24 65bb24d6ab848
உலகம்செய்திகள்

வாடகை வீட்டின் படுக்கை அறையில் ரகசிய பேனா கேமரா.., உடை மாற்றுவதை வீடியோ எடுத்த உரிமையாளரின் மகன்

Share

வாடகை வீட்டின் படுக்கை அறையில் பேனா கேமரா வைத்து பெண்கள் உடை மாற்றுவதை பதிவு செய்த வீட்டின் உரிமையாளர் மகனை பொலிஸார் கைது செய்தனர்.

சென்னை ராயபுரம் பகுதியில் இளம்பெண் ஒருவர் தனது கணவர் மற்றும் மகனுடன் வாடகை வீட்டில் வசித்து வருகிறார்.

இந்நிலையில், நேற்று காலை தனது படுக்கை அறையில் புதிதாக ஒரு பேனா இருப்பதை மனைவி பார்த்தார். அதனை எடுத்து ஆய்வு செய்த போது பேனா கேமரா என்பது தெரியவந்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த மனைவி தனது கணவருக்கு தகவல் தெரிவித்தார். பின்னர், வீட்டிற்கு வந்து பேனா கேமராவை பார்த்த கணவர் அதில் தனது மனைவி உடை மாற்றும் வீடியோக்கள் இருந்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த கணவர் ராயபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். பின்னர் பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது, இரண்டாவது தளத்தில் வசித்து வரும் வீட்டின் உரிமையாளர் மகன் இப்ராஹிம், படுக்கை அறையில் பேனா கேமராவை வைத்தது தெரியவந்தது.

மேலும், தனியார் மருத்துவக் கல்லூரியில் எம்டிஎஸ் இறுதியாண்டு படித்து வரும் இப்ராஹிம் பெண்களுக்கு தெரியாமல் கேமரா மூலம் வீடியோக்களை எடுத்திருப்பதும் தெரியவந்தது. பின்னர், இப்ராஹிமை பொலிஸார் கைது செய்ததுடன் அவரிடம் இருந்த கேமராவையும் பறிமுதல் செய்தனர்.

Share
தொடர்புடையது
20 14
செய்திகள்இலங்கைபிராந்தியம்

2027ஆம் ஆண்டில் முன்பள்ளிகளுக்கான புதிய பாடத்திட்டம்: பிரதமர் ஹரிணி அமரசூரிய அறிவிப்பு

2027ஆம் ஆண்டிலிருந்து முன்பள்ளிகளுக்கான புதிய தேசிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்றும், அதற்கேற்ப ஆசிரியர்களுக்கு முறையான பயிற்சிகள்...

19 12
செய்திகள்அரசியல்இலங்கை

பாதெனிய – அனுராதபுரம் பிரதான வீதியில் விபத்து: அமைச்சர் ஆனந்த விஜேபாலவின் சகோதரர் உயிரிழப்பு!

பாதெனிய – அனுராதபுரம் பிரதான வீதியின் மஹகல்கடவல பகுதியில் இன்று (மார்ச் 15) இடம்பெற்ற சாலை...

18 13
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தகவல் தொழில்நுட்ப யுகத்தில் ஊடகப் பொறுப்புணர்வு: பிரதமர் ஹரிணி அமரசூரியவின் வலியுறுத்தல்

தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகங்களின் வளர்ச்சி, தகவல்களை ஜனநாயகப்படுத்தியுள்ள அதேவேளையில், அவற்றின் உண்மைத்தன்மை மற்றும்...

17 14
செய்திகள்அரசியல்இலங்கை

அசோக ரன்வலவுக்கு எதிராக மஹர நீதிமன்றம் பிடியாணை பிறப்பிப்பு

தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் சபாநாயகருமான அசோக ரன்வலவுக்கு எதிராக மஹர நீதவான்...