tamilnaadi 5 scaled
உலகம்செய்திகள்

உக்ரைனின் தாக்குதலால் கடலில் மூழ்கிய ரஷ்ய கப்பல்

Share

உக்ரைனின் தாக்குதலால் கடலில் மூழ்கிய ரஷ்ய கப்பல்

உக்ரைன் நடத்திய திடீர் தாக்குதலால் ரஷ்யாவின் ஏவுகணை கப்பல் கடலில் மூழ்கியுள்ளது.

உக்ரைன்-ரஷ்யா இடையிலான போர் இரண்டாவது ஆண்டை நிறைவு செய்ய உள்ள நிலையில் இரு நாடுகளுக்கு இடையிலான போர் தொடர்ந்த வண்ணமே உள்ளது.

இந்நிலையில் ரஷ்யாவின் இவானோவெட்ஸ்(Ivanovets) என்ற ஏவுகணை கப்பலை உக்ரைனின் முக்கிய புலனாய்வு துறை திடீர் தாக்குதல் நடத்தி அழித்துள்ளது.

இவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்ட கப்பல் நேற்று நள்ளிரவு கிரிமியாவின் கடல் பகுதியில் மூழ்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த கப்பல் மூழ்கடிக்கப்பட்டதன் மூலம் ரஷ்யாவிற்கு 60 முதல் 70 மில்லியன் டொலர் இழப்பு ஏற்பட்டு இருக்கலாம் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.

முதல்நிலை தகவலின் படி, இவானோவெட்ஸ்(Ivanovets) கப்பல் மூழ்கடிக்கப்பட்ட பிறகு ரஷ்யா தேடுதல் மற்றும் மீட்பு பணிகளை மேற்கொண்டதாகவும், ஆனால் அது வெற்றிகரமாக முடியவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
20 14
இலங்கைசெய்திகள்

அர்ச்சுனாவின் நாடாளுமன்ற உறுப்புரிமை: மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் உத்தரவு

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் பதவியை இரத்து செய்ய உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை...

17 13
இலங்கைசெய்திகள்

நான்கு தமிழ் இளைஞர்கள் பரிதாப மரணம்

புத்தளம் (Puttalam) மாவட்டம், வென்னப்புவ கடலில் மூழ்கி நால்வர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர். மேற்படி நால்வரும் குளித்துக்...

19 13
இலங்கைசெய்திகள்

இறம்பொட கோர விபத்து : 23ஆக உயர்ந்த பலி எண்ணிக்கை

கொத்மலை, ரம்பொட கரண்டியெல்ல பகுதியில் கடந்த 11 ஆம் திகதி நடந்த பேருந்து விபத்தில் படுகாயமடைந்து...

18 13
இலங்கைசெய்திகள்

தங்கத்தின் விலையில் ஏற்பட்ட தலைகீழ் மாற்றம்

கொழும்பு செட்டியார் தெருவில் 22 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 240,500 ரூபாவாக பதிவாகியுள்ளது. இன்று...