twitter 1637066551
உலகம்செய்திகள்

ட்விட்டர் பதிவு! – பெண்ணுக்கு 34 ஆண்டுகள் சிறை

Share

சவூதி அரேபியாவில் ட்விட்டர் பதிவுகளுக்காக ஒரு பெண்ணுக்கு 34 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக ஏ.எப்.பி செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

34 வயது சல்மா அல் ஷெஹாப் பொது ஒழுங்கைச் சீர்குலைக்க முயன்றவர்களுக்கு உதவியதாக இம்மாதம் 9ஆம் திகதி தீர்ப்பளிக்கப்பட்டது என்று நீதிமன்ற ஆவணங்கள் குறிப்பிட்டன.

இரு பிள்ளைகளுக்குத் தாயான ஷெஹாப் பிரிட்டனின் லீட்ஸ் பல்கலைக்கழகத்தில் கலாநிதிப் பட்டம் படித்துக்கொண்டிருந்தார். சவூதி அரேபியாவில் பெண்கள் உரிமைகள் குறித்து அவர் அடிக்கடி ட்விட்டரில் பதிவிட்டு வந்துள்ளார். ட்விட்டரில் சுமார் 2,600 பேர் அவரைப் பின்தொடர்கின்றனர்.

2021ஆம் ஆண்டு ஜனவரி மாதம், பல்கலைக்கழக விடுமுறைக்காக சவூதி அரேபியாவுக்குத் திரும்பியபோது ஷெஹாப் கைது செய்யப்பட்டார்.

முன்னதாக அவருக்கு 6 ஆண்டுச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. ஆனால் இம்மாதம் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் அவரின் தண்டனை கடுமையாக்கப்பட்டது. தண்டனைக்கு எதிராக 30 நாட்களுக்குள் ஷெஹாப் மேன்முறையீடு செய்யலாம்.

#world

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
25 690f41c5a622b
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொட்டாஞ்சேனை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்: யாழ்ப்பாணம் மானிப்பாயில் பெண் உட்பட 3 சந்தேகநபர்கள் கைது!

கொழும்பு – கொட்டாஞ்சேனைப் பகுதியில் நேற்று (நவம்பர் 8) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில்,...

25 6906f19b49c03
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

பொலனறுவை வெலிகந்தையில் சோகம்: டிரக்டர் மோதி வீதியைக் கடந்த 8 வயது சிறுவன் பலி!

பொலனறுவை, வெலிகந்த – அசேலபுரப் பகுதியில் நேற்று (நவம்பர் 8) இரவு இடம்பெற்ற வீதி விபத்து...

image b8b525779a
உலகம்செய்திகள்

பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி: இஸ்தான்புல் பேச்சுவார்த்தை உடன்பாடின்றி முறிந்தது – அவநம்பிக்கை அதிகரிப்பு!

துருக்கியின் இஸ்தான்புல் நகரில் நடந்து வந்த பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு இடையேயான அமைதிப்...

download
உலகம்செய்திகள்

உக்ரைன் மீதான ரஷ்யத் தாக்குதல்: முக்கிய எரிசக்தி மையங்கள் அழிவு – குளிர்காலத்தில் பல பகுதிகளில் மின்சாரம் துண்டிப்பு!

உக்ரைனின் முக்கிய எரிசக்தி மையங்கள் மீது ரஷ்யா மேற்கொண்ட கடுமையான தாக்குதல்களின் விளைவாக, அந்நாட்டின் பல...