24 65bb24d6ab848
உலகம்செய்திகள்

வாடகை வீட்டின் படுக்கை அறையில் ரகசிய பேனா கேமரா.., உடை மாற்றுவதை வீடியோ எடுத்த உரிமையாளரின் மகன்

Share

வாடகை வீட்டின் படுக்கை அறையில் பேனா கேமரா வைத்து பெண்கள் உடை மாற்றுவதை பதிவு செய்த வீட்டின் உரிமையாளர் மகனை பொலிஸார் கைது செய்தனர்.

சென்னை ராயபுரம் பகுதியில் இளம்பெண் ஒருவர் தனது கணவர் மற்றும் மகனுடன் வாடகை வீட்டில் வசித்து வருகிறார்.

இந்நிலையில், நேற்று காலை தனது படுக்கை அறையில் புதிதாக ஒரு பேனா இருப்பதை மனைவி பார்த்தார். அதனை எடுத்து ஆய்வு செய்த போது பேனா கேமரா என்பது தெரியவந்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த மனைவி தனது கணவருக்கு தகவல் தெரிவித்தார். பின்னர், வீட்டிற்கு வந்து பேனா கேமராவை பார்த்த கணவர் அதில் தனது மனைவி உடை மாற்றும் வீடியோக்கள் இருந்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த கணவர் ராயபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். பின்னர் பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது, இரண்டாவது தளத்தில் வசித்து வரும் வீட்டின் உரிமையாளர் மகன் இப்ராஹிம், படுக்கை அறையில் பேனா கேமராவை வைத்தது தெரியவந்தது.

மேலும், தனியார் மருத்துவக் கல்லூரியில் எம்டிஎஸ் இறுதியாண்டு படித்து வரும் இப்ராஹிம் பெண்களுக்கு தெரியாமல் கேமரா மூலம் வீடியோக்களை எடுத்திருப்பதும் தெரியவந்தது. பின்னர், இப்ராஹிமை பொலிஸார் கைது செய்ததுடன் அவரிடம் இருந்த கேமராவையும் பறிமுதல் செய்தனர்.

Share
தொடர்புடையது
10 14
செய்திகள்உலகம்

பாகிஸ்தானில் கடும் பொருளாதார நெருக்கடி: அரசு அதிரடி சிக்கன நடவடிக்கைகள் அறிவிப்பு!

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால் ஏற்பட்டுள்ள உலகளாவிய எரிபொருள் விலை உயர்வு மற்றும் பொருளாதாரப்...

09 14
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையின் பல மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும்: வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள சமீபத்திய வானிலை அறிக்கையின்படி, நாட்டின் பல மாகாணங்களில் இன்று பிற்பகல் 2:00...

08 14
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

போதைப்பொருள் பணத்தில் சொத்துச் சேகரிப்பு: 4 கோடி ரூபாய் பெறுமதியான வீடு மற்றும் சொத்துக்கள் முடக்கம்!

போதைப்பொருள் கடத்தல் மூலம் சட்டவிரோதமாக ஈட்டிய பணத்தைப் பயன்படுத்தி சொத்துக்களைச் சேர்த்த குற்றச்சாட்டில், சந்தேகநபர் ஒருவரின்...

05 15
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

சிவனொளிபாதமலைக்கு போதைப்பொருட்களுடன் சென்ற 08 பேர் கைது: மவுசாக்கலை சோதனைச் சாவடியில் சிக்கினர்!

புனித சிவனொளிபாதமலைக்கு யாத்திரை சென்ற பக்தர்கள் என்ற போர்வையில் போதைப்பொருட்களைக் கொண்டு சென்ற 8 பேர்...