உலகம்செய்திகள்

வாடகை வீட்டின் படுக்கை அறையில் ரகசிய பேனா கேமரா.., உடை மாற்றுவதை வீடியோ எடுத்த உரிமையாளரின் மகன்

Share
24 65bb24d6ab848
Share

வாடகை வீட்டின் படுக்கை அறையில் பேனா கேமரா வைத்து பெண்கள் உடை மாற்றுவதை பதிவு செய்த வீட்டின் உரிமையாளர் மகனை பொலிஸார் கைது செய்தனர்.

சென்னை ராயபுரம் பகுதியில் இளம்பெண் ஒருவர் தனது கணவர் மற்றும் மகனுடன் வாடகை வீட்டில் வசித்து வருகிறார்.

இந்நிலையில், நேற்று காலை தனது படுக்கை அறையில் புதிதாக ஒரு பேனா இருப்பதை மனைவி பார்த்தார். அதனை எடுத்து ஆய்வு செய்த போது பேனா கேமரா என்பது தெரியவந்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த மனைவி தனது கணவருக்கு தகவல் தெரிவித்தார். பின்னர், வீட்டிற்கு வந்து பேனா கேமராவை பார்த்த கணவர் அதில் தனது மனைவி உடை மாற்றும் வீடியோக்கள் இருந்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த கணவர் ராயபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். பின்னர் பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது, இரண்டாவது தளத்தில் வசித்து வரும் வீட்டின் உரிமையாளர் மகன் இப்ராஹிம், படுக்கை அறையில் பேனா கேமராவை வைத்தது தெரியவந்தது.

மேலும், தனியார் மருத்துவக் கல்லூரியில் எம்டிஎஸ் இறுதியாண்டு படித்து வரும் இப்ராஹிம் பெண்களுக்கு தெரியாமல் கேமரா மூலம் வீடியோக்களை எடுத்திருப்பதும் தெரியவந்தது. பின்னர், இப்ராஹிமை பொலிஸார் கைது செய்ததுடன் அவரிடம் இருந்த கேமராவையும் பறிமுதல் செய்தனர்.

Share
Related Articles
26 1
இலங்கைசெய்திகள்

இறுதியாக கிளிநொச்சியில் தமிழ்த் தேசியத் தலைமையை பார்த்தோம் – சிறிதரன் பகிரங்கம்

நாங்கள் இறுதியாக கிளிநொச்சியில் எங்கள் தலைவரை பார்த்தோம். அங்கு தான் பல வரலாறுகளை கற்றோம் என...

28 1
இலங்கைசெய்திகள்

இந்தியாவிலிருந்து கிடைத்த தகவல்! கட்டுநாயக்க விமான நிலையத்தில் திடீர் சோதனை

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விசேட சோதனை நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலிருந்து கிடைத்த தகவலுக்கமையவே இந்த...

27 1
உலகம்ஏனையவைசெய்திகள்

15 மணிநேர செய்தியாளர் சந்திப்பை நடத்தி சாதனை நிகழ்த்தியுள்ள மாலைத்தீவின் ஜனாதிபதி

மாலைத்தீவு ஜனாதிபதி முகமது முய்சு(Mohamed Muizzu )கிட்டத்தட்ட 15 மணி நேரமாக செய்தியாளர் சந்திப்பு ஒன்றை...

29
இலங்கைசெய்திகள்

யாழ்ப்பாணம் ஏழாலைக்குள்தானே இருக்கின்றது..! உளறியவருக்கு சுமந்திரன் பதிலடி

ஒருவர் யாழ்ப்பாணம் ஏழாலைக்குள்தானே இருக்கின்றது என்கின்றார். இதற்கு முன்னர் இரண்டு இலட்சம் மக்கள்தான் நாட்டின் சனத்தொகை...