உலகம்செய்திகள்

பிரித்தானியாவில் 16 வயது சிறுவன் கத்திக்குத்து! அதிரடி கைது

1 19 1 scaled
Share

பிரித்தானியாவில் 16 வயது சிறுவன் கத்திக்குத்து! அதிரடி கைது

பிரித்தானியாவில் 16 வயது சிறுவன் கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் சந்தேகத்தின் பேரில் 3 டீன் ஏஜ் சிறுவர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பிரித்தானியாவின் லூடன்(Luton) பகுதியில் நடந்த கத்திக்குத்து சம்பவத்தில் 16 வயது சிறுவன் கொல்லப்பட்டுள்ளார்.

3 டீன் ஏஜ் சிறுவர்கள் கத்தியால் குத்தப்பட்டு இருப்பதாக நேற்று இரவு 7 மணியளவில் Nunnery Lane பகுதிக்கு பெட்ஃபோர்ட்ஷையர் பொலிஸ் அதிகாரிகள் அழைக்கப்பட்டனர்.

இந்த வன்முறை சம்பவத்தில் அடையாளம் கண்டறியப்படாத ஒரு சிறுவன் பல கத்திக்குத்து காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார், ஆனால் சிகிச்சை பலனின்றி சிறிது நேரத்திலேயே உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டார்.

மேலும் கத்திக்குத்துக்கு ஆளான இரண்டு சிறுவர்களில் ஒருவர் உயிருக்கு ஆபத்தான பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

மற்றொரு சிறுவன் உயிருக்கு ஆபத்து இல்லாத காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில் 16 வயது டீன் ஏஜ் சிறுவன் கத்தியால் குத்தப்பட்டு உயிரிழந்த சம்பவத்தில் சந்தேகத்தின் பேரில் 3 டீன் ஏஜ் சிறுவர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அத்துடன் இந்த கத்திக்குத்து தாக்குதல் சம்பவத்தை இரண்டு மைல் தொலைவில் உள்ள சண்டன் பார்க் சாலை மாலை 4 மணிக்கு நடைபெற்ற மற்றொரு கத்திக்குத்து சம்பவத்துடன் பொலிஸார் தொடர்பு படுத்துகின்றனர்.

Share
Related Articles
29 2
உலகம்செய்திகள்

செங்கடலில் அடுத்தடுத்து அமெரிக்க போர் விமானங்கள் விபத்து: உயிர் தப்பிய விமானிகள்!

செங்கடலில் அமெரிக்க போர் விமானம் ஒன்று விமானம் தாங்கி கப்பலில் தரையிறங்கும் போது ஏற்பட்ட விபத்தில்...

26 4
உலகம்செய்திகள்

பெரிய அறிவிப்பு ஒன்று விரைவில் வெளியாகும்: ட்ரம்ப் செய்தியால் பரபரப்பாகும் இணையம்

அதிரவைக்கும் மிகப்பெரிய அறிவிப்பு ஒன்று விரைவில் வெளியாகும் என ட்ரம்ப் கூறியுள்ள விடயத்தால் இணையம் பரபரப்பாகியுள்ளது....

27 3
உலகம்செய்திகள்

அணு ஆயுத நாடுகள் 2024: இந்தியா எங்கே உள்ளது? – அதிர்ச்சி தரும் உண்மைகள்!

இந்தியா-பாகிஸ்தான் இடையே அதிகரித்து வரும் போர் பதற்றம் இருநாட்டு மக்களிடையே உச்சக்கட்ட விழிப்பு நிலையை ஏற்படுத்தியுள்ள...

28 3
உலகம்செய்திகள்

போரில் பாகிஸ்தான் வென்றால் அந்த இந்திய நடிகை வேண்டும் – மதகுரு சர்ச்சை பேச்சு

காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 26 பேர் உயிரிழந்தனர்....