வட கொரியாவுக்கு தென் கொரியா பகீர் எச்சரிக்கை
உலகம்செய்திகள்

வட கொரியாவுக்கு தென் கொரியா பகீர் எச்சரிக்கை

Share

வட கொரியாவுக்கு தென் கொரியா பகீர் எச்சரிக்கை

எந்தவொரு அணு ஆயுத தாக்குதலும் வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன்னின் ஆட்சி முடிவுக்கு வழிவகுக்கும் என தென் கொரியா எச்சரிக்கை விடுத்துள்ளது.

தென் கொரியாவில் அணு ஆயுதங்களை நிலைநிறுத்த அமெரிக்கா
இந்த வாரம் தென் கொரியா மற்றும் அமெரிக்கா இடையிலான அணுசக்தி கூட்டமைப்பு ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக அமெரிக்காவின் USS கென்டக்கி கடந்த செவ்வாய்கிழமை பூசனுக்கு வருகை தந்து இருந்தார்.

மேலும் இந்த நிகழ்வின் தொடர்ச்சியாக 18,750 டன் ஓஹியோ-வகுப்பு அணுசக்தி நீர்மூழ்கி கப்பல் ஏவுகணையை அமெரிக்கா தென் கொரியாவில் நிலைநிறுத்தியுள்ளது.

இதன் மூலம் 1981ம் ஆண்டுக்கு பிறகு நீர்மூழ்கி அணுசக்தி கப்பல் ஏவுகணை தென்கொரியாவில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் அமெரிக்காவின் USS கென்டக்கி-யின் தென் கொரிய வருகைக்கும், 18,750 டன் ஓஹியோ-வகுப்பு அணுசக்தி நீர்மூழ்கி கப்பல் ஏவுகணையை நிலைநிறுத்துவத்துவதற்கு கண்டனம் தெரிவித்தும் வட கொரியா அணு ஆயுத தாக்குதல் குறித்து எச்சரிக்கை விடுத்து இருந்தது.

அதில், அமெரிக்க நீர்மூழ்கி அணுஆயுதத்தை நிலைநிறுத்துவது மற்றும் மற்ற மூலோபாய சொத்துகளை நிலைநிறுத்துவது, தங்களின் அணுஆயுத பயன்பாட்டிற்கான நிபந்தனையை பூர்த்தி செய்யக்கூடிய நிபந்தனையாகும் என்று எச்சரிக்கை விடுத்து இருந்தது.

வட கொரியாவின் இந்த எச்சரிக்கையை தொடர்ந்து, எந்தவொரு அணு ஆயுத தாக்குதலும் வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன்னின் ஆட்சி முடிவுக்கு வழிவகுக்கும் என்று தென் கொரியா எச்சரிக்கை விடுத்துள்ளது.

அமெரிக்கா-தென்கொரிய கூட்டணிக்கு எதிரான வடகொரியாவின் எந்த அணு ஆயுத தாக்குதலும், உடனடி பதில் நடவடிக்கையை எதிர்கொள்ள நேரிடும், மற்றும் அதன் விளைவுகள் வட கொரிய ஆட்சியின் முடிவாக இருக்கும் என்று சியோல் அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
images 13
செய்திகள்அரசியல்இலங்கை

தேசிய மக்கள் சக்தி அரசுக்கு எதிராகப் பொது எதிரணி: ஐக்கிய மக்கள் சக்தியுடன் தமிழ் தேசிய மக்கள் முன்னணியும் இணைவு – நுகேகொடையில் பேரணி!

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியினால் (SJB) ஒருங்கிணைக்கப்பட்டுள்ள பொது...

MediaFile 3 3
செய்திகள்உலகம்

லெபனானில் எல்லையைக் கடக்கும் இஸ்ரேலியச் சுவர்: UNIFIL ஆய்வு உறுதி – சுவரை அகற்றக் கோரி ஐ.நா. வலியுறுத்தல்!

லெபனானில் உள்ள நீலக் கோட்டைக் கடந்து இஸ்ரேலிய இராணுவத்தால் கட்டப்பட்ட ஒரு சுவர், டி ஃபேக்டோ...

MediaFile 2 4
இந்தியாசெய்திகள்

டெல்லி தாக்குதல்: கைப்பற்றப்பட்ட 3,000 கிலோ வெடிபொருள் பொலிஸ் நிலையத்தில் வெடிப்பு – தடயவியல் குழு உட்பட 7 பேர் பலி!

தலைநகர் டெல்லி செங்கோட்டை அருகே கடந்த நவம்பர் 10ஆம் திகதி நடத்தப்பட்ட கார் குண்டுத் தாக்குதல்...

images 12 1
இலங்கைஅரசியல்செய்திகள்

தேசிய மக்கள் சக்தியின் 2026 வரவு செலவுத் திட்டம்: 17 நாட்களுக்குக் குழு நிலை விவாதம் இன்று ஆரம்பம்!

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்ட 2026ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் (Budget) குழு...