உலகம்செய்திகள்

30 வருடத்திற்கு முன் திருடப்பட்ட கைப்பை: 11 வயது பிரித்தானிய சிறுமி செய்த நெகிழ்ச்சி செயல்

Share

30 வருடத்திற்கு முன் திருடப்பட்ட கைப்பை-ஐ உரிமையாளரிடம் சிறுமி ஒருவர் சேர்த்து இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிரித்தானியாவின் ஸ்காட்லாந்தை சேர்ந்த மெய்சி கூட்ஸ் என்ற 11 வயது சிறுமி தன்னுடைய நாய் மற்றும் பெற்றோருடன் டான் ஆற்றங்கரையோரமாக நடந்து சென்றுள்ளார்.

அப்போது கரை ஒதுங்கிய பை ஒன்றை கண்டுபிடித்த சிறுமி, அதில் பேனா, சில்லறை நாணயங்கள், உதட்டு சாயம், சாவி, மாத்திரைகள் மற்றும் ஆபரணங்கள் இருப்பதை பார்த்துள்ளார்.

மேலும் அந்த கைப்பையில் 1993ம் வருடம் குறிப்பிடப்பட்ட சில கிரெடிட் கார்டுகளும் இருந்துள்ளது.

இதையடுத்து பையின் மேலே உள்ள அடையாளங்கள் மற்றும் அதில் இருந்த சில பொருட்களை வைத்து சமூக ஊடகங்களில் கைப்பையின் உரிமையாளரை தேடும் பணியில் 11 வயது மெய்சி கூட்ஸ் இறங்கியுள்ளார்.

11 வயது சிறுமி தனது நீண்ட தேடலுக்கு பிறகு, ஒருவழியாக கைப்பையின் உரிமையாளரான ஆட்ரி-யிடம் கைப்பையை சிறுமி ஒப்படைத்தார்.

இது தொடர்பாக கைப்பையின் உரிமையாளரான ஆட்ரி பேசிய போது, நான் இதனை எதிர்பார்க்கவே இல்லை, இத்தனை வருடங்களுக்கு பிறகும் பை அப்படியே உள்ளது என தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில் சமூக வலைதளத்தின் தாக்கம் நம்ப முடியாத அளவு இருப்பதாக சிறுமியின் தாயார் ஆச்சரியம் தெரிவித்துள்ளார்.

கிட்டத்தட்ட 30 வருடங்களுக்கு முன்பு தற்போது 81 வயதுடைய ஆட்ரி ஹே என்பவரின் கைப்பை திருடப்பட்டுள்ளது.

அப்போது அந்த கைப்பையில் 200 பவுண்ட் பணம் இருந்துள்ளது, அதனை எடுத்துவிட்டு திருடன் கைப்பையை டான் நதியில் வீசி விட்டு சென்றுள்ளார்.

அப்போது இது தொடர்பாக பொலிஸில் புகார் அளித்தும், காவல்துறையினரால் அப்போது அதை கண்டுபிடிக்க முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
india 17
உலகம்செய்திகள்

பாகிஸ்தான் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் பயணித்த அனைவரும் பலி

பாகிஸ்தான் ராணுவத்திற்குச் சொந்தமான ‘Mi-17’ ரக ஹெலிகாப்டர் ஒன்று, பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழுள்ள காஷ்மீரின் முசாபராபாத்...

india 16
உலகம்செய்திகள்

சூரியப் புயல்களில் இருந்து பூமியைப் பாதுகாக்க விண்வெளியில் செயற்கை பிளாஸ்மா கவசம்: விஞ்ஞானிகள் புதிய திட்டம்

சூரியனில் இருந்து வெளியாகும் சக்திவாய்ந்த சூரியப் புயல்கள் (Solar Storms) மற்றும் புவிக்காந்தப் புயல்களினால் பூமியில்...

india 15
உலகம்செய்திகள்

போலி உரிமம் மூலம் 17 ஆண்டுகள் பயணிகள் விமானத்தை இயக்கிய ஏர் கனடா கேப்டன் கைது

ஏர் கனடா (Air Canada) விமான சேவை நிறுவனத்தில் போலி உரிம ஆவணங்களைப் பயன்படுத்தி, சுமார்...

india 13
அரசியல்இலங்கைசெய்திகள்

சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் குற்றச்சாட்டுகள் குறித்து முறையான விசாரணை: நாடாளுமன்றத்தில் அமைச்சர் ஆனந்த விஜேபால உறுதி

கடந்த காலங்களில் நாட்டில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் மக்கள் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவங்கள் உள்ளிட்ட...