5 18 scaled
உலகம்செய்திகள்

ஆட்டோவில் சென்ற இளம்பெண்ணைத் துரத்திய இளைஞர்கள்

Share

ஆட்டோவில் சென்ற இளம்பெண்ணைத் துரத்திய இளைஞர்கள்

இந்தியாவில், தனது மொபைலைப் பறிக்க முயன்ற இளைஞர்களுடன் போராடிய இளம்பெண் ஒருவர் பரிதாபமாக பலியானார்.

கடந்த வெள்ளிக்கிழமை மதியம், Ghaziabad என்னுமிடத்தில், கீர்த்தி சிங் (19) என்னும் மாணவி கல்லூரி முடிந்து வீட்டுக்குச் செல்வதற்காக ஆட்டோ ஒன்றில் ஏறியுள்ளார்.

அவரை, இரண்டு இளைஞர்கள் மோட்டார் சைக்கிள் ஒன்றில் பின்தொடர்ந்துள்ளனர். ஒரு இடத்தில் மோட்டார் சைக்கிளில் ஆட்டோவை நெருங்கிய இளைஞர்களில் ஒருவர், கீர்த்தியின் கையிலிருந்த மொபைல் போனைப் பறிக்க முயன்றுள்ளார்.

ஆனால், கீர்த்தி தன் மொபைலை விட மறுக்க, அந்த இளைஞர் மொபைலை வேகமாக இழுக்க, கீர்த்தி ஓடும் ஆட்டோவிலிருந்து கீழே விழுந்துள்ளார்.

கீழே விழுந்த கீர்த்திக்கு தலையில் பலமாக அடிபட்டுள்ளது. அவரது தோழி ஒருவர் உடனடியாக கீர்த்தியை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளார்.

கீர்த்திக்கு தலையில் பலத்த காயங்கள் ஏற்பட்டிருந்ததுடன், அவரது மூளையிலும் இரத்தக்கசிவு ஏற்பட்டுள்ளது. உடனடியாக மருத்துவர்கள் அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ளனர்.

தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த கீர்த்தி, சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை மாலை உயிரிழந்துவிட்டார்.

இதற்கிடையில், கீர்த்தியின் மொபைலைப் பறித்துச் சென்ற இளைஞர்களை பொலிசார் தீவிரமாகத் தேடத்துவங்கியுள்ளனர்.

ஓரிடத்தில் அவர்களை பொலிசார் கண்டுபிடிக்க, பொலிசாரைக் கண்டதும், அவர்களை நோக்கி துப்பாக்கியால் சுடத்துவங்கியுள்ளார்கள் அந்த இருவரும்.

பொலிசார் அவர்களைத் திருப்பிச் சுட, ஒருவர் சிக்கிக்கொண்டுள்ளார், மற்றொருவர் தப்பியோடிவிட்டார். சிக்கியவர் பெயர் பல்பீர் குமார் என பொலிசார் தெரிவித்துள்ளார்கள். அவரிடம் கீர்த்தியின் மொபைல் இருந்ததும் தெரியவந்துள்ளது.

குமாரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டுவரும் பொலிசார், தப்பியோடிய நபரை தேடி வருகிறார்கள். கொலை வழக்காக முடிந்துள்ள மொபைல் பறிப்பு சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Share
தொடர்புடையது
Untitled 53
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கை – மலேசியா இடையே புதிய வான்வழி இணைப்பு: பாட்டிக் ஏர் தனது சேவையைத் தொடங்கியது!

மலேசியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான விமான இணைப்பை வலுப்படுத்தும் ஒரு புதிய மைல்கல்லாக, பாட்டிக் ஏர் மலேசியா...

Untitled 52
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தொட்டகமுவ மும்முறை கொலை வழக்கு: 18 ஆண்டுகளின் பின் நான்கு சந்தேக நபர்கள் விடுதலை!

கடந்த 2006-ஆம் ஆண்டு பாலப்பிட்டிய, தொட்டகமுவ பகுதியில் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் உட்பட மூவர் சுட்டுக்கொல்லப்பட்ட...

Untitled 51
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யக்கல கட்சி அலுவலக விவகாரம்: ஜே.வி.பி-யிடம் இருந்து முன்னிலை சோசலிசக் கட்சியிடம் ஒப்படைக்க நீதிமன்றம் உத்தரவு!

யக்கல (Yakkala) பகுதியில் அமைந்துள்ள முன்னிலை சோசலிசக் கட்சியின் (FLSP) அலுவலகத்தை ஜனதா விமுக்தி பெரமுன...

Untitled 50
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தலைவர் சரத் கணேகோடா ராஜினாமா: புதிய பதில் தலைவர் நியமனம்!

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் (SriLankan Airlines) மற்றும் ஸ்ரீலங்கன் கேட்டரிங் ஆகிய நிறுவனங்களின் தலைவராகப் பணியாற்றி வந்த...