24 661efe286e72b
உலகம்செய்திகள்

கைபேசிகளை செயற்கைகோள் மூலம் இயக்கும் வசதி: சீனா புதிய சாதனை

Share

கைபேசிகளை செயற்கைகோள் மூலம் இயக்கும் வசதி: சீனா புதிய சாதனை

தொலைபேசி டவர்கள் இல்லாமல் நேரடியாக செயற்கைக் கோள் மூலமாக ஸ்மார்ட் கைபேசிகளினூடாக தொடர்பு கொள்ளும் ஆய்வில் சீனா வெற்றிப்பெற்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

செயற்கை கோள் மூலமாக ஸ்மார்ட் கைபேசிகளினூடாக தொடர்பு கொள்ளும் வசதியை கண்டுபிடிப்பதற்கான ஆய்வை சீனா மேற்கொண்டது.

இதற்காக கடந்த 2016ஆம் ஆண்டு டியான்டாங்-1 என்ற செயற்கைக் கோள்களை விண்ணுக்கு அனுப்பி சோதனை மேற்கொண்டது.

இந்தநிலையில், இந்த முதல் சோதனையில் வெற்றி பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஸ்மார்ட் கைபேசிகளில் தகவல் தொடர்பு அமைப்பில், செயற்கைக் கோள் இணைப்பை அடைவதில் சீன விஞ்ஞானிகள் புதிய சாதனை படைத்துள்ளதாக கூறப்படுகின்றது.

இதன்மூலம் ஆசியா – பசுபிக் பிராந்தியம் முழுவதும் செயற்கைக்கோள்கள் வழியாகவே ஸ்மார்ட் கைபேசிகளில் தொடர்பு கொள்ள முடியும் எனவும் இதனால் நிலநடுக்கம், சூறாவளி போன்ற இயற்கை சீற்றங்கள் ஏற்படும் போது கூட தொலைத் தொடர்பு இருக்கும் என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

Share
தொடர்புடையது
20 12
இலங்கைசெய்திகள்

இலங்கையில் பணக்கார அரசியல் கட்சி எது தெரியுமா…!

இலங்கையில்(sri lanka) உள்ள பணக்கார அரசியல் கட்சி தேசிய மக்கள் சக்தி எனவும் அவர்களிடம் தேவைக்கும்...

19 11
உலகம்செய்திகள்

இந்தியாவுடனான போர் : பாகிஸ்தானுக்கு வரலாற்று சிறப்பு மிக்க வெற்றி : அந்நாட்டு பிரதமர் பெருமிதம்

பாகிஸ்தான்(pakistan) பிரதமர் ஷெபாஷ் ஷெரிப் இந்தியாவுடனான (india)போரில் பாகிஸ்தான் தான் வெற்றி பெற்றதாக கூறியுள்ளார். இது...

18 11
உலகம்செய்திகள்

முடிவிற்கு வருமா உக்ரைன்- ரஷ்ய போர் : புடின் விடுத்துள்ள அழைப்பு..!

போர் நிறுத்தம் தொடர்பாக நேரடி பேச்சுவார்த்தைக்கு வரும்படி உக்ரைனுக்கு(ukraine) ரஷ்ய ஜனாதிபதி புடின் (viladdmir putin)அழைப்பு...

17 11
உலகம்செய்திகள்

ஆபரேஷன் சிந்தூர் : பலியான நூற்றுக்கணக்கான தீவிரவாதிகள்

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையானது எல்லையில் ஊடுருவிய தீவிரவாதிகளை தண்டிக்க நன்கு திட்டமிடப்பட்டு செயல்படுத்தட்ட இராணுவ நடவடிக்கை...