10 10
உலகம்செய்திகள்

ஆடம்பர Dior கைப்பை…!மனைவிக்காக மன்னிப்பு கோரிய தென் கொரிய ஜனாதிபதி

Share

ஆடம்பர Dior கைப்பை…!மனைவிக்காக மன்னிப்பு கோரிய தென் கொரிய ஜனாதிபதி

தென் கொரிய ஜனாதிபதி தன்னுடைய மனைவியை சுற்றி எழுப்பப்பட்டுள்ள சர்ச்சைகளுக்கு மன்னிப்பு கோரியுள்ளார்.

கடந்த 2022ம் ஆண்டு செப்டம்பரில் தென் கொரியா ஜனாதிபதியின் மனைவி மற்றும் நாட்டின் முதல் பெண்மணியான கிம் கியோன் ஹீ (Kim Keon Hee) 3 மில்லியன் won ($2,200; £1,800) மதிப்பு கொண்ட டியோர் பையை(Dior bag from a pastor) மத போதர் ஒருவரிடம் இருந்து வாங்கியதாக குற்றச்சாட்டு எழுப்பபட்டது.

இது தொடர்பான வீடியோ ஆதாரத்தை 2023ம் ஆண்டு பிற்பகுதியில் இடதுசாரி யூடியூப் சேனலான Voice of Seoul வெளியிட்டு நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியது.

அதே நேரத்தில் கிம் கியோன் ஹீ பங்குச் சந்தையிலும் விலை கையாடல்களில் மோசடி செய்ததாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றச்சாட்டை முன்வைத்த தோடு அவர் மீதான குற்றச்சாட்டு சுதந்திரமாக விசாரிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறது.

இந்நிலையில் தன் மனைவி கிம் கியோன் ஹீயை சுற்றி எழுப்பப்பட்டுள்ள ஆடம்பர டியோர் கைப்பை மற்றும் பங்கு கையாளுதல் குற்றச்சாட்டுகளுக்கு தென் கொரிய ஜனாதிபதி யூன் சுக் இயோல்(Yoon Suk Yeol) மன்னிப்பு கேட்டுள்ளார்.

இது தொடர்பாக தொலைக்காட்சி வழியாக நாட்டு மக்களிடம் பேசிய தென் கொரிய ஜனாதிபதி யூன் சுக் இயோல் தன் மனைவி மீதான சர்ச்சைகளுக்கு மன்னிப்பு கோரியுள்ளார்.

மேலும் நாட்டின் முதல் பெண்மணி தன்னுடைய நடத்தைகளில் சிறப்பாக இருந்து இருக்க வேண்டும், அதே சமயம் தற்போது அவர் மீது சுமத்தப்பட்டுள்ள சில குற்றச்சாட்டுகள் அவருக்கு எதிரான மிகைப்படுத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் என தெரிவித்துள்ளார்.

அத்துடன் நாட்டின் முதல் பெண்மணியின் கடமைகளை கண்காணிக்க அலுவலகம் அமைக்கப்படும் என்றும் அறிவித்தார், ஆனால் அவர் மீதான விசாரணை குறித்த கோரிக்கைக்கு எந்தவொரு பதிலையும் அவர் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Share

Recent Posts

தொடர்புடையது
25 69149dba7d420
உலகம்செய்திகள்

முதுகலை, முனைவர் பட்ட மாணவர்களுக்கான கல்வி அனுமதி நடைமுறை இலகுபடுத்தப்பட்டது – மாகாண சான்றளிப்பு இனித் தேவையில்லை!

எதிர்வரும் 2026ஆம் ஆண்டு முதல் சர்வதேச மாணவர்கள் கல்வி அனுமதிகளைப் பெறும் முறையை கனடா இலகுவாக்க...

MediaFile 2 2
செய்திகள்இலங்கை

கெஹல்பத்தர பத்மே வாக்குமூலத்தின் அடிப்படையில்: முன்னணி நடிகை ஒருவர் விரைவில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைக்கப்படலாம்!

கைது செய்யப்பட்டுத் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள பாதாள உலகக் குழு உறுப்பினர் கெஹல்பத்தர பத்மே வழங்கிய வாக்குமூலத்தின்...

25 69148ab688d8c
செய்திகள்உலகம்

அமெரிக்காவிற்குத் திறமையான தொழிலாளர்கள் தேவை: H-1B விசா கட்டண உயர்வுக்குப் பின் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவிப்பு!

தனது நாட்டிற்கு வெளிநாடுகளில் இருக்கும் திறமையான தொழிலாளர்கள் மற்றும் சிறப்புத் திறன்களைக் கொண்டவர்கள் தேவை என...

1747801591 RAMITH 6
இலங்கைசெய்திகள்

நாகரிகமற்ற செயல்: ரூ. 296 மில்லியன் சொத்துக் குவிப்பு வழக்கில் பிணையில் வந்த கெஹெலியவின் மகன் ரமித் ரம்புக்வெல்ல

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் மகனும், முன்னாள் தனிப்பட்ட செயலாளருமான ரமித் ரம்புக்வெல்ல, நீதிமன்றத்திற்கு வெளியே...