tamilni 9 scaled
உலகம்செய்திகள்

ஜெருசலேமில் துப்பாக்கிச் சூடு: உரிமை கோரிய ஹமாஸ்

Share

ஜெருசலேமில் துப்பாக்கிச் சூடு: உரிமை கோரிய ஹமாஸ்

ஜெருசலேம் நகரில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுக்கு ஹமாஸ் தரப்பினர் உரிமை கோரியுள்ளனர்.

ஜெருசலேம் நகரில் உள்ள பேருந்து நிலையம் ஒன்றில் இன்று காலை நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் மூன்று பேர் பலியாகியுள்ளனர்.

மேலும், 16 பேர் காயமடைந்துள்ளதுடன் அவர்களில் 3 பேரின் நிலைமை கவலைகிடமாக உள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்தநிலையில் குறித்த துப்பாக்கி சூட்டு சம்பவத்தை ஹமாஸ் தரப்பினர் பொறுப்பேற்றுள்ளனர். அதேநேரம் ஹமாஸ் மற்றும் இஸ்ரேலுக்கு இடையிலான போர் நிறுத்தம் நீடிக்கப்பட்டுள்ள சந்தர்ப்பத்தில் ஹமாஸ் இந்த தாக்குதலை நடத்தியுள்ளது.

இதேவேளை, பாதுகாப்பு தரப்பினர் நடத்திய துப்பாக்கி பிரயோகத்தில் பொது மக்கள் மீது துப்பாக்கி சூட்டை மேற்கொண்ட இருவரும் கொல்லப்பட்டதாக சர்வதேச ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன் இஸ்ரேலுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அமெரிக்க இராஜாங்க செயலாளர் எண்டனி பிளிங்கன் குறித்த துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பில் இஸ்ரேல் அதிகாரிகளுடன் கலந்துரையாடியதாக தெரிவிவிக்கப்படுகிறது.

Share
தொடர்புடையது
22 3
செய்திகள்இலங்கை

அயதுல்லா அலி கமேனியின் மறைவு: கொழும்பிலுள்ள ஈரானிய தூதரகத்தில் அமைச்சர் விஜித ஹேரத் இரங்கல்!

ஈரான் உச்சத் தலைவர் அயதுல்லா அலி கமேனியின் மறைவு குறித்து இலங்கை அரசாங்கம் மற்றும் மக்களின்...

20 2
உலகம்செய்திகள்

மில்லியன் கணக்கான மக்கள் திரள்வர் என எதிர்பார்ப்பு: அயதுல்லா அலி கமேனியின் இறுதிச் சடங்கு ஒத்திவைப்பு!

அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களில் கொல்லப்பட்ட ஈரானின் உச்சத் தலைவர் அயதுல்லா அலி கமேனியின்...

19 1
செய்திகள்உலகம்

ஈரான் மீதான அமெரிக்க – இஸ்ரேலிய தாக்குதல்: ஐக்கிய நாடுகள் சபையின் விசாரணைக் குழு கடும் கண்டனம்!

ஈரானில் இடம்பெறும் மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை செய்து வரும் ஐக்கிய நாடுகள் சபையின்...

18 3
செய்திகள்உலகம்

ஈரான் மீதான அமெரிக்கத் தாக்குதல் சரியானது: அமெரிக்க வெளிவிவகாரக் குழுத் தலைவர் பிரையன் மாஸ்ட் அதிரடி!

அல்ஜெசீரா ஊடகத்திற்கு வழங்கிய பிரத்யேக நேர்காணலில், அமெரிக்கப் பிரதிநிதிகள் சபையின் வெளிவிவகாரக் குழுத் தலைவர் பிரையன்...