Japan arrest
உலகம்செய்திகள்

ஜப்பானில் கொள்ளைச் சம்பவம்: 30 வயது இலங்கையர் கைது!

Share

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் பெண் ஒருவரைத் தாக்கி கொள்ளையிட்ட குற்றச்சாட்டில் 30 வயதான இலங்கையர் ஒருவர் அந்நாட்டுக் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் ஜெயதுங்க ஆராச்சி சிரேஜ் தனுஷ்க (30) என ஜப்பானிய ஊடகங்கள் அடையாளம் கண்டுள்ளன.

கடந்த டிசம்பர் 21ஆம் திகதி, பெண் ஒருவரை வழிமறித்து அவரிடமிருந்த கடன் அட்டை (Credit Card) உள்ளிட்ட உடைமைகளைக் கொள்ளையிட்டதாக இவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இச்சம்பவத்தின் போது பாதிக்கப்பட்ட பெண்ணின் கழுத்து மற்றும் உடல் பகுதிகளில் காயங்கள் ஏற்பட்டுள்ளதாக ஜப்பானிய காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட இலங்கையர், தான் செய்த குற்றத்தை ஒப்புக்கொண்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலதிக சட்ட நடவடிக்கைகள் ஜப்பானிய நீதிமன்றங்களின் ஊடாக முன்னெடுக்கப்படவுள்ளன.

 

 

Share
தொடர்புடையது
Untitled 27
செய்திகள்விளையாட்டு

ஐபிஎல் 2026: சன்ரைசர்ஸை வீழ்த்தி நடப்பு சாம்பியன் பெங்களூரு அணி அபார வெற்றி!

ஐபிஎல் 2026 தொடரின் தொடக்க ஆட்டத்தில், நடப்பு சாம்பியனான ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி,...

Untitled 26
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மின்சாரக் கட்டணத் திருத்தம்: பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் இறுதி முடிவு நாளை!

இலங்கையில் எதிர்வரும் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலப்பகுதிக்கான மின்சாரக் கட்டணத் திருத்தம் குறித்த தனது...

Untitled 25
உலகம்செய்திகள்

ஆந்த்ரோபிக் நிறுவனத்தின் புதிய ஏஐ இரகசியங்கள் கசிவு: சைபர் பாதுகாப்பு நிறுவனங்களுக்குப் பெரும் சவால்!

உலகின் முன்னணி செயற்கை நுண்ணறிவு (AI) நிறுவனமான ஆந்த்ரோபிக் (Anthropic), உருவாக்கி வரும் தனது அடுத்த...

01 39
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சீன ஆய்வுக்கப்பல் ஊழியருக்கு அவசர சிகிச்சை: மனிதாபிமான அடிப்படையில் உதவிய இலங்கை கடற்படை!

இலங்கையின் பிரத்தியேக பொருளாதார வலயத்திற்குள் (EEZ) நங்கூரமிட்டிருந்த சீன ஆய்வுக்கப்பலான ‘ஷி யான் 6’ (Shi...