tamilni 188 scaled
உலகம்செய்திகள்

தென் அமெரிக்க நாடொன்றில் அவசரநிலை பிரகடனம்

Share

தென் அமெரிக்க நாடான ஈக்வடாரில், சிறையில் அடைக்கப்பட்டிருந்த போதைப் பொருள் கடத்தல் குற்றவாளி காணாமல் போனதால், அவர் இறந்துவிட்டதாக கருதி அவரது ஆதரவாளர்கள் கலவரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனை அடுத்து அந்நாட்டு ஜனாதிபதி டேனியல் நோபோவா, இரண்டு மாதங்களுக்கு அவசரநிலையை பிரகடனப்படுத்தியுள்ளார்.

குவாயாகில் சிறையில் அடைக்கப்ட்டிருந்த குற்றவாளி அடோல்போ மசியாஸ் என்பவர் காணாமல் போனாரா அல்லது தப்பிச் சென்றாரா என்ற விவரம் தெரியாத நிலையில், சிறைச்சாலைகளில் கலவரம் வெடித்துள்ளது.

தொலைக்காட்சி நிறுவனம் ஒன்றில் நேரலை செய்திகளை ஒளிபரப்பிக் கொண்டிருந்த அரங்குக்குள் நுழைந்த முகமூடி அணிந்த கும்பல், ஊழியர்களை துப்பாக்கி முனையில் பணயக் கைதிகளாகப் பிடித்தது.

அப்போது ஊழியர்கள் சுடாதீர்கள் என்று கெஞ்சும் காணொளியும் இணையத்தில் வெளியாகி உள்ளது. இதனிடையே, நிலைமை கட்டுப்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டதாக ஈக்வடார் அரசு கூறியுள்ளது.

இதேவேளை தொலைகாட்சி நிலையத்திற்குள் நுழைந்த கும்பலை கைது செய்ததாகவும் அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Share
தொடர்புடையது
Murder 5
இலங்கைசெய்திகள்

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகரை சந்தித்த செல்வம் அடைக்கலநாதன் எம்பி

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகர் சாய் முரளியை தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ சார்பாக கட்சியின்...

Murder 4
இலங்கைசெய்திகள்

கிழக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடல்

கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரட்ணசேகர மற்றும் கிழக்கு மாகாண அமைச்சுகள் மற்றும் திணைக்கள...

Murder 2
இலங்கைசெய்திகள்

ரணில் எடுத்த கடுமையான முடிவுகள்! தொடரும் அநுர தரப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கடினமான தீர்மானங்களினால் நாட்டை மீட்க முடிந்தது என நிதி அமைச்சின்...

10
இலங்கைசெய்திகள்

இலங்கையில் சிங்களவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதாம்! சரத் வீரசேகர குற்றச்சாட்டு

இலங்கையில் சிங்கள இனத்துக்கே அநீதி இழைக்கப்பட்டு வருகின்றது எனவும், தமிழ் தரப்பினரை மட்டுமே ஐ.நா. மனித...