25 677b910e69c41
உலகம்செய்திகள்

தென் கொரியாவில் பலியான 179 உயிர்கள்: இலங்கை விமான நிலையத்தில் அதிரடி மாற்றங்கள்

Share

தென் கொரியாவில் பலியான 179 உயிர்கள்: இலங்கை விமான நிலையத்தில் அதிரடி மாற்றங்கள்

இரத்மலானை சர்வதேச விமான நிலையத்தில் சில நிலையான நிர்மாணங்களால் ஏற்படக்கூடிய அபாயங்களைக் குறைக்கும் வகையில் நிர்மாணங்களை அகற்றுமாறு போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

தென் கொரியாவின் முவான் சர்வதேச விமான நிலையத்தில் அண்மையில் இடம்பெற்ற அனர்த்தத்தில் 179 உயிர்கள் பலியாகியமையை கருத்தில் கொண்டு இந்த பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

முன்னதாக விமான நிலையத்தின் நிலையான நிர்மாணத்துடன் தொடர்புடைய இடர்களை அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு அரசாங்கத்தையும் சிவில் விமான சேவை அதிகார சபையையும் வலியுறுத்தி இலங்கை விமான உரிமையாளர்கள் மற்றும் நடத்துநர்கள் சங்கம் முன்னதாக எச்சரிக்கைகளை விடுத்திருந்தது.

அதன்போது, சர்வதேச விமான நிலைய பாதுகாப்பு விதிமுறைகளை மீறும் வகையில் காலி வீதியின் எல்லையில் உள்ள 9 கன அடி சுவர் தொடர்பில் குறித்த சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த கட்டமைப்பினால் முவான் விமான நிலைய அனர்த்தம் போன்ற விபத்துக்கள் ஏற்படலாம் என எச்சரித்துள்ள சங்கம், சுவரை அகற்றுமாறும் வலியுறுத்தியுள்ளது.

Share
தொடர்புடையது
Melania Trump
உலகம்

ஈரானின் அடுத்த இலக்கு – ட்ரம்ப் குடும்பத்திற்கு உச்ச கட்ட பாதுகாப்பு.

ஈரானின் உச்சத் தலைவர் மற்றும் மூத்த அதிகாரிகள் கொல்லப்பட்ட கூட்டுத் தாக்குதலுக்கு பின்னர், ஈரானின் முக்கிய...

European Union ggg
உலகம்உலகம்

ஐரோப்பிய ஒன்றியத்திற்கு கடும் எச்சரிக்கை விடுத்த டொனால்ட் ட்ரம்ப்

ஐரோப்பிய ஒன்றியம், கூகுள் நிறுவனம் தனது தேடல் முடிவுகளில் சொந்த சேவைகளுக்கு முன்னுரிமை அளித்ததாகவும், ஐரோப்பிய...

arrested woman with handcuffs
உலகம்

நேட்டோவை உளவு பார்த்த சீன பெண்!

பெல்ஜியத்தின் மான்ஸ் பகுதியில் அமைந்துள்ள ‘ஷேப்’ எனப்படும் நேட்டோ இராணுவத் தலைமையகத் தளத்தில் பயிற்சிப் பணியாளராக...

உமா குமரன்
உலகம்

பிரித்தானிய அரசாங்கத்தில் முக்கிய பொறுப்பில் ஈழத்தமிழ்ப் பெண்

இலங்கைத் தமிழரான உமா குமரன், பிரித்தானியாவின் வெளிநாட்டு அமைச்சகத்தில் இணை அமைச்சராக பதவி வகித்து வந்த...