tamilni 260 scaled
உலகம்செய்திகள்

27 பேர் மட்டுமே வாழும் நாடு எது தெரியுமா?

Share

27 பேர் மட்டுமே வாழும் நாடு எது தெரியுமா?

இங்கிலாந்துக்கு அருகில் உள்ள சீலாந்து எனப்படும் நாடு, உலகின் மிகச்சிறிய நாடாக கருதப்படுகிறது.

இங்கிலாந்தின் சஃபோல்க் கடல் கடற்கரையிலிருந்து சுமார் 10 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள இந்த நாடு, மைக்ரோ தேசம் எனவும் அழைக்கப்படுகிறது.

இரண்டாம் உலகப் போரின் போது, பிரித்தானியாவால் அமைக்கப்பட்ட இந்த பகுதி பாழடைந்த கடல் கோட்டையின் மீது அமைந்துள்ளது.

சீலாந்தின் பரப்பளவு 6000 சதுர அடியில் பரவியுள்ளது. மைக்ரோ நேஷன் எனப்படும் இந்த கடல் நிலத்தை பலர் ஆக்கிரமித்தனர்.

பின்னர் கடந்த 2012 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 9 ஆம் திகதி, ராய் பேட்ஸ் என்ற நபர் தன்னை சீலாந்தின் இளவரசராக அறிவித்தார். ராய் பேட்ஸ் இறந்ததிலிருந்து, அவரது மகன் மைக்கேல் ஆட்சி செய்து வருகிறார்.

ராய் பேட்ஸ் சீலாந்திற்கான தனியான தபால் தலைகள், பாஸ்போர்ட்கள் மற்றும் பணத்தை அறிவித்தார். நாணயத்தில் ராய் பேட்ஸின் மனைவி ஜான் பேட்ஸின் படம் உள்ளது.

இந்த நாட்டிற்கும் சொந்தமான கொடி உள்ளது, அதில் சிவப்பு, வெள்ளை மற்றும் கருப்பு ஆகிய நிறங்கள் உள்ளன.

இந்த சிறிய நாட்டின் பொருளாதாரம் முற்றிலும் நன்கொடைகளை நம்பியே உள்ளது.

எனினும், தற்போது மக்கள் சுற்றுலாவுக்காக சீலாந்துக்கு பயணம் செய்ய ஆரம்பித்துள்ளனர்.

இதனால் அந்த நாட்டுக்கான வருமானம் அதிகரித்திருக்க கூடுமென நம்பப்படுகிறது.

இணைய புள்ளி விபரங்களுக்கமை, சீலாந்தில் 27 பேர் மாத்திரமே உள்ளனர்.

சீலாந்தை தனி நாடாக அந்த நாட்டு இளவரசர் அறிவித்தாலும், சர்வதேச ரீதியில் குறித்த நாடு இதுவரை அங்கீகரிக்கப்படவில்லை.

இந்த காரணத்திற்காக, உலகின் மிகச்சிறிய நாடாக தற்போது வாடிகன் நகரம் பதிவாகியுள்ளதுடன், வாடிகன் நகரம் 0.44 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டுள்ளது. இங்கு சுமார் 800 பேர் மாத்திரம் உள்ளமை குறிப்பிடதத்தக்கது.

Share

Recent Posts

தொடர்புடையது
images 2 3
செய்திகள்விளையாட்டு

டி20 உலகக் கிண்ணம்: பாகிஸ்தானை துவம்சம் செய்த இந்தியா! – 61 ஓட்டங்களால் அபார வெற்றி!

டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் 27-ஆவது லீக் போட்டியில், பரம எதிரிகளான இந்தியா மற்றும்...

25 688daecf5398b
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் நாளை நீதிமன்றப் பணிகள் முடக்கம்! – சட்டத்தரணி படுகொலைக்கு எதிர்ப்புத் தெரிவித்து நாடளாவிய ரீதியில் பணிப்பகிஷ்கரிப்பு!

பத்தரமுல்ல, அக்குரேகொட பகுதியில் இடம்பெற்ற திட்டமிட்ட துப்பாக்கிச் சூட்டில் சட்டத்தரணி ஒருவரும் அவரது மனைவியும் படுகொலை...

Screenshot 2026 02 15 222008
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சிறுவர் துஷ்பிரயோகக் குற்றவாளிகளுக்குத் தடை! – புதிய தரவுத்தளம் மூலம் அரசாங்கம் அதிரடி நடவடிக்கை!

சிறுவர் துஷ்பிரயோகக் குற்றங்களுடன் தொடர்புடையவர்கள், சிறுவர்களுடன் நேரடியாகத் தொடர்புடைய எந்தவொரு பணிகளிலும் ஈடுபடுவதைத் தடுப்பதற்கான புதிய...

Screenshot 2026 02 15 222512
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் முதல்முறை: காசல் வீதி மருத்துவமனையில் இலவச IVF சிகிச்சை! – 2,000-க்கும் மேற்பட்ட தம்பதியினர் விண்ணப்பம்!

கொழும்பு காசல் வீதி மகளிர் மருத்துவமனையில் அறிமுகப்படுத்தப்படவுள்ள முற்றுமுழுதான இலவச செயற்கை கருத்தரிப்பு (IVF) சிகிச்சைக்காக...