rtjy 237 scaled
உலகம்செய்திகள்

வெடித்து சிதறிய வட கொரியாவின் செயற்கைக்கோள்

Share

தங்களது உளவு செயற்கைக்கோளை விண்ணில் செலுத்த 2-ஆவது முறையாக மேற்கொள்ளப்பட்ட முயற்சியும் தோல்வியடைந்ததாக வட கொரியா அறிவித்துள்ளது.

இது குறித்து வட கொரிய விண்வெளி ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

மல்லிக்யாங்-1 உளவு செயற்கைக்கோளை விண்ணில் செலுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்ட முயற்சி தோல்வியடைந்தது.

சொல்லிமா-1 என்ற புதிய வகை ராக்கெட் மூலம் அந்த செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்பட்டது. அந்த ராக்கெட்டின் முதல் மற்றும் 2-ஆவது நிலை சரியாக இருந்தன.

இருந்தாலும் 3-ஆவது நிலையில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அது வெடித்துச் சிதறியது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஏற்கெனவே, தங்களது செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தவிருப்பதாக ஜப்பான் கடலோரக் காவல் படையிடம் வட கொரியா முன்கூட்டியே தகவல் தெரிவித்திருந்தது.

கொரிய போர் முடிவுக்குப் பிறகு அந்த தீபகற்பப் பகுதியில் அமெரிக்காவும், தென் கொரியாவும் தொடர்ந்து கூட்டு ராணுவப் பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.

இத்தகைய பயிற்சிகளை தங்கள் மீது படையெடுப்பதற்கான போர் ஒத்திகையாக வட கொரியா கருதுகிறது. இந்த நிலையில், அமெரிக்கா மற்றும் தென் கொரியாவின் ராணுவ நடவடிக்கைகளைக் கண்காணிப்பதற்காக உருவாக்கிய உளவு செயற்கைக்கோளை விண்ணில் செலுத்த வட கொரியா கடந்த மே மாதம் முயன்றது.

எனினும், செயற்கைக்கோளை ஏந்திச் சென்ற ராக்கெட் கட்டுப்பாட்டை இழந்து கடலில் விழுந்தது. இந்த நிலையில், உளவு செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தும் வட கொரியாவின் 2-ஆவது முயற்சியும் தற்போது தோல்வியடைந்தது.

எனினும், இந்த முயற்சியைக் கைவிடப் போவதில்லை எனவும், 3-ஆவது முறையாக எதிர்வரும் அக்டோபா் மாதம் உளவு செயற்கைக்கோள் செலுத்தும் முயற்சி மேற்கொள்ளப்படும் எனவும் வட கொரியா உறுதியாகத் தெரிவித்துள்ளது.

Share
தொடர்புடையது
15 12
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நல்லதண்ணி – நுவரெலியா பிரதான வீதியில் மகிழுந்து விபத்து: மூவர் காயம்!

நல்லதண்ணி பகுதியிலிருந்து நுவரெலியா நோக்கிப் பயணித்த மகிழுந்து ஒன்று, வீதியை விட்டு விலகி சுமார் 15...

14 12
செய்திகள்உலகம்

ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேலிய தாக்குதல்கள்: உயிரிழப்பு எண்ணிக்கை 1,444 ஆக உயர்வு!

கடந்த பிப்ரவரி 28-ஆம் திகதி முதல் ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் இணைந்து...

13 11
செய்திகள்உலகம்

ஈராக்கில் விழுந்து நொறுங்கிய அமெரிக்க விமானம்: நான்கு வீரர்கள் உயிரிழப்பு – அமெரிக்க இராணுவம் உறுதி!

மேற்கு ஈராக் வான்பரப்பில், அமெரிக்க இராணுவத்திற்குச் சொந்தமான ‘போயிங் KC-135 Stratotanker’ ரக எரிபொருள் நிரப்பும்...

12 12
செய்திகள்அரசியல்இலங்கை

இந்தியப் பெருங்கடல் பிராந்திய நாடுகளுடன் பேச்சுவார்த்தை அவசியம் – முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க!

மத்திய கிழக்கில் தற்போது நிலவும் போர் மோதல்கள் மற்றும் அவற்றால் உலகப் பொருளாதாரத்தில் ஏற்படும் தாக்கங்களைக்...