1 1 scaled
உலகம்செய்திகள்

வந்தே பாரத் சொகுசு ரயிலின் ஸ்லீப்பர் கோச்

Share

வந்தே பாரத் சொகுசு ரயிலின் ஸ்லீப்பர் கோச்

வந்தே பாரத் சொகுசு ரயிலின் தூங்கும் வசதி கொண்ட பெட்டிகளுடன் இருக்கும் புகைப்படங்களை மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பகிர்ந்துள்ளார்.

அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம், தூங்கும் வசதி கொண்ட பெட்டிகளுடன் கூடிய வந்தே பாரத் ரயில் அறிமுகம் செய்யப்படவுள்ளது.

அண்மையில், தூங்கும் வசதி கொண்ட பெட்டிகளுடன் வந்தே பாரத் ரயில் அறிமுகப்படுத்த இந்திய ரயில்வே திட்டமிட்டுள்ளதாக ரயில்வே துறை அதிகாரிகளும் தெரிவித்தனர்.

தற்போது வரை, இந்தியா முழுவதும் இயக்கப்படும் வந்தே பாரத் ரயிலில் இருக்கை வசதி மட்டுமே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பயணிகளின் வசதியைக் கருத்தில் கொண்டு, வந்தே பாரத் ரயிலில் இந்த வசதியை செயல்படுத்துவதற்கான முயற்சியை ரயில்வே துறை முன்னெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

வந்தே பாரத் தூங்கும் வசதி ரயிலின் முதல் பதிப்பு சென்னையில் உள்ள இன்டக்ரல் கோச் பேக்டரியில் (ஐசிஎஃப்) தயாரிக்கப்பட்டு வருகிறது. அதாவது, 857 படுக்கைகள் கொண்ட பதிப்பு தயாரிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், வந்தே பாரத் ரயிலின் கான்செப்ட் புகைப்படங்களை மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ட்விட்டர் எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார்.

Share
தொடர்புடையது
MediaFile 7 1
உலகம்செய்திகள்

வடக்கு ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் : இவாட் கடற்கரைக்கு சுனாமி எச்சரிக்கை – ஒரு மீற்றர் அலைகள் உருவாகலாம்!

வடக்கு ஜப்பானின் கடற்பரப்பில் இன்று (நவம்பர் 9) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்கப் புவியியல் ஆய்வு...

1618851994 heroin boat
செய்திகள்இலங்கை

சீனிகம ஹெரோயின் கடத்தல் வழக்கு: மேலும் மூவர் கைது; 5.4 கிலோ ஹெரோயினும், 10.8 மில்லியன் ரூபா பணமும் பறிமுதல்!

சீனிகமப் பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் மூன்று பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், மேலும் மூன்று...

25 690f41c5a622b
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொட்டாஞ்சேனை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்: யாழ்ப்பாணம் மானிப்பாயில் பெண் உட்பட 3 சந்தேகநபர்கள் கைது!

கொழும்பு – கொட்டாஞ்சேனைப் பகுதியில் நேற்று (நவம்பர் 8) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில்,...

25 6906f19b49c03
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

பொலனறுவை வெலிகந்தையில் சோகம்: டிரக்டர் மோதி வீதியைக் கடந்த 8 வயது சிறுவன் பலி!

பொலனறுவை, வெலிகந்த – அசேலபுரப் பகுதியில் நேற்று (நவம்பர் 8) இரவு இடம்பெற்ற வீதி விபத்து...