5 7 scaled
உலகம்செய்திகள்

இன்னும் நிறைய பேசவேண்டியிருக்கிறது… சர்ச்சையில் சிக்கி பதவியிழந்த உள்துறைச் செயலர்

Share

இன்னும் நிறைய பேசவேண்டியிருக்கிறது… சர்ச்சையில் சிக்கி பதவியிழந்த உள்துறைச் செயலர்

சர்ச்சைக்குரிய விதத்தில் பேசிக்கொண்டேயிருந்ததால் பதவியை இழந்த பிரித்தானிய உள்துறைச் செயலரான சுவெல்லா பிரேவர்மேன், இன்னும் நிறைய பேசவேண்டியிருக்கிறது என்று கூறியிருக்கிறார்.

புலம்பெயர் பின்னணி கொண்டவராக இருந்த நிலையிலும், இந்திய வம்சாவளியினரான சுவெல்லா, புலம்பெயர்தலுக்கெதிராக பேசிக்கொண்டே இருந்தார், வீடற்றவர்களை மோசமாக விமர்சித்தார், பாலஸ்தீன ஆதரவு பேரணிகளின்போது பொலிசார் பாரபட்சமாக நடந்துகொள்வதாக கட்டுரை எழுதினார். அவரது கருத்துக்கள் சர்ச்சையை உருவாக்கிக்கொண்டே இருந்தன.

எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி ஆளும் கட்சியிலும் அவருக்கு எதிர்ப்பு வலுக்கத் துவங்கியது. ஏன் இன்னும் அவரை பிரதமர் ரிஷி பதவிநீக்கம் செய்யவில்லை என கேள்விகள் எழுந்தன.

இந்நிலையில், நேற்று சுவெல்லாவை அதிரடியாக பதவிநீக்கம் செய்தார் பிரதமர் ரிஷி சுனக்.

பதவிநீக்கம் செய்யப்பட்ட சுவெல்லா, உள்துறைச்செயலராக பணி புரிந்தது என் வாழ்வில் மிகப்பெரிய பாக்கியம் என்று கூறியுள்ளார்.

அத்துடன் நிற்காமல், நான் இன்னும் நிறைய பேசவேண்டியுள்ளது. நேரம் வரும்போது பேசுவேன் என்றும் கூறியுள்ளார் சுவெல்லா.

அவர் என்ன பேசப்போகிறார் என்பதும், அவர் பேசினாலும், யார் அவர் பேசுவதை காதுகொடுத்துக் கேட்கப்போகிறார்கள் என்பதும் யாருக்கும் தெரியாது.

எப்படியும், எதிர்காலத்தில் கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவராகலாம் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சுவெல்லா, பதவிநீக்கம் செய்யப்பட்டது மோசமான முடிவுதான் என்பதில் சந்தேகமில்லை.

Share

Recent Posts

தொடர்புடையது
MediaFile 4 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இன்று மகா சிவராத்திரி! – சிவாலயங்களில் குவியும் பக்தர்கள்; இரவு முழுவதும் விழித்திருந்து வழிபாடு!

ஆன்மீக ரீதியாகவும் அறிவியல் ரீதியாகவும் மிக முக்கியமான தினமாகக் கருதப்படும் மகா சிவராத்திரி விரதம் இன்று...

MediaFile 4 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அக்குரேகொட படுகொலை: கொலையாளிகளின் கார் மீட்பு! – சட்டத்தரணியின் ‘தரப்பு மாற்றம்’ மரணத்திற்கு காரணமா?

அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி மற்றும் அவரது மனைவியைப் படுகொலை செய்யப் பயன்படுத்தப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் கார், காலி...

image 1d03fce287
செய்திகள்இலங்கைபிராந்தியம்

உங்கள் கையெழுத்து உங்கள் உரிமையைக் காக்கும்’: PTA-வை நீக்கக் கோரி வடகிழக்கில் ஒரு லட்சம் கையெழுத்துப் போராட்டம்!

சர்ச்சைக்குரிய பயங்கரவாதத் தடைச்சட்டம் (PTA) மற்றும் புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட முன்மொழிவுகளை (ATA) முற்றாக...

image 914163dc5e
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொழும்பு ஜிந்துபிட்டியில் பயங்கரம்: சிகையலங்கார நிலையத்திற்குள் புகுந்து துப்பாக்கிச் சூடு! 

கொழும்பு, ஜிந்துபிட்டி வரக்கா சந்தி பகுதியிலுள்ள முடியலங்கார நிலையம் (Barber Shop) ஒன்றிற்குள் நேற்றிரவு (14)...