1 19
உலகம்செய்திகள்

பாகிஸ்தானில் உருவாகியுள்ள கடும் பொருளாதார நெருக்கடி

Share

பாகிஸ்தானில் உருவாகியுள்ள கடும் பொருளாதார நெருக்கடி

பாகிஸ்தானில் கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவிவரும் நிலையில் 74வீத மக்கள் தங்களுடைய அன்றாட செலவுகளுக்கு கூட வருமானம் இல்லாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானை சேர்ந்த நகர்ப்புற பகுதிகளில் பொதுமக்கள் பொருளாதார சிக்கல்களுக்கு ஆளாவது கடந்த ஓராண்டு காலத்தில் 14 வீதமாக அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பாகிஸ்தானின் நகர்ப்புற பகுதிகளில் பல்ஸ் கொன்சல்டண்ட் என்ற அமைப்பு மக்களின் பொருளாதார சூழல்கள் குறித்து ஆய்வு நடத்தி முடிவுகளை வெளியிட்டிருக்கிறது.

இதன்படி பாகிஸ்தானை சேர்ந்த நகர்ப்புற மக்களில் 74 வீத மக்கள், தங்களின் மாதாந்த செலவினங்களுக்கு போதுமான வருமானத்தை கூட ஈட்ட முடியவில்லை.

இது 2023 ஆம் ஆண்டில் 60 வீதமாக இருந்த நிலையில் தற்போது 74 என உயர்ந்துள்ளது.

இதனையடுத்து 60 வீதமானோர் தமக்கான மளிகை பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய செலவினங்களை கூட குறைத்துக் கொள்ள வேண்டிய நிலைக்கு ஆளாகியுள்ளனர்.

40 வீதமானோர்; மாதந்தோறும் கடன் வாங்கி தான் தங்களது செலவுகளை மேற்கொள்கிறார்கள் அத்துடன் 10 வீதமானோர் தங்களுடைய பிரதான வேலை போக பகுதிநேர வேலைக்கு சென்று தான் தங்களின் செலவினங்களை கவனித்துக் கொள்கிறார்கள்.

பாகிஸ்தான் 240 மில்லியன் மக்கள் தொகை கொண்ட நாடாகும். அங்கே 56 வீத மக்கள் தங்களுடைய வருமானத்தை அப்படியே செலவு செய்கின்றனர்.

செலவு போக எதிர்காலத்திற்காக சேமித்து வைப்பதற்கு அவர்களிடம் எந்த தொகையும் மீதம் இருப்பதில்லை என ஆய்வில் தெரியவந்துள்ளது.

இந்தநிலையில் பாகிஸ்தான் அரசின் நிதி நெருக்கடியை சமாளிக்க உலக வங்கி உள்ளிட்ட அமைப்புகள் கடன் வழங்கியுள்ளன. சீனா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளும் கூட உதவிக்கரம் நீட்டியுள்ளன.

Share
தொடர்புடையது
images 5 5
செய்திகள்இலங்கை

திருமலை புத்தர் சிலை அகற்றம்: அமைதியின்மை குறித்துப் பொலிஸ் அறிக்கை – “சமாதானத்திற்காகவும், பாதுகாப்பிற்காகவும் அகற்றினோம்” என விளக்கம்!

திருகோணமலை துறைமுகப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கடற்கரைப் பிரதேசத்தில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட புத்தர் சிலை ஒன்றை அகற்றியமை...

images 4 6
செய்திகள்இலங்கை

இலங்கையில் பெண்களுக்கு எதிரான வன்முறை அதிகரிப்பு: வீட்டு வன்முறை உச்சம்!

2024 நவம்பர் மாதம் முதல் இவ்வாண்டு ஒக்டோபர் மாதம் வரை மகளிர் மற்றும் சிறுவர்கள் அலுவல்கள்...

images 3 6
செய்திகள்இலங்கை

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறிய 31 தமிழக மீனவர்களுக்கு 10 வருடங்கள் ஒத்திவைக்கப்பட்ட சிறைத் தண்டனை விதிப்பு!

இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து கடற்றொழிலில் ஈடுபட்ட 31 தமிழக கடற்றொழிலாளர்களுக்கு பருத்தித்துறை நீதிமன்றம் 10...

25 691abc1d14e03
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தாயை பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற 13 வயது மகள் விளக்கமறியலில்!

பதுளைப் பிரதேசத்தில், தனது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த தாயின் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த...