1 15 scaled
உலகம்செய்திகள்

19 ஆண்டுகளாக தலைமறைவாகியுள்ள இலங்கை நபர்: யார் இவர்?

Share

19 ஆண்டுகளாக தலைமறைவாகியுள்ள இலங்கை நபர்: யார் இவர்?

கள்ள நோட்டு வழக்கில் 19 ஆண்டுகளாக தலைமறைவாகியுள்ள இலங்கை நபரை பொலிசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

சென்னை சைதாப்பேட்டை ராமானுஜம் தெரு பகுதியைச் சேர்ந்த ஆனந்த் என்கிற கீதா அண்ணன் (வயது 56) என்பவர் இலங்கை அகதியாவார். இவர், செங்கல்பட்டு அகதிகள் முகாமில் வசித்து வந்தார்.

இவர், கடந்த 2000 -ம் ஆண்டு திருச்சி மாவட்டத்தில் கள்ள நோட்டு அச்சடித்த வழக்கில் கைது செய்யப்பட்டார். அப்போது, இவருடன் சேர்த்து 8 பேர் கைது செய்யப்பட்டனர்.

இது தொடர்பாக திருச்சி சி.பி.சி.ஐ.டி. கள்ள நோட்டு தடுப்பு பிரிவு பொலிசார் ஆனந்த் உள்பட 9 பேரை கைது செய்ததையடுத்து, இந்த வழக்கு திருச்சி 2 -வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.

பின்பு, கைதான ஆனந்த் ஜாமினில் வெளிவந்து இரண்டு முறை நீதிமன்றத்தில் ஆஜரானார். இதனையடுத்து, இந்த வழக்கில் தீர்ப்பு அளிக்கப்படும் நிலை வந்ததும் அவரை காணவில்லை.

அதாவது, 2004 பிப்ரவரி 6 -ம் திகதி முதல் ஆனந்த்தை காணவில்லை. இந்நிலையில், ஆனந்த் தொடர்பான வழக்கில் இதுவரை தீர்ப்பு வழங்கப்படவில்லை.

இதனால், 19 ஆண்டுகள் தலைமறைவாகி இருக்கும் ஆனந்ததை மீண்டும் சிபிசிஐடி பொலிசார் தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும், சென்னையில் உள்ள அவரது பெற்றோர் மற்றும் சகோதரி வீட்டுக்கு விசாரணை நடத்தி வருகின்றனர்.

Share

Recent Posts

தொடர்புடையது
05 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வரி செலுத்துவோருக்கு ‘கோல்ட், சில்வர்’ கார்டு: உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அறிமுகப்படுத்திய புதிய அதிரடி சலுகைத் திட்டம்!

நாட்டின் வரி செலுத்தும் கலாசாரத்தில் நேர்மறையான மாற்றத்தை ஏற்படுத்தும் நோக்கில், தமது வரிப் பொறுப்புக்களைத் துல்லியமாகவும்,...

04 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கிவுல் ஓயா திட்டம்: நில அபகரிப்பிற்கு எதிரான கூட்டுப் போராட்டம் – யாழ். ஊடக அமையத்தில் சிவில் சமூகம் தீர்மானம்!

யாழ். ஊடக அமையத்தின் ஒழுங்கமைப்பில் ‘கிவுல் ஓயா அபாயத்தின் குறியீடா?’ என்ற தலைப்பிலான முக்கியத்துவமிக்க திறந்த...

03
செய்திகள்இந்தியா

இலங்கைத் தமிழர்களுக்கு நிரந்தரக் குடியிருப்புகள்: தமிழக அரசின் குரல் என்றும் ஒலிக்கும் – முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி!

தமிழகத்தில் உள்ள பல்வேறு முகாம்களில் வசிக்கும் இலங்கைத் தமிழ் ஏதிலிகளின் நலனைப் பேணுவதிலும், அவர்களின் வாழ்வாதாரத்தை...

02
செய்திகள்உலகம்

2 நாட்களில் பயணம்: நிலவில் சுயசார்பு நகரம் அமைக்க ஈலோன் மஸ்க் அதிரடி திட்டம்!

உலகின் முன்னணி விண்வெளி ஆய்வு நிறுவனமான ஸ்பேஸ்எக்ஸ் (SpaceX) தலைவர் ஈலோன் மஸ்க், செவ்வாய் கிரகத்திற்கு...