ஜப்பானில் கொள்ளைச் சம்பவம்: 30 வயது இலங்கையர் கைது!

Japan arrest

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் பெண் ஒருவரைத் தாக்கி கொள்ளையிட்ட குற்றச்சாட்டில் 30 வயதான இலங்கையர் ஒருவர் அந்நாட்டுக் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் ஜெயதுங்க ஆராச்சி சிரேஜ் தனுஷ்க (30) என ஜப்பானிய ஊடகங்கள் அடையாளம் கண்டுள்ளன.

கடந்த டிசம்பர் 21ஆம் திகதி, பெண் ஒருவரை வழிமறித்து அவரிடமிருந்த கடன் அட்டை (Credit Card) உள்ளிட்ட உடைமைகளைக் கொள்ளையிட்டதாக இவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இச்சம்பவத்தின் போது பாதிக்கப்பட்ட பெண்ணின் கழுத்து மற்றும் உடல் பகுதிகளில் காயங்கள் ஏற்பட்டுள்ளதாக ஜப்பானிய காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட இலங்கையர், தான் செய்த குற்றத்தை ஒப்புக்கொண்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலதிக சட்ட நடவடிக்கைகள் ஜப்பானிய நீதிமன்றங்களின் ஊடாக முன்னெடுக்கப்படவுள்ளன.

 

 

Exit mobile version