23 5
உலகம்செய்திகள்

இந்தியாவின் 12 ஆளில்லா விமானங்களை சுட்டு வீழ்த்தியுள்ளதாக அறிவித்துள்ள பாகிஸ்தான்

Share

பாகிஸ்தானுக்குள் பல இடங்களை குறிவைத்து, வான்வழித் தாக்குதல்கள் நடத்திய ஒரு நாளுக்குப் பின்னர், இந்தியா அனுப்பிய 12 ஆளில்லாத ட்ரோன்களை தாம் சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது.

தமது வான்வெளியில் அத்துமீறி பிரவேசித்ததாகக் கூறி இந்த ஆளில்லா விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் இராணுவம் தெரிவித்துள்ளது.

இது இரு அணு ஆயுத நாடுகளுக்கும் இடையே பரந்த மோதலுக்கான அச்சத்தை ஏற்படுத்தியதாக சர்வதேச ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இஸ்ரேலில் தயாரிக்கப்பட்ட ஹரோப் ட்ரோன்கள் என அடையாளம் காணப்பட்ட இந்திய ட்ரோன்கள் பாகிஸ்தானின் இரண்டு பெரிய நகரங்களான கராச்சி மற்றும் லாகூர் அருகே உட்பட பல்வேறு இடங்களில் இடைமறிக்கப்பட்டன.

அத்துடன் ட்ரோன்களின் சிதைவுகள்; தற்போது சேகரிக்கப்பட்டு வருவதாக, பாகிஸ்தானின் இராணுவ பேச்சாளர்; மேஜர் ஜெனரல் அகமது செரீப் சவுத்ரி தெரிவித்துள்ளார். இந்திய ட்ரோன்கள் பாகிஸ்தான் வான்வெளியில் தொடர்ந்து அனுப்பப்படுகின்றன.

இந்த ஆக்கிரமிப்புக்காக இந்தியா தொடர்ந்து விலை கொடுக்க வேண்டியிருக்கும் என்றும் சவுத்ரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்திய ட்ரோன் தாக்குதல்;கள் காரணமாக, ஒரு பொதுமகன் கொல்லப்பட்டதாகவும், நான்கு படை வீரர்கள் காயமடைந்ததாகவும் பாகிஸ்தான் இராணுவம் தெரிவித்துள்ளது.

ட்ரோன்களில் ஒன்று லாகூர் அருகே உள்ள இராணுவ இலக்கைத் தர்கியதாகவும் கூறப்படுகிறது. எனினும் இந்தியாவின் பாதுகாப்பு அமைச்சகம், பாகிஸ்தானின் இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கவில்லை.

Share
தொடர்புடையது
Untitled 82
செய்திகள்உலகம்

செல்லப் பிராணிக்காக வேலையைத் துறந்து சட்டம் பயின்ற சீனப் பெண்!

சீனாவின் பீஜிங் நகரைச் சேர்ந்த லீ யிஹான் (Li Yihan) என்ற பெண், விஷம் கலந்த...

Untitled 81
செய்திகள்இலங்கை

எரிபொருள் நிலைய உரிமையாளர்கள் நாளை போராட்டம்: பெட்ரோல், டீசல் விநியோகத்தில் சிக்கல் ஏற்பட வாய்ப்பு!

பல்வேறு தீர்க்கப்படாத கோரிக்கைகளை முன்வைத்து, நாடு முழுவதுமுள்ள எரிபொருள் நிலைய உரிமையாளர்கள் நாளை (ஏப்ரல் 06,...

Untitled 80
உலகம்செய்திகள்

பிடிபட்ட அமெரிக்க விமானி குறித்து ஈரான் நெகிழ்ச்சி அறிக்கை: “கைதி அல்ல, எமது நாட்டின் விருந்தினர்!”

வளைகுடா பிராந்தியத்தில் போர் பதற்றம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள சூழலில், ஈரானியப் படைகளால் சிறைபிடிக்கப்பட்ட அமெரிக்க விமானி...

Untitled 79
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மட்டக்களப்பில் அதிரடி: நவீன ஸ்கேனருடன் புதையல் தோண்டிய இரு பெண்கள் உட்பட 11 பேர் கைது!

மட்டக்களப்பு, வெல்லாவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட திக்கோடை பகுதியில் சட்டவிரோதமான முறையில் புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்ட...