1 1 scaled
உலகம்செய்திகள்

வந்தே பாரத் சொகுசு ரயிலின் ஸ்லீப்பர் கோச்

Share

வந்தே பாரத் சொகுசு ரயிலின் ஸ்லீப்பர் கோச்

வந்தே பாரத் சொகுசு ரயிலின் தூங்கும் வசதி கொண்ட பெட்டிகளுடன் இருக்கும் புகைப்படங்களை மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பகிர்ந்துள்ளார்.

அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம், தூங்கும் வசதி கொண்ட பெட்டிகளுடன் கூடிய வந்தே பாரத் ரயில் அறிமுகம் செய்யப்படவுள்ளது.

அண்மையில், தூங்கும் வசதி கொண்ட பெட்டிகளுடன் வந்தே பாரத் ரயில் அறிமுகப்படுத்த இந்திய ரயில்வே திட்டமிட்டுள்ளதாக ரயில்வே துறை அதிகாரிகளும் தெரிவித்தனர்.

தற்போது வரை, இந்தியா முழுவதும் இயக்கப்படும் வந்தே பாரத் ரயிலில் இருக்கை வசதி மட்டுமே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பயணிகளின் வசதியைக் கருத்தில் கொண்டு, வந்தே பாரத் ரயிலில் இந்த வசதியை செயல்படுத்துவதற்கான முயற்சியை ரயில்வே துறை முன்னெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

வந்தே பாரத் தூங்கும் வசதி ரயிலின் முதல் பதிப்பு சென்னையில் உள்ள இன்டக்ரல் கோச் பேக்டரியில் (ஐசிஎஃப்) தயாரிக்கப்பட்டு வருகிறது. அதாவது, 857 படுக்கைகள் கொண்ட பதிப்பு தயாரிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், வந்தே பாரத் ரயிலின் கான்செப்ட் புகைப்படங்களை மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ட்விட்டர் எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார்.

Share

Recent Posts

தொடர்புடையது
GGw2UsoWoAAu19A scaled 1
செய்திகள்அரசியல்இலங்கை

மொட்டு கட்சியில் இருந்து விலகினார் சோமரதன தேரர்! – திஸ்ஸகுட்டி ஆராச்சியின் போக்கிற்கு எதிர்ப்பு!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அநுராதபுர மாவட்டத் தலைவர் திஸ்ஸகுட்டி ஆராச்சியின் தன்னிச்சையான செயற்பாடுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து,...

images 15
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலவச விசா வழங்குவதில் சட்டத் தடை! – தனியார் நிறுவன ‘விசா டீல்’ வழக்கால் முட்டுக்கட்டை என ருவான் ரணசிங்க தகவல்!

இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளுக்கு இலவச விசா வழங்கும் திட்டத்தைச் செயல்படுத்துவதில் பாரிய சட்டச்...

1996569 stone quarry
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பண்டாரவளையில் அதிர்ச்சி: வெடிவைத்தபோது பாறைகள் சரிந்து விபத்து! – இடிபாடுகளுக்குள் சிக்கிய இருவரை மீட்கப் போராட்டம்!

பண்டாரவளை – மாபிட்டிய பகுதியில் அமைந்துள்ள கல் உடைக்கும் குவாரி ஒன்றில் இன்று காலை இடம்பெற்ற...

MediaFile 1 1
செய்திகள்உலகம்

குற்றங்களுக்கு வயது தடையில்லை! – ஆர்ஜென்டீனாவில் சிறார் குற்றவாளிகளுக்கான வயது 14 ஆகக் குறைப்பு; புதிய சட்டம் நிறைவேற்றம்!

ஆர்ஜென்டீனாவில் சிறார் குற்றவாளிகளாகக் கருதப்படும் குறைந்தபட்ச வயது வரம்பை 16-லிருந்து 14 ஆகக் குறைக்கும் வரலாற்றுச்...