1 15 scaled
உலகம்செய்திகள்

19 ஆண்டுகளாக தலைமறைவாகியுள்ள இலங்கை நபர்: யார் இவர்?

Share

19 ஆண்டுகளாக தலைமறைவாகியுள்ள இலங்கை நபர்: யார் இவர்?

கள்ள நோட்டு வழக்கில் 19 ஆண்டுகளாக தலைமறைவாகியுள்ள இலங்கை நபரை பொலிசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

சென்னை சைதாப்பேட்டை ராமானுஜம் தெரு பகுதியைச் சேர்ந்த ஆனந்த் என்கிற கீதா அண்ணன் (வயது 56) என்பவர் இலங்கை அகதியாவார். இவர், செங்கல்பட்டு அகதிகள் முகாமில் வசித்து வந்தார்.

இவர், கடந்த 2000 -ம் ஆண்டு திருச்சி மாவட்டத்தில் கள்ள நோட்டு அச்சடித்த வழக்கில் கைது செய்யப்பட்டார். அப்போது, இவருடன் சேர்த்து 8 பேர் கைது செய்யப்பட்டனர்.

இது தொடர்பாக திருச்சி சி.பி.சி.ஐ.டி. கள்ள நோட்டு தடுப்பு பிரிவு பொலிசார் ஆனந்த் உள்பட 9 பேரை கைது செய்ததையடுத்து, இந்த வழக்கு திருச்சி 2 -வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.

பின்பு, கைதான ஆனந்த் ஜாமினில் வெளிவந்து இரண்டு முறை நீதிமன்றத்தில் ஆஜரானார். இதனையடுத்து, இந்த வழக்கில் தீர்ப்பு அளிக்கப்படும் நிலை வந்ததும் அவரை காணவில்லை.

அதாவது, 2004 பிப்ரவரி 6 -ம் திகதி முதல் ஆனந்த்தை காணவில்லை. இந்நிலையில், ஆனந்த் தொடர்பான வழக்கில் இதுவரை தீர்ப்பு வழங்கப்படவில்லை.

இதனால், 19 ஆண்டுகள் தலைமறைவாகி இருக்கும் ஆனந்ததை மீண்டும் சிபிசிஐடி பொலிசார் தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும், சென்னையில் உள்ள அவரது பெற்றோர் மற்றும் சகோதரி வீட்டுக்கு விசாரணை நடத்தி வருகின்றனர்.

Share
தொடர்புடையது
world 161
செய்திகள்இலங்கைபிராந்தியம்

விபத்துகளால் 713 பேர் பலி: வாகன ஓட்டுநர்களுக்கு பொலிஸார் கடும் எச்சரிக்கை!

தற்போது நிலவி வரும் பண்டிகைக் காலத்தில் மதுபோதையில் வாகனம் செலுத்துவதையும், கவனக்குறைவாகச் செயல்படுவதையும் தவிர்க்குமாறு இலங்கை...

world 160
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் நிகழ்ந்த விபத்துக்கள் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகள்: பொலிஸாரின் அதிரடி சோதனைகள்!

இலங்கையின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில மணிநேரங்களில் இடம்பெற்ற விபத்துக்கள் மற்றும் பொலிஸ் சோதனைகளில் பலர்...

world 159
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பட்டாசு வெடிக்கும் போது அவதானம் செலுத்துமாறு சுகாதார அமைச்சு அறிவுறுத்தல்!

சித்திரைப் புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது எதிர்பாராத விதமாக இடம்பெறும் பட்டாசு விபத்துகளைத் தடுப்பது குறித்து சுகாதார...

world 158
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கல்கிசையில் மோதல்: இலங்கை பெண்ணைத் தாக்கிய உக்ரைன் பெண் விளக்கமறியலில்!

கல்கிசையில் அமைந்துள்ள உணவகம் ஒன்றிற்கு முன்பாக கடந்த 12ஆம் திகதி இரவு இடம்பெற்ற மோதல் சம்பவம்...