tamilni 62 scaled
உலகம்செய்திகள்

மீண்டும் பாகிஸ்தானின் பிரதமராகும் ஷெபாஸ் ஷெரீப்

Share

பாகிஸ்தானில் ஷெபாஸ் ஷெரீப் இன்று 33வது பிரதமராக இன்று பதவி ஏற்க உள்ளார்.

பல்வேறு கலவர சம்பவங்களுக்கு இடையே பாகிஸ்தானில் கடந்த மாதம் 8ஆம் திகதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து, நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லீம் லீக் – நவாஸ் கட்சியும், பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசீர் பூட்டோவின் மகன் பிலாவல் பூட்டோவின் பாகிஸ்தான் மக்கள் கட்சியும் கணிசமான தொகுதிகளை வென்றன.

பாகிஸ்தான் முஸ்லீம் லீக் – நவாஸ் கட்சி முழு பெரும்பான்மையை பெறத் தவறினாலும், மொத்தம் 75 இடங்களைப் பெற்று வெற்றி கண்டது.

இந்த நிலையில், பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கூட்டணி இணைந்து ஆட்சி அமைக்க முடிவு செய்யப்பட்டது.

இதன்மூலம் ஷெபாஸ் ஷெரீப் (77) நாட்டின் 33வது பிரதமராக தெரிவானார். அதேபோல் நாடாளுமன்ற சபாநாயகர், துணை சபாநாயகர் ஆகியோரும் தெரிவு செய்யப்பட உள்ளனர்.

Share
தொடர்புடையது
03 19
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் தங்கத்தின் விலை சடுதியாக வீழ்ச்சி: இன்று ஒரே நாளில் ரூ. 13,000 குறைவு!

உலக சந்தையில் தங்கத்தின் விலை வீழ்ச்சியடைந்ததை அடுத்து, இலங்கையிலும் தங்கத்தின் விலை கணிசமாகக் குறைந்துள்ளதாக சந்தைத்...

25 10
இந்தியாசெய்திகள்

டெல்லி தீ விபத்து: மூன்று குழந்தைகள் உட்பட ஒன்பது பேர் பலி; பிரதமர் மோடி இரங்கல்!

இந்தியத் தலைநகர் டெல்லியின் பாலம் (Palam) பகுதியில் உள்ள நான்கு மாடிக் கட்டடம் ஒன்றில் இன்று...

20 17
செய்திகள்அரசியல்இலங்கை

நாமலுக்கு எதிரான மின்சாரக் கட்டண நிலுவை வழக்கு: ஜூலை 1-ம் திகதி உயர் நீதிமன்றத்தில் விசாரணை!

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் திருமண நிகழ்விற்காகப் பயன்படுத்தப்பட்ட மின்சாரத்திற்கான 20 இலட்சம் ரூபாவிற்கும் (2...

19 15
செய்திகள்உலகம்

அலி லாரிஜானி படுகொலைக்கு ஈரான் பதிலடி: டெல் அவிவ் மீது கிளஸ்டர் ரக குண்டுகளால் தாக்குதல்!

ஈரானின் மூத்த பாதுகாப்புத் தலைவரான அலி லாரிஜானி, இஸ்ரேலியத் தாக்குதலில் கொல்லப்பட்டதற்குப் பதிலடியாக, இஸ்ரேலின் டெல்...