24 18
உலகம்செய்திகள்

சூடானில் RSF அமைப்பு நடத்திய தாக்குதலில் 124 பேர் பலி

Share

சூடானில் RSF அமைப்பு நடத்திய தாக்குதலில் 124 பேர் பலி

சூடான் (Sudan) நாட்டின் RSF அமைப்பு மேற்கொண்ட படுகொலை தாக்குதலில் 124 பேர் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

 

சூடானின் தலைநகர் கார்தூமிற்கு தெற்கே உள்ள ஒரு கிராமத்தில் குறித்த அமைப்பு ஒரு கொடூரமான படுகொலையை நடத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

 

கடந்த வெள்ளிக்கிழமை நிகழ்ந்த இந்த தாக்கில் குறைந்தது 124 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் 150 பேர் வரை கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

இது சூடானில் நீடித்து வரும் உள்நாட்டுப் போரில் மிக மோசமான சம்பவங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.

 

துணை இராணுவக் குழுவான RSF அமைப்பு, கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்திலிருந்து சூடான் ஆயுதப் படைகளுடன் (SAF) கடுமையான மோதலில் ஈடுபட்டு வருகின்றது.

 

இந்நிலையில், இரு தரப்புகளும் குடிமக்களுக்கு எதிரான பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்ற நிலையில், அவற்றில், சட்டவிரோத கொலைகள், இடம்பெயர்வு மற்றும் கட்டமைப்புகளை அழித்தல் ஆகியவை அடங்கும்.

 

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...