11 18
இந்தியாஉலகம்செய்திகள்

இந்தியாவிற்கு போலி பாஸ்போர்ட்டில் வந்தால் ரூ.10 லட்சம் அபராதம்

Share

இந்தியாவிற்கு போலி பாஸ்போர்ட்டில் வந்தால் ரூ.10 லட்சம் அபராதம்

இந்தியாவில் கடுமையான விதிமுறைகளுடன் புதிய குடியேற்ற மசோதா நடைமுறைக்கு வரவுள்ளது.

மோடி அரசு கொண்டு வர உள்ள Immigration and Foreigners Bill 2025 மசோதாவில், இந்தியாவிற்குள் அனுமதியின்றி நுழையும் வெளிநாட்டினருக்கு அதிகபட்சம் ரூ.5 லட்சம் அபராதம் விதிக்கப்படும்.

மேலும், வெளிநாட்டினர் போலி பாஸ்போர்ட் பயன்படுத்தினால் ரூ.10 லட்சம் வரை அபராதம் செலுத்த வேண்டிய நிலை ஏற்படும்.

இந்த மசோதா, தற்போதைய Passport (Entry into India) Act, 1920, Registration of Foreigners Act, 1939, Foreigners Act, 1946, மற்றும் Immigration (Carriers’ Liability) Act, 2000 ஆகிய சட்டங்களை மாற்றி, புதிய மற்றும் விரிவான சட்டத்தை உருவாக்குகிறது.

– இந்தியாவிற்குள் நுழையும் மற்றும் வெளியேறும் அனைவரும் செல்லுபடியாகும் பயண ஆவணங்களை கொண்டிருக்க வேண்டும்.

– குடிவரவு அதிகாரிகளின் கடமைகள் மற்றும் பொறுப்புகள் நிர்ணயிக்கப்படும்.

– வெளிநாட்டினர்கள் இந்தியாவில் தங்கும் முறையை கண்காணிக்க பல கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்.

– இந்தியாவில் வெளிநாட்டினர் சேர்க்கும் பல்கலைக்கழகங்கள், மருத்துவமனைகள் மற்றும் நிறுவனங்களின் பொறுப்புகள் குறித்துவிவரமாக குறிப்பிடப்படும்.

– இந்தியாவில் வெளிநாட்டினரின் இயக்கங்களை கட்டுப்படுத்த அதிகாரிகள் அனுமதிக்கப்படுவர்.

இந்த மசோதா, இந்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் சமர்ப்பிக்கப்பட வாய்ப்பு உள்ளது.

Share
தொடர்புடையது
15 3
செய்திகள்உலகம்

கியூபா எல்லைப்படையில் தாக்குதல்: அமெரிக்கப் படகில் இருந்த நால்வர் உயிரிழப்பு, 6 பேர் கைது!

அமெரிக்காவில் பதிவு செய்யப்பட்ட வேகப்படகொன்றில் இருந்தவர்கள் மீது கியூபா எல்லைக் காவல் படையினர் மேற்கொண்ட துப்பாக்கிப்...

14 1
செய்திகள்உலகம்

வெனிசுலாவில் 3,200 அரசியல் கைதிகள் விடுதலை: புதிய அரசாங்கத்தின் அதிரடி நடவடிக்கை!

வெனிசுலாவில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பொது மன்னிப்புச் சட்டத்தின் (Amnesty Law) கீழ், 3,200 இற்கும் மேற்பட்ட...

13 1
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

தித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு சிறப்பு உதவித்தொகை: மஹாபொல அறக்கட்டளை அறிவிப்பு!

‘தித்வா’ (Titwa) சூறாவளியால் பாதிக்கப்பட்டுப் பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளும் பல்கலைக்கழக மாணவர்களுக்கு, சிறப்பு மற்றும் ஒரு...

12 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பொடி லெசிக்கு 7 நாட்கள் சிஐடி தடுப்புக் காவல்: கொலை, கொலை முயற்சி என 26 வழக்குகள் நிலுவை!

இந்தியாவில் கைது செய்யப்பட்டு இன்று இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட பாதாள உலகக் குழுத் தலைவரும், போதைப்பொருள்...