14 4
உலகம்செய்திகள்

சில அகதிகள் திருப்பி அனுப்பப்படலாம்: ஜேர்மனி அமைச்சர் தகவல்

Share

சில அகதிகள் திருப்பி அனுப்பப்படலாம்: ஜேர்மனி அமைச்சர் தகவல்

சிரியாவிலிருந்து அகதிகளாக ஜேர்மனிக்கு வந்த சிலர், மீண்டும் சிரியாவுக்கே திருப்பி அனுப்பப்படலாம் என ஜேர்மன் உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

சிரிய ஜனாதிபதி பஷார் அல் அசாதின் வீழ்ச்சியைத் தொடர்ந்து, சிரியா நாட்டவர்கள் சிலர் சிரியாவுக்கே திருப்பி அனுப்பப்படலாம் என ஜேர்மனி உள்துறை அமைச்சரான நான்சி ஃப்ரேஸர் தெரிவித்துள்ளார்.

சிரியாவில் நிலைமை சீராகிவிட்டதால், எங்கள் நாட்டின் சட்டத்தின்படி ஜேர்மனியில் மக்களுக்கு இந்த பாதுகாப்பு அவசியமில்லை என்றால், புலம்பெயர்தல் மற்றும் அகதிகளுக்கான பெடரல் அலுவலகம் (BAMF) பாதுகாப்பு மானியங்களை மறுபரிசீலனை செய்து திரும்பப்பெறும் என்றார் அவர்.

வேலை அல்லது பயிற்சி இல்லாததால் ஜேர்மனியில் குடியிருக்க உரிமை இல்லாதவர்கள் மற்றும் தானாக முன்வந்து சிரியாவுக்குத் திரும்பாதவர்களுக்கு இது பொருந்தும் என்றும் அவர் கூறினார்.

என்றாலும், ஜேர்மனியுடன் நன்கு ஒருங்கிணைந்து வாழ்பவர்கள், வேலையில் இருப்பவர்கள், ஜெர்மன் மொழியைக் கற்றுக்கொண்டவர்கள் முதலானோர் ஜேர்மனியில் தங்க அனுமதிக்கப்பட வேண்டும் என்றும் நான்சி தெரிவித்தார்.

சிரியாவுக்குத் திரும்பிச் செல்ல விரும்பும் சிரியர்களுக்கு உதவிகள் அளிக்கப்படும், அதே நேரத்தில் குற்றவாளிகள் மற்றும் இஸ்லாமியவாதிகள் முடிந்தவரை விரைவாக நாடு கடத்தப்பட வேண்டும் என்றும் கூறிய நான்சி, அற்கான சட்டப்படியான நெறிமுறைகள் உள்ளன, சிரியாவில் நிலவும் நிலைமையைப் பொருத்து அவை பயன்படுத்தப்படும் என்றார்.

Share

Recent Posts

தொடர்புடையது
25 690749f63e1f3
இலங்கைசெய்திகள்

காவல்துறை உயர் மட்டத்தில் மாற்றம்: மூத்த டிஐஜி-களின் பதவிகள் இடமாற்றம் – நிர்வாகப் பிரிவில் சஞ்சீவ தர்மரத்ன நியமனம்!

காவல்துறையில் உள்ள மிக மூத்த அதிகாரிகளின் பதவிகள் மற்றும் கடமைகள் மாற்றியமைக்கப்படவுள்ளதாகக் காவல்துறை தலைமையக வட்டாரங்கள்...

image 870x 68edd5575b92d
செய்திகள்இலங்கை

கணேமுல்ல சஞ்சீவ கொலை: இஷாரா செவ்வந்தியின் ‘போலி கடவுச்சீட்டு நாடகம்’ – இரட்டிப்புக் கோப்பு உருவாக்கப்பட்டது அம்பலம்!

கணேமுல்ல சஞ்சீவவின் கொலைக்கு பின்னணியில் இருந்ததாக கருதப்படும் இஷாரா செவ்வந்தி, நேபாளத்தில் தயாரிக்கப்பட்ட முத்திரைப் பிழையான...

caption 1
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

நுவரெலியா சீதை அம்மன் ஆலயத்தில் உண்டியல் உடைப்பு: 6 உண்டியல்களில் இருந்து பெருந்தொகை பணம் கொள்ளை!

நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க சீதாஎலிய சீதை அம்மன் ஆலயத்தில் நேற்று முன்தினம் இரவு...

102018246 f892fa86 2cbc 44fd b1e2 ac87ac946aba
செய்திகள்இலங்கை

உயிர் அச்சுறுத்தல் காரணமாக பாதுகாப்பு கோரி ஞானசார தேரர் கோரிக்கை: ‘பாதாள உலகக் குழுவினர் சதி’ என குற்றச்சாட்டு!

தமக்கு உயிர் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் பாதுகாப்புப் பிரிவின் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டுமெனவும் பொதுபல சேனா...