24 661774c1ea7ba
உலகம்செய்திகள்

Voting Machine -ல் இருப்பது எங்களோட மைக் சின்னமே இல்லை.. நாம் தமிழர் சீமானுக்கு தொடரும் பிரச்சனை

Share

Voting Machine -ல் இருப்பது எங்களோட மைக் சின்னமே இல்லை.. நாம் தமிழர் சீமானுக்கு தொடரும் பிரச்சனை

வாக்கு இயந்திரத்தில் ஸ்விட்ச் உள்ள மைக் சின்னத்தை ஓட்டுகிறார்கள் என்று நாம் தமிழர் கட்சி புகார் தெரிவித்துள்ளது.

சீமானின் கட்சிக்கு தொடர்ந்து நெருக்கடி வந்து கொண்டே தான் இருக்கிறது. குறிப்பாக, கர்நாடகத்தை சேர்ந்த பாரதிய மக்கள் ஐக்கிய கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கிய நிலையில், நாம் தமிழர் கட்சிக்கு மைக் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்தது.

பின்னர், படகு அல்லது பாய்மர படகு சின்னத்தை ஒதுக்கி தரும்படி நாம் தமிழர் கட்சி சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டும் தேர்தல் ஆணையம் அதனை நிராகரித்து மைக் சின்னத்தை உறுதி செய்தது.

இந்நிலையில், நாம் தமிழர் கட்சியினர் மைக் சின்னத்தை வைத்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மக்களவை தேர்தல் ஏப்ரல் 19 -ம் திகதி நடைபெறவுள்ள நிலையில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் கட்சி சின்னம் வேட்பாளர் பெயர், புகைப்படம் ஆகியவை ஒட்டப்பட்டு வருகின்றன.

இதில், வாக்குப்பதிவு இயந்திரங்களில் ஒட்டப்பட்டுள்ள மைக் சின்னம் வேறு மாதிரி இருப்பதாக நாம் தமிழர் கட்சியினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

தேர்தல் ஆணையம் எங்களுக்கு கொடுத்தது ஆன் – ஆஃப் ஸ்விட்ச் இல்லாத மைக் சின்னம் ஆகும். ஆனால், வாக்குப்பதிவு எந்திரங்களில் ஸ்விட்ச் உள்ள மைக் சின்னம் ஒட்டப்பட்டுள்ளது. இது தொடர்பாக நாம் தமிழர் கட்சியினர் புகார் அளித்துள்ளனர்.

Share
தொடர்புடையது
30 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ரியாத் மற்றும் டுபாய்க்கான விமான சேவைகளை மீண்டும் ஆரம்பிக்கிறது ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்!

மத்திய கிழக்கில் நிலவும் மோதல் நிலைமைகளுக்கு மத்தியில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த ரியாத் மற்றும் டுபாய்க்கான தினசரி...

29 2
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

சர்வதேச பொருளாதார சவால்களை எதிர்கொள்ள இலங்கை தயார்: மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க நம்பிக்கை

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு...

23 4
செய்திகள்இலங்கை

தமிழக சட்டமன்ற தேர்தல்: தவெக-அதிமுக கூட்டணி குறித்து வெளியாகும் பரபரப்பு தகவல்கள்

தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, நடிகர் விஜய்யின்...

22 7
செய்திகள்அரசியல்இலங்கை

முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் அடிப்படை உரிமை மனு: விசாரணை வரும் 13-ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது...