1 scaled
உலகம்செய்திகள்

ஹிஜாப்பை துறந்த ஈரான் செஸ் வீராங்கனைக்கு ஸ்பெயின் குடியுரிமை!! வெளியான அறிவிப்பு!!

Share

ஹிஜாப்பை துறந்த ஈரான் செஸ் வீராங்கனைக்கு ஸ்பெயின் குடியுரிமை!! வெளியான அறிவிப்பு!!

ஈரானில் பெண்கள் முகம் மற்றும் தலையை மறைக்கும் வகையில் ஹிஜாப் அணிந்துதான் செல்ல வேண்டும் என கட்டுப்பாடு உள்ளது.

இதை கண்காணிக்க ரோந்து பணியாளர்கள் (Guidance Patrol) அமைப்பு என ஒன்று 2005-ல் உருவாக்கப்பட்டது. காவல்துறைக்கு நிகராக இந்த அமைப்புக்கும் மத கட்டுப்பாடுகளை மீறுவோர்களை கைது நடவடிக்கைக்கு உள்ளாக்கும் அதிகாரம் உள்ளது. பெரும்பாலும் பெண்களின் உடை விஷயங்களில் ஷரியா சட்டத்தின்படி கட்டுப்பாடுகளை அமல்படுத்தும் நடவடிக்கைகளையே இந்த அமைப்பு எடுத்து வருகிறது.

கடந்த செப்டம்பரில் 22 வயதான ஈரானிய-குர்திஷ் பெண்ணான மஹ்ஸா அமினி (Mahsa Amini) என்பவர் ஹிஜாப் அணியாமல் இருந்ததற்காக இந்த அமைப்பு அவரை கைது செய்தது. காவலில் இருந்தபோது காவல்துறையினரின் தாக்குதலால் அவர் உயிரிழந்தார். இது உலகம் முழுவதும் மிகப்பெரிய அளவில் விமர்சிக்கப்பட்டது.

இந்த கட்டுப்பாடுகளை எதிர்க்கும் விதமாக உலகின் பல்வேறு பகுதிகளில் பல ஈரானிய பெண்கள் ஹிஜாப் அணிய மறுத்தனர். இந்நிலையில் கடந்த டிசம்பர் மாதம், கஜகஸ்தான் நாட்டில் நடைபெற்ற ஃபைட் வேர்ல்ட் ரேபிட் மற்றும் பிளிட்ஸ் சதுரங்க போட்டியில் (FIDE World Rapid and Blitz Chess Championship) ஈரான் நாட்டை சேர்ந்த 26 வயதான சரசதத் கதேமல்ஷரி (Sarasadat Khademalsharieh) பங்கேற்றார்.

அப்போது அவர், ஈரான் நாட்டின் பெண்களுக்கான ஆடை குறியீடுகளின் கீழ் கட்டாயமான ஹிஜாப் இல்லாமலேயே விளையாடினார். இதனையடுத்து அந்த ஈரானிய செஸ் வீராங்கனைக்கு ஈரானில் கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது.

ஆனால் சரசதத் இதற்கு அஞ்சவில்லை. தன் நாட்டின் மத அடிப்படைவாத தலைமைக்கு கீழ்படியாமல் வாழ்வதையும் அவர் மாற்றி கொள்ள விரும்பவில்லை. 2023 ஜனவரியில் ஸ்பெயின் நாட்டிற்கு அவர் குடிபெயர்ந்தார்.

தற்போது அவருக்கு ஸ்பெயின் அரசாங்கம் குடியுரிமை வழங்கியிருக்கிறது. சரசதத்தின் வழக்கில் சிறப்பு சூழ்நிலைகளை கணக்கில் கொண்டு அவருக்கு குடியுரிமை வழங்க அந்நாட்டு அமைச்சரவை ஒப்புதல் அளித்திருக்கிறது என்று ஸ்பெயின் அதிகாரப்பூர்வ அறிக்கை தெரிவித்திருக்கிறது.

Share

1 Comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
15 6
உலகம்செய்திகள்

அமெரிக்க உளவுத்தகவல் கசிவு! விசாரணைக்கு தயாராகும் ட்ம்பின் ஆதரவாளர்

ஈரானின் அணுசக்தி தளங்கள் முழுமையாக அழிக்கப்படவில்லை என்று அமெரிக்க உளவுத்துறையின் முதற்கட்ட மதிப்பீட்டில் வெிளியடப்பட்டமைக்கு மத்திய...

16 6
இந்தியாசெய்திகள்

41 ஆண்டுகளுக்குப் பின்னர் விண்வெளி சென்ற இந்தியா வீரர்

இந்தியாவிலிருந்து விண்வெளிக்கு 41 ஆண்டுகளுக்கு பின்னர் விண்வெளி வீரர்களில் ஒருவரான சுபான்ஷு சுக்லா அனுப்பப்பட்டுள்ளார். மனிதர்களை...

14 6
இலங்கைசெய்திகள்

இஸ்ரேலின் ஜனநாயக விரோத செயற்பாடு: விமல் வீரவன்சவின் குற்றச்சாட்டு

அமெரிக்காவின் முறையற்ற செயற்பாட்டை கண்டிக்கும் தற்றுணிவு அரசாங்கத்துக்கு கிடையாது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல்...

12 9
இலங்கைசெய்திகள்

இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகளுக்கு ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் பாராட்டு!

இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகள் குறித்து ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் பாராட்டுத் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு வருகை தந்துள்ள...