WhatsApp Image 2024 12 12 at 2.03.36 PM 1
உலகம்செய்திகள்

கனடா – அமெரிக்காவிற்கு செல்ல வேண்டாம் : ரஷ்யர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

Share

கனடா – அமெரிக்காவிற்கு செல்ல வேண்டாம் : ரஷ்யர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

ரஷ்ய (Russia) நாட்டுமக்களை அமெரிக்கா (United States) மற்றும் கனடாவுக்கு (Canada) பயணப்பட வேண்டாம் என திடீர் எச்சரிக்கை விடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அமெரிக்கா, கனடா மட்டுமின்றி சில ஐரோப்பிய நாடுகளுக்கும் பயணப்பட வேண்டாம் என்றும் அமெரிக்க (America) அதிகாரிகளால் ரஷ்ய மக்கள் வேட்டையாடப்படும் ஆபத்து இருப்பதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

ரஷ்ய வெளிவிவகார அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளரான மரியா ஜகரோவா (Maria Zakharova) இது தொடர்பில் தெரிவிக்கையில், அமெரிக்காவுடனான உறவுகள் முறிவின் விளிம்பில் தத்தளிப்பதாக தெரிவித்துள்ளார்.

இது முற்றிலும் அமெரிக்க நிர்வாகத்தின் தவறு என குறிப்பிட்டுள்ள அவர், இந்த நெருக்கடியான சூழலில் ரஷ்ய மக்கள் தனிப்பட்ட முறையிலோ அல்லது உத்தியோகப்பூர்வமாகவோ அமெரிக்காவுக்கு பயணப்படுவது என்பது ஆபத்தை வரவழைக்கும் செயல் என சுட்டிக்காட்டியுள்ளார்.

அமெரிக்கா மட்டுமின்றி, அதன் நெருக்கமான நட்பு நாடுகளான கனடா மற்றும் குறிப்பிட்ட சில ஐரோப்பிய நாடுகளுக்கும் ரஷ்ய மக்கள் பயணம் மேற்கொள்ள வேண்டாம் என வலியுறுத்துவதாக அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
30 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ரியாத் மற்றும் டுபாய்க்கான விமான சேவைகளை மீண்டும் ஆரம்பிக்கிறது ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்!

மத்திய கிழக்கில் நிலவும் மோதல் நிலைமைகளுக்கு மத்தியில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த ரியாத் மற்றும் டுபாய்க்கான தினசரி...

29 2
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

சர்வதேச பொருளாதார சவால்களை எதிர்கொள்ள இலங்கை தயார்: மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க நம்பிக்கை

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு...

23 4
செய்திகள்இலங்கை

தமிழக சட்டமன்ற தேர்தல்: தவெக-அதிமுக கூட்டணி குறித்து வெளியாகும் பரபரப்பு தகவல்கள்

தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, நடிகர் விஜய்யின்...

22 7
செய்திகள்அரசியல்இலங்கை

முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் அடிப்படை உரிமை மனு: விசாரணை வரும் 13-ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது...