10 10
உலகம்செய்திகள்

ஆடம்பர Dior கைப்பை…!மனைவிக்காக மன்னிப்பு கோரிய தென் கொரிய ஜனாதிபதி

Share

ஆடம்பர Dior கைப்பை…!மனைவிக்காக மன்னிப்பு கோரிய தென் கொரிய ஜனாதிபதி

தென் கொரிய ஜனாதிபதி தன்னுடைய மனைவியை சுற்றி எழுப்பப்பட்டுள்ள சர்ச்சைகளுக்கு மன்னிப்பு கோரியுள்ளார்.

கடந்த 2022ம் ஆண்டு செப்டம்பரில் தென் கொரியா ஜனாதிபதியின் மனைவி மற்றும் நாட்டின் முதல் பெண்மணியான கிம் கியோன் ஹீ (Kim Keon Hee) 3 மில்லியன் won ($2,200; £1,800) மதிப்பு கொண்ட டியோர் பையை(Dior bag from a pastor) மத போதர் ஒருவரிடம் இருந்து வாங்கியதாக குற்றச்சாட்டு எழுப்பபட்டது.

இது தொடர்பான வீடியோ ஆதாரத்தை 2023ம் ஆண்டு பிற்பகுதியில் இடதுசாரி யூடியூப் சேனலான Voice of Seoul வெளியிட்டு நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியது.

அதே நேரத்தில் கிம் கியோன் ஹீ பங்குச் சந்தையிலும் விலை கையாடல்களில் மோசடி செய்ததாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றச்சாட்டை முன்வைத்த தோடு அவர் மீதான குற்றச்சாட்டு சுதந்திரமாக விசாரிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறது.

இந்நிலையில் தன் மனைவி கிம் கியோன் ஹீயை சுற்றி எழுப்பப்பட்டுள்ள ஆடம்பர டியோர் கைப்பை மற்றும் பங்கு கையாளுதல் குற்றச்சாட்டுகளுக்கு தென் கொரிய ஜனாதிபதி யூன் சுக் இயோல்(Yoon Suk Yeol) மன்னிப்பு கேட்டுள்ளார்.

இது தொடர்பாக தொலைக்காட்சி வழியாக நாட்டு மக்களிடம் பேசிய தென் கொரிய ஜனாதிபதி யூன் சுக் இயோல் தன் மனைவி மீதான சர்ச்சைகளுக்கு மன்னிப்பு கோரியுள்ளார்.

மேலும் நாட்டின் முதல் பெண்மணி தன்னுடைய நடத்தைகளில் சிறப்பாக இருந்து இருக்க வேண்டும், அதே சமயம் தற்போது அவர் மீது சுமத்தப்பட்டுள்ள சில குற்றச்சாட்டுகள் அவருக்கு எதிரான மிகைப்படுத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் என தெரிவித்துள்ளார்.

அத்துடன் நாட்டின் முதல் பெண்மணியின் கடமைகளை கண்காணிக்க அலுவலகம் அமைக்கப்படும் என்றும் அறிவித்தார், ஆனால் அவர் மீதான விசாரணை குறித்த கோரிக்கைக்கு எந்தவொரு பதிலையும் அவர் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...