செய்திகள்இலங்கைஉலகம்

அமெரிக்க உளவாளிக்கு உதவிய இலங்கை அகதி குடும்பம்! கனடா வழங்கிய அனுமதி

Share
canada
Share

ஹொங்ஹொங்கில் அமெரிக்க உளவாளி ஒருவருக்கு அடைக்களம் கொடுத்த இலங்கை அகதி குடும்பத்திற்கு கனடாவில் குடியேற அனுமதி கிடைத்துள்ளது.

கடந்த ஐந்து ஆண்டுகளாக இந்த குடும்பத்தினர் கனடாவில் குடியேற கோரிக்கை விடுத்திருந்த நிலையில், தற்போது கனடா அரசு அனுமதி வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எட்வர்ட் ஜோசப் ஸ்னோவ்டென் என்ற நபர் 2013ம் ஆண்டு அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு நிறுவனத்திடமிருந்து மிகவும் ரகசிய தகவல்களை கசியவிட்டதாக குற்றம் சுமத்தப்பட்ட நிலையில், அவர் தேடப்பட்டுவந்த முக்கிய குற்றவாளியாக இருந்தார்.

இந்நிலையில், அவர் ஹொங்ஹொங்கிற்கு தப்பிச் சென்ற போது அவர் யார் என்றே தெரியாமல் இலங்கை அகதிகளான சுப்புன் கெல்லபத்த மற்றும் அவரது மனைவி அடைக்களம் கொடுத்தனர்.

சுப்புன் குடும்பத்தினர் ஹொங்கொங்கில் அகதி அந்தஸ்துக்காக விண்ணப்பித்துக் காத்துக்கொண்டிருந்தார்கள்.

இந்நிலையில், தம் மீதான குற்றச்சாட்டுக்களையடுத்து தமது விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படலாம் என்றும் அச்சத்தின் பேரில், தமது சட்டத்தரணிகள் மூலம் கனடாவில் அகதி அந்தஸ்து கோரி விண்ணப்பித்திருந்தனர்.

இந்நிலையில், தற்போது குறித்த இலங்கை அகதி குடும்பத்திற்கு கனடாவில் குடியேற அந்நாட்டு அரசு அனுமதி வழங்கியுள்ளது. அவர்கள் நேற்றைய தினம் கனடாவில் குடியேறியுள்ளதாக தகவல்கள் தெரிவிகிக்கின்றன.

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
15 7
இலங்கைசெய்திகள்

தமிழரசின் பெருவெற்றி – நான் கூறியது நடந்து விட்டது….! மார்தட்டும் சுமந்திரன்

அன்று நான் கூறியது இன்று நிரூபணமாகியுள்ளது என இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரான ஜனாதிபதி...

16 7
உலகம்செய்திகள்

ஹவுதிகளுக்கு பேரிழப்பு : யேமனின் முக்கிய விமான நிலையத்தை தகர்த்து அழித்தது இஸ்ரேல்

யேமனின் தலைநகரிலுள்ள சர்வதேச விமான நிலையத்தை வான்வழித் தாக்குதல்கள் மூலம் தகர்த்து அழித்துள்ளதாக இஸ்ரேல் இராணுவம்...

13 7
இலங்கைசெய்திகள்

நான் கூறியதை கேட்டிருந்தால் வெற்றி – ரணில் விக்ரமசிங்க

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து சபைகளில் கூட்டணியாக போட்டியிட்டிருந்தால் ஐம்பது முதல் நூறு எண்ணிக்கையிலான இடங்களை வென்றிருக்க முடியும்...

12 7
இலங்கைசெய்திகள்

பல்கலைகளில் தொடரும் அடாவடித்தனம் : ஆறு மாணவர்கள் அதிரடியாக கைது

சக மாணவர் ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலையை (University of Sri Jayewardenepura)...