதமர் ரிஷி மீது கடும் தாக்குதல்

உள்துறைச் செயலர் பதவியிலிருந்து பதவிநீக்கம் செய்யப்பட்ட சுவெல்லா பிரேவர்மேன், பிரதமர் ரிஷி நம்பிக்கைத் துரோகம் செய்துவிட்டதாக கடுமையான வார்த்தைகளால் அவரை சாடியுள்ளார்.

உள்துறைச் செயலராக பதவி வகித்த சுவெல்லா, பொலிசார் குறித்தும், வீடற்றவர்கள் குறித்தும் தெரிவித்த கருத்துக்கள் கடும் சர்ச்சையை உருவாக்கியதைத் தொடர்ந்து, பதவி விலகுமாறு பிரதமர் ரிஷி சுவெல்லாவை கேட்டுக்கொண்டார்.

அதன்படி பதவி விலகிய சுவெல்லா, பிரதமர் ரிஷியை கடுமையாக விமர்சித்து மூன்று பக்கக் கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார். எக்ஸில் வெளியிடப்பட்டுள்ள அந்த கடிதத்தில், ரிஷி நம்பிக்கைத் துரோகம் செய்துவிட்டதாக சாடியுள்ளார் சுவெல்லா.

2022ஆம் ஆண்டு, பிரதமர் போட்டியில் ரிஷி இருந்தபோது, கன்சர்வேட்டிவ் கட்சி உறுப்பினர்களில் பெரும்பான்மையினரால் ரிஷி நிராகரிக்கப்பட்டதாகவும், அந்த நிலையிலும், சில நிபந்தனைகளின் பேரில், தான் ரிஷிக்கு ஆதரவளித்ததாகவும், பதிலுக்கு ரிஷி தனக்கு சில வாக்குறுதிகள் அளித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார் சுவெல்லா.

அதாவது, தேர்தல் பிரச்சாரத்தின்போது, தாங்கள் ஆட்சிக்கு வந்தால், சட்ட விரோத புலம்பெயர்தலை மொத்தமாக கட்டுப்படுத்துதல், சர்வதேச மாணவர்கள் பிரித்தானியாவுக்கு வரும் வகையை மறுசீரமைத்தல், பிரித்தானியாவில் பணி விசா பெறுவதற்கு, பணியாளர்களுக்கு தற்போதிருக்கும் ஊதிய அளவை அதிகரித்தல் முதலான பல விடயங்களை பிரித்தானிய மக்களுக்கு கன்சர்வேட்டிவ் கட்சி வாக்களித்ததாகவும்,

இந்த வாக்குறுதிகளை நிறைவேற்ற தனக்கு ரிஷி உதவுவதாக உற்தியளித்ததாலேயே அவர் பிரதமராக தான் ஆதரவளித்ததாகவும் தெரிவித்துள்ள சுவெல்லா, ஆட்சிக்கு வந்த பிறகு ரிஷி தனது வாக்குறுதிகளை காற்றில் பறக்கவிட்டுவிட்டதாகவும், இது தனக்கு மட்டும் அல்ல, நாட்டுக்கே செய்த துரோகம் என்றும் சாடியுள்ளார் சுவெல்லா.

அவசரப்பட்டு வார்த்தைகளை விட்டதாலேயே இன்று பதவியிழந்து நிற்கும் சுவெல்லா, பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்திலும், தனக்கு சரியான வார்த்தைகளைப் பயன்படுத்தத் தெரியாமல் இருக்கலாம் என்றும், என்றாலும், 2019ஆம் ஆண்டு நம்மை ஆதரித்த பெரும்பான்மை மக்களுக்கு ஆதரவாகவே தான் எப்போதுமே குரல் கொடுக்க முயன்றுவந்துள்ளதாகவும், இவ்வளவு கௌரவமுள்ள பதவிகளில் தங்களை அமரவைத்த மக்களுக்கு நேர்மையாகவும், உண்மையாகவும் இருக்கவே தன்னாலியன்ற வரையில் முயன்றுவந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

அவர் கூறுவதைப் பார்க்கும்போது, புலம்பெயர்தல், சர்வதேச மாணவர்கள், வெளிநாட்டவர்களுக்கு விசா என பல விடயங்களை கட்டுப்படுத்துவதன் பின்னணியில் ரிஷிக்கும் பங்கிருப்பதாகவும், தற்போது பிரதமர் பதவியில் அமர்ந்துவிட்டதால், அடுத்த தேர்தலும் நெருங்கும் நிலையில், தலைமைப் பொறுப்பை தக்கவைப்பதற்காக ரிஷி தனது போக்கை மாற்றிக்கொண்டது போலவும் தோன்றுகிறது.

Share

Recent Posts

தொடர்புடையது
121664732
இலங்கைசெய்திகள்

உயர்தரப் பரீட்சை மாணவி 3 மாடிக் கட்டிடத்திலிருந்து குதித்துத் தற்கொலை முயற்சி: அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பி வைத்தியசாலையில் அனுமதி!

பம்பலப்பிட்டி பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில், இம்முறை உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவி ஒருவர் இன்று...

images 2 3
செய்திகள்இலங்கை

நினைவேந்தல் காணி விவகாரம்: இரு தரப்பினரும் ஒற்றுமையாக வாருங்கள்; இல்லையேல் நல்லூர் நிலம் வழங்கப்படாது – முதல்வர் மதிவதனி அதிரடி அறிவிப்பு!

நவம்பர் 27 நினைவேந்தல் நிகழ்வைக் கொண்டாடுவது தொடர்பாகக் கட்சிகளுக்கு இடையே ஒற்றுமை இன்மையால், இரு தரப்பினருக்கும்...

bk7qlddg hamas afp 625x300 19 February 25
செய்திகள்உலகம்

இஸ்ரேல் – ஹமாஸ் போர் நிறுத்தம்: 15 பாலஸ்தீனிய உடலங்களுக்குப் பதிலாக மேலும் ஒரு இஸ்ரேலிய வீரரின் உடலை ஹமாஸ் ஒப்படைத்தது!

எப்போது வேண்டுமானாலும் முறியலாம் என்ற அபாயத்தில் இருக்கும் காஸா போர் நிறுத்த ஒப்பந்தத்தின் அமுலாக்கம் தொடர்ந்து...

251107 Olivier Rioux ch 1044 acd69e
உலகம்செய்திகள்

7 அடி 9 அங்குல உயர கனேடிய இளைஞர் ஒலிவியர் ரியூ: உலகின் மிக உயரமான கூடைப்பந்தாட்ட வீரராக சாதனை!

அமெரிக்காவின் ஃப்ளோரிடா பல்கலைக்கழக கூடைப்பந்தாட்ட அணியில் இணைந்துள்ள கனேடிய இளைஞர் ஒலிவியர் ரியூ (Olivier Rioux),...