tamilni 41 scaled
உலகம்செய்திகள்

பாரீஸ் ஒலிம்பிக் போட்டிகளில் முதன்முறையாக ரொக்கப்பரிசு வழங்க முடிவு செய்துள்ள அமைப்பு

Share

பாரீஸ் ஒலிம்பிக் போட்டிகளில் முதன்முறையாக ரொக்கப்பரிசு வழங்க முடிவு செய்துள்ள அமைப்பு

பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் 2024ஆம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற உள்ள நிலையில், முதன்முறையாக, ஒலிம்பிக் போட்டிகளில் தங்கப்பதக்கம் வெல்வோருக்கு ரொக்கப்பரிசு வழங்க சர்வதேச தடகள அமைப்பு முடிவு செய்துள்ளது.

ஒலிம்பிக் போட்டிகளில் வெற்றி பெருவோருக்கு என்ன கிடைக்கும் என்று யோசித்திருக்கிறீர்களா? உண்மையில், ஒலிம்பிக் போட்டிகளில் வெற்றி பெருவோருக்கு முறையே, தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்கள் வழங்கப்படுவதை அனைவரும் அறிவோம்.

ஆனால், சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி, ஒலிம்பிக் போட்டிகளில் வெற்றி பெருவோருக்கு பணம் எதையும் பரிசாக வழங்குவதில்லை.

தங்கள் நாட்டு வீரர் வெற்றி பெற்றதால், அதாவது, தங்கள் நாட்டுக்கு அவர்கள் பெருமை சேர்த்ததால், அந்தந்த நாடுகள் தங்கள் வீரர்களுக்கு ரொக்கப் பரிசு வழங்குகின்றன. அந்த தொகை, நாட்டுக்கு நாடு மாறுபடும்.

இந்நிலையில், சர்வதேச தடகள அமைப்பு (World Athletics, the international athletics federation), முதன்முறையாக, ஒலிம்பிக் தடகளப் போட்டிகளில் தங்கப்பதக்கம் வெல்வோருக்கு ரொக்கப்பரிசு வழங்க முடிவுசெய்துள்ளது.

அவ்வகையில், 2024 பாரீஸ் ஒலிம்பிக் போட்டிகளில், அதாவது, தடகளப்போட்டிகளில் தங்கப்பதக்கம் வெல்வோருக்கு, 50,000 டொலர்கள் ரொக்கப்பரிசு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச தடகள அமைப்பின் தலைவரான Sebastian Coe தெரிவித்துள்ளார்.

மேலும், Relay race போன்ற விளையாட்டுகளில் தங்கப்பதக்கம் வெல்வோர், அந்த 50,000 டொலர்களை தங்களுக்குள் பங்கிட்டுக்கொள்ளவேண்டும்.

அத்துடன், 2028 லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் போட்டிகளின்போது, வெள்ளி மற்றும் வெண்கலப்பதக்கம் வெல்வோருக்கும் ரொக்கப்பரிசு வழங்க திட்டமிட்டுவருகிறது, சர்வதேச தடகள அமைப்பு.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...