5 18 scaled
உலகம்செய்திகள்

ஆட்டோவில் சென்ற இளம்பெண்ணைத் துரத்திய இளைஞர்கள்

Share

ஆட்டோவில் சென்ற இளம்பெண்ணைத் துரத்திய இளைஞர்கள்

இந்தியாவில், தனது மொபைலைப் பறிக்க முயன்ற இளைஞர்களுடன் போராடிய இளம்பெண் ஒருவர் பரிதாபமாக பலியானார்.

கடந்த வெள்ளிக்கிழமை மதியம், Ghaziabad என்னுமிடத்தில், கீர்த்தி சிங் (19) என்னும் மாணவி கல்லூரி முடிந்து வீட்டுக்குச் செல்வதற்காக ஆட்டோ ஒன்றில் ஏறியுள்ளார்.

அவரை, இரண்டு இளைஞர்கள் மோட்டார் சைக்கிள் ஒன்றில் பின்தொடர்ந்துள்ளனர். ஒரு இடத்தில் மோட்டார் சைக்கிளில் ஆட்டோவை நெருங்கிய இளைஞர்களில் ஒருவர், கீர்த்தியின் கையிலிருந்த மொபைல் போனைப் பறிக்க முயன்றுள்ளார்.

ஆனால், கீர்த்தி தன் மொபைலை விட மறுக்க, அந்த இளைஞர் மொபைலை வேகமாக இழுக்க, கீர்த்தி ஓடும் ஆட்டோவிலிருந்து கீழே விழுந்துள்ளார்.

கீழே விழுந்த கீர்த்திக்கு தலையில் பலமாக அடிபட்டுள்ளது. அவரது தோழி ஒருவர் உடனடியாக கீர்த்தியை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளார்.

கீர்த்திக்கு தலையில் பலத்த காயங்கள் ஏற்பட்டிருந்ததுடன், அவரது மூளையிலும் இரத்தக்கசிவு ஏற்பட்டுள்ளது. உடனடியாக மருத்துவர்கள் அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ளனர்.

தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த கீர்த்தி, சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை மாலை உயிரிழந்துவிட்டார்.

இதற்கிடையில், கீர்த்தியின் மொபைலைப் பறித்துச் சென்ற இளைஞர்களை பொலிசார் தீவிரமாகத் தேடத்துவங்கியுள்ளனர்.

ஓரிடத்தில் அவர்களை பொலிசார் கண்டுபிடிக்க, பொலிசாரைக் கண்டதும், அவர்களை நோக்கி துப்பாக்கியால் சுடத்துவங்கியுள்ளார்கள் அந்த இருவரும்.

பொலிசார் அவர்களைத் திருப்பிச் சுட, ஒருவர் சிக்கிக்கொண்டுள்ளார், மற்றொருவர் தப்பியோடிவிட்டார். சிக்கியவர் பெயர் பல்பீர் குமார் என பொலிசார் தெரிவித்துள்ளார்கள். அவரிடம் கீர்த்தியின் மொபைல் இருந்ததும் தெரியவந்துள்ளது.

குமாரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டுவரும் பொலிசார், தப்பியோடிய நபரை தேடி வருகிறார்கள். கொலை வழக்காக முடிந்துள்ள மொபைல் பறிப்பு சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Share
தொடர்புடையது
25 69316e1e1a0b5
உலகம்செய்திகள்

டொன்பாஸை பலவந்தமாகவேனும் கைப்பற்றுவோம்: உக்ரைனுக்குப் புட்டின் மீண்டும் எச்சரிக்கை!

உக்ரைனுக்குச் சொந்தமான டொன்பாஸ் (Donbas) பிராந்தியத்தை பலவந்தமாகவேனும் கைப்பற்றப் போவதாகவும், அதனால் உக்ரைன் இராணுவம் கிழக்கு...

articles2FclE2t29E6WCHMZuJCogv
இலங்கைசெய்திகள்

அனர்த்த நிவாரண உதவியாக மாலைதீவிலிருந்து 25,000 டின்மீன் பெட்டிகள் நன்கொடை!

இலங்கைக்கும் மாலைதீவுக்கும் இடையிலான வலுவான நட்பு மற்றும் பிராந்திய ஒத்துழைப்பைப் பிரதிபலிக்கும் வகையில், அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட...

PMD
அரசியல்இலங்கைசெய்திகள்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் விசேட உரை: அனர்த்த நிவாரண அறிவிப்பு மற்றும் சொத்து வரி விளக்கம்!

2026ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தின் மூன்றாவது வாசிப்பு மீதான குழுநிலை விவாதத்தின்போது, நிதியமைச்சரான ஜனாதிபதி அநுரகுமார...

5Vj3jiF6Jb72oIg3IwA0
இலங்கைசெய்திகள்

அனர்த்தப் பாதிப்பு: நாடளாவிய ரீதியில் 504 மருத்துவக் குழுக்கள் சிகிச்சை அளிப்பு!

சமீபத்திய இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்குச் சிகிச்சை அளிப்பதற்காக, நாடு முழுவதும் 504 மருத்துவக் குழுக்கள்...