1 19 1 scaled
உலகம்செய்திகள்

பிரித்தானியாவில் 16 வயது சிறுவன் கத்திக்குத்து! அதிரடி கைது

Share

பிரித்தானியாவில் 16 வயது சிறுவன் கத்திக்குத்து! அதிரடி கைது

பிரித்தானியாவில் 16 வயது சிறுவன் கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் சந்தேகத்தின் பேரில் 3 டீன் ஏஜ் சிறுவர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பிரித்தானியாவின் லூடன்(Luton) பகுதியில் நடந்த கத்திக்குத்து சம்பவத்தில் 16 வயது சிறுவன் கொல்லப்பட்டுள்ளார்.

3 டீன் ஏஜ் சிறுவர்கள் கத்தியால் குத்தப்பட்டு இருப்பதாக நேற்று இரவு 7 மணியளவில் Nunnery Lane பகுதிக்கு பெட்ஃபோர்ட்ஷையர் பொலிஸ் அதிகாரிகள் அழைக்கப்பட்டனர்.

இந்த வன்முறை சம்பவத்தில் அடையாளம் கண்டறியப்படாத ஒரு சிறுவன் பல கத்திக்குத்து காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார், ஆனால் சிகிச்சை பலனின்றி சிறிது நேரத்திலேயே உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டார்.

மேலும் கத்திக்குத்துக்கு ஆளான இரண்டு சிறுவர்களில் ஒருவர் உயிருக்கு ஆபத்தான பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

மற்றொரு சிறுவன் உயிருக்கு ஆபத்து இல்லாத காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில் 16 வயது டீன் ஏஜ் சிறுவன் கத்தியால் குத்தப்பட்டு உயிரிழந்த சம்பவத்தில் சந்தேகத்தின் பேரில் 3 டீன் ஏஜ் சிறுவர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அத்துடன் இந்த கத்திக்குத்து தாக்குதல் சம்பவத்தை இரண்டு மைல் தொலைவில் உள்ள சண்டன் பார்க் சாலை மாலை 4 மணிக்கு நடைபெற்ற மற்றொரு கத்திக்குத்து சம்பவத்துடன் பொலிஸார் தொடர்பு படுத்துகின்றனர்.

Share
தொடர்புடையது
images 24
செய்திகள்இலங்கைபிராந்தியம்

காட்டு யானையைச் சித்திரவதை செய்து தீ வைத்த சம்பவம்: சந்தேக நபர்களுக்கு டிசம்பர் 24 வரை விளக்கமறியல்!

சீப்புக்குளம் பகுதியில் காட்டு யானையொன்றைச் சித்திரவதை செய்து, அதன் உடலில் தீ வைத்த சம்பவத்துடன் தொடர்புடைய...

1743195570
செய்திகள்உலகம்

சிட்னி துப்பாக்கிச் சூடு: வெறுப்புப் பேச்சைத் தடுக்க அவுஸ்திரேலியாவின் புதிய சட்டங்கள் மற்றும் கடும் எச்சரிக்கை!

அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் யூத சமூகத்தினரை இலக்கு வைத்து நடத்தப்பட்ட கொடூரமான துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து,...

1739447780 5783
இந்தியாசெய்திகள்

இந்திய விமானங்களுக்கான வான்வெளித் தடையை ஜனவரி வரை நீடித்தது பாகிஸ்தான்!

இந்திய விமானங்கள் பாகிஸ்தான் வான்வெளியைப் பயன்படுத்துவதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிப்பதாக...

25 6939a0f597196 1
செய்திகள்இலங்கை

டிட்வா சூறாவளியின் தாக்கம்: 200 கடல் மைல் கடற்கரை மாசு – கடற்றொழிலுக்குப் பாரிய அச்சுறுத்தல்!

சமீபத்தில் நிலவிய ‘டிட்வா’ (Ditwah) சூறாவளி மற்றும் வெள்ளப்பெருக்கினால் இலங்கையின் சுமார் 200 கடல் மைல்...