24 665bef0bd8058
உலகம்செய்திகள்

ஐக்கிய அரபு அமீரகத்தில் தொழிலாளர்களுக்கு மகிழ்ச்சி செய்தி

Share

ஐக்கிய அரபு அமீரகத்தில் தொழிலாளர்களுக்கு மகிழ்ச்சி செய்தி

ஐக்கிய அரபு அமீரகம் (United Arab Emirates) ஜூன் 15 சனிக்கிழமை முதல் வெளிப்புற வேலையாட்களுக்கான கட்டாய மதிய இடைவேளையை அறிவித்துள்ளது.

அமீரகத்தின் மனித வளங்கள் மற்றும் குடியேற்ற அமைச்சகம் (MoHRE) வெளியிட்டுள்ள உத்தரவின்படி, நேரடி சூரிய ஒளியில் வேலை செய்வது மதியம் 12:30 முதல் 3 மணி வரை அனுமதிக்கப்படாது மற்றும் செப்டம்பர் 15 வரை குறித்த உத்தரவு நடைமுறையில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய அரபு அமீரகம், கோடை வெப்ப அபாயங்களிலிருந்து தொழிலாளர்களைப் பாதுகாப்பதற்காக, அதன் ஒருங்கிணைந்த தொழில்சார் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு அமைப்பின் ஒரு பகுதியாக, தொடர்ந்து 20வது ஆண்டாக மதிய இடைவேளையை நடைமுறைப்படுத்துகிறது.

இடைவேளையின்போது ஊழியர்களுக்கு நிழலான பகுதி வழங்கப்பட வேண்டும் மற்றும் தினசரி வேலை நேரம் காலை, மாலை அல்லது இரண்டு நேரமும் எட்டு மணிநேரத்திற்கு குறையாமல் இருக்க வேண்டும்.

எட்டு மணி நேரத்திற்கும் மேலாக பணிபுரியும் ஊழியர்களுக்கு கூடுதல் நேர ஊதியம் வழங்கப்படும்.

விதிகளை மீறும் முதலாளிகள் ஒரு தொழிலாளிக்கு திர்ஹாம் 5,000 அபராதம், அதிகபட்சமாக 50,000 திர்ஹாம் அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதிய இடைவேளைக் கொள்கையில் ஏதேனும் மீறல்கள் இருந்தால், “600 590 000” என்ற எண்ணில் அதன் அழைப்பு மையம் மூலம் புகார் அளிக்குமாறு அமைச்சகம் பொதுமக்களை வலியுறுத்தியுள்ளது.

Share
தொடர்புடையது
world 50
செய்திகள்உலகம்

ஈரான் உடன்படிக்கையை மீறினால் கடும் இராணுவ நடவடிக்கை: ‘ட்ரூத் சோஷியல்’ தளத்தில் டிரம்ப் எச்சரிக்கை!

அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே எட்டப்பட்டுள்ள உடன்படிக்கையைத் தெஹ்ரான் முழுமையாகக் கடைப்பிடிக்கும் வரை, அமெரிக்கப் படைகள் ஈரானைச்...

world 49
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பகல் நேர கடும் வெப்பத்தைத் தொடர்ந்து இடியுடன் கூடிய மழை: பொதுமக்களுக்கு எச்சரிக்கை!

இலங்கையின் பல பகுதிகளில் பகல் நேரங்களில் கடுமையான வெப்பம் நிலவி வரும் சூழலில், பிற்பகல் வேளைகளில்...

world 48
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எரிபொருள், மின்சார விலைகளில் மாற்றம்? புதிய விலை சூத்திரத்தை அறிமுகம் செய்ய திட்டம்!

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால் உலகளாவிய ரீதியில் எரிபொருள் விலைகள் உயர்ந்துள்ள நிலையில், உள்நாட்டிலும்...

world 47
செய்திகள்இலங்கைபிராந்தியம்

2.2 பில்லியன் நிலக்கரி கொள்முதல் மோசடி: சட்டமா அதிபர் ஒப்புதலின்றி ஒப்பந்தம் கையெழுத்து!

டிரைடென்ட் கெம்பார் லிமிடெட் (Trident Kembar Ltd) நிறுவனத்திடமிருந்து நிலக்கரி கொள்முதல் செய்ததில் நிகழ்ந்துள்ள பாரிய...