rtjy 235 scaled
இலங்கைஉலகம்செய்திகள்

இஸ்ரேல் நாட்டில் இலங்கை உணவுத் திருவிழா

Share

இஸ்ரேல் நாட்டில் இலங்கை உணவுத் திருவிழா

இஸ்ரேலில் இலங்கையின் 32 பாரம்பரிய உணவு வகைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் நாட்டுக்கான இலங்கை தூதுவர் நிமல் பண்டாரவின் இல்லத்தில் நடைபெற்ற உணவு திருவிழாவில் இந்த காட்சிப்படுத்தல் நிகழ்ந்துள்ளது.

Gallery

 

இந்நிலையில் பிரதான உரையை ஆற்றிய தூதுவர் பண்டார, பண்டைய கண்டிய இராச்சியத்தில் இருந்து இலங்கையின் உணவுக் கலாச்சாரத்தின் நம்பகத்தன்மையை எடுத்துக்காட்டி, பண்டைய இலங்கையின் மன்னர்களுக்கு இந்த 32 உணவுகள் எவ்வாறு பரிமாறப்பட்டன என்பதை விளக்கியுள்ளார்.

பல இஸ்ரேலியர்கள் இலங்கைக்கு வர விரும்புவதால், இலங்கையின் அமைதியான நிலப்பரப்புகள், செழுமையான பாரம்பரியம், கலாச்சாரம் மற்றும் பொழுதுபோக்கு நடவடிக்கைகளை வெளிப்படுத்தும் வகையில் இலங்கையை ஊக்குவிக்கும் பல்வேறு நடவடிக்கைகள் நடத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நிகழ்வின் அழைப்பாளர்களில் பயண மற்றும் சுற்றுலா நிறுவனங்களின் உறுப்பினர்கள், ஊடகவியலாளர்கள், சமையல் எழுத்தாளர்கள், யூடியூபர்கள், சமூக ஊடகங்களில் ஈடுபடுபவர்கள், குடிவரவு ஆணைய அதிகாரிகள், வெளியுறவு அமைச்சகம் மற்றும் விமான நிலைய அதிகாரிகள் ஆகியோர் பங்குபற்றியுள்ளனர்.

Gallery

Share
தொடர்புடையது
Ranil UNP
செய்திகள்அரசியல்இலங்கை

சிறிகொத்தவில் டிஜிட்டல் புரட்சி: ஸ்டார்லிங்க் வசதி மற்றும் UNP செயலியுடன் களமிறங்கும் ஐக்கிய தேசியக் கட்சி!

ஐக்கிய தேசியக் கட்சி (UNP) தனது அரசியல் கட்டமைப்பை நவீன தொழில்நுட்பத்துடன் இணைக்கும் நோக்கில், ஒரு...

Weather Forecast Oct 11 2025
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாட்டின் பல பகுதிகளில் மழை: சில இடங்களில் 50 மி.மீ வரை பலத்த மழை பெய்யக்கூடும்!

நாட்டின் பல மாகாணங்களில் இன்றும் மழை பெய்யக்கூடிய வானிலை நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் முன்னறிவிப்பு விடுத்துள்ளது....

NAMAL
செய்திகள்அரசியல்இலங்கை

குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் நாமல் ராஜபக்ச: வாக்குமூலம் அளிக்க நேரில் முன்னிலை!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) தேசிய அமைப்பாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச சற்று முன்னர்...

PSX 20260202 191816
செய்திகள்அரசியல்இலங்கை

எனக்கும் கெஹெல்பத்தர பத்மேவுக்கும் தொடர்பில்லை! – CID விசாரணையில் பிரசன்ன ரணதுங்க விளக்கம்.

திட்டமிட்ட குற்றச்செயல்களை வழிநடத்தியதாகக் கருதப்படும் ‘கெஹெல்பத்தர பத்மே’ தொடர்பான விசாரணைகளுக்காக, முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க...