sudeepandsalman21556188862
உலகம்செய்திகள்

மாத வருமானம் மட்டுமே ரூ.1 கோடி.., களைகட்டும் சல்மான் கானின் வாடகை பிசினஸ்

Share

மாத வருமானம் மட்டுமே ரூ.1 கோடி.., களைகட்டும் சல்மான் கானின் வாடகை பிசினஸ்

நடிப்பு, சினிமா தயாரிப்பு தவிர நடிகர் சல்மான் கான் வாடகை மூலமாக மாதத்திற்கு ரூ.1 கோடி சம்பாதித்து வருகிறார்.

நடிகர் சல்மான் பல்வேறு துறைகளில் முதலீடு செய்துள்ளார். அதில் ரியல் எஸ்டேட் ஒன்றாகும். இவருக்கு, மும்பை பாந்த்ராவில் உள்ள கேலக்ஸி அபார்ட்மென்ட் தவிர பன்வெலில் ஒரு பண்ணை வீடு, கோராய் பீச்சில் ஒரு ஹாலிடே ஹோம், பாந்த்ரா கார்ட்டர் ரோடு என ஏகப்பட்ட அபார்ட்மென்ட்கள் சொந்தமாக உள்ளன.

மேலும், துபாயில் உள்ள புர்ஜ் பசிபிக் கட்டடத்தில் ஒரு அபார்ட்மென்ட் வாங்கியுள்ளார். இதனிடையே, பாந்த்ராவின் கார்ட்டர் ரோடில் உள்ள அவரது தாய்க்கு சொந்தமான பிளாட்டில் 19 அடுக்கு மாடி குடியிருப்பைக் கட்டுவதற்கான அனுமதியையும் பெற்றுள்ளார்.

சல்மான் கானுக்கு சான்டாகுரூஸ் லிங்க்கிங் ரோடில் உள்ள 4 மாடி கமர்ஷியல் பிளேஸ் தான் அதிக வருமானத்தை தருகிறது. 25,000 சதுர அடி பரப்பளவு கொண்ட இந்த இடத்தை 2012 -ம் ஆண்டு ரூ.120 கோடிக்கு வாங்கினார்.

தற்போது, இந்த இடத்தில் உள்ள வர்த்தக நிறுவனம் மூலம் சல்மான் கானுக்கு மாதம் ரூ.90 லட்சம் வாடகை பணம் கிடைக்கிறது. முன்பு, பியூச்சர் குரூப் வசம் இருந்த இந்த இடத்தின் வாடகை ரூ.1 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது.

இந்த இடத்தில் வெர்சேஸ், என்டிசி சாக்லெட், ஒலிவியாலஜி போன்ற உணவு நிறுவனங்கள் உள்ளன. அதோடு, இந்த நிறுவனங்களில் மசாபா குப்தா, முகுல் அகர்வால் உள்ளிட்ட பிரபலங்கள் கோடிகளில் முதலீடு செய்துள்ளனர்.

சல்மான் கானுக்கு 9 வருவாய் ஆதாரங்களில் இருந்து வந்த வருமானம் மூலம் ரூ.2,907 கோடி நிகர சொத்து சேர்ந்துள்ளது.

 

Share
தொடர்புடையது
25 6947c9eb14d31
உலகம்செய்திகள்

பங்களாதேஷில் தீப்பிடிக்கும் வன்முறை: அரசியல்வாதியின் வீட்டுக்குத் தீ வைப்பு; 7 வயது மகள் உடல் கருகி பலி!

பங்களாதேஷில் மாணவர் இயக்கத் தலைவர் ஷெரீப் உஸ்மான் ஹாடி சுட்டுக்கொல்லப்பட்டதை அடுத்து வெடித்துள்ள கலவரம், தற்போது...

Namal Rajapaksa 1
செய்திகள்அரசியல்இலங்கை

நிவாரணம் 10% மக்களுக்கே சென்றடையும்; நடைமுறைச் சாத்தியமான திட்டங்கள் அவசியம்” – நாமல் ராஜபக்ச காட்டம்!

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதில் அரசாங்கம் கடைப்பிடிக்கும் தற்போதைய நடைமுறைகள் போதுமானதாக இல்லை என...

பேராதனை
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பேராதனை பல்கலைக்கழகம் மீண்டும் திறப்பு: 29ஆம் திகதி முதல் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பம்!

‘டித்வா’ சூறாவளி மற்றும் அதனால் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் காரணமாகத் தற்காலிகமாக மூடப்பட்டிருந்த பேராதனை பல்கலைக்கழகத்தின்...

25 69475175d454d
செய்திகள்அரசியல்இலங்கை

இலங்கையை மீட்டெடுக்க இந்தியாவின் ‘பேருதவித் திட்டம்’: நாளை கொழும்பு வருகிறார் ஜெய்சங்கர்!

புயல், வெள்ளம் மற்றும் மண்சரிவு போன்ற இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கையை மீட்டெடுப்பதற்கான பாரிய உதவித்...