WhatsApp Image 2024 12 12 at 2.03.36 PM 1
உலகம்செய்திகள்

கனடா – அமெரிக்காவிற்கு செல்ல வேண்டாம் : ரஷ்யர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

Share

கனடா – அமெரிக்காவிற்கு செல்ல வேண்டாம் : ரஷ்யர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

ரஷ்ய (Russia) நாட்டுமக்களை அமெரிக்கா (United States) மற்றும் கனடாவுக்கு (Canada) பயணப்பட வேண்டாம் என திடீர் எச்சரிக்கை விடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அமெரிக்கா, கனடா மட்டுமின்றி சில ஐரோப்பிய நாடுகளுக்கும் பயணப்பட வேண்டாம் என்றும் அமெரிக்க (America) அதிகாரிகளால் ரஷ்ய மக்கள் வேட்டையாடப்படும் ஆபத்து இருப்பதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

ரஷ்ய வெளிவிவகார அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளரான மரியா ஜகரோவா (Maria Zakharova) இது தொடர்பில் தெரிவிக்கையில், அமெரிக்காவுடனான உறவுகள் முறிவின் விளிம்பில் தத்தளிப்பதாக தெரிவித்துள்ளார்.

இது முற்றிலும் அமெரிக்க நிர்வாகத்தின் தவறு என குறிப்பிட்டுள்ள அவர், இந்த நெருக்கடியான சூழலில் ரஷ்ய மக்கள் தனிப்பட்ட முறையிலோ அல்லது உத்தியோகப்பூர்வமாகவோ அமெரிக்காவுக்கு பயணப்படுவது என்பது ஆபத்தை வரவழைக்கும் செயல் என சுட்டிக்காட்டியுள்ளார்.

அமெரிக்கா மட்டுமின்றி, அதன் நெருக்கமான நட்பு நாடுகளான கனடா மற்றும் குறிப்பிட்ட சில ஐரோப்பிய நாடுகளுக்கும் ரஷ்ய மக்கள் பயணம் மேற்கொள்ள வேண்டாம் என வலியுறுத்துவதாக அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share

Recent Posts

தொடர்புடையது
images 3
செய்திகள்இலங்கை

தனிப்பட்ட பாதுகாப்பிற்காகத் துப்பாக்கிகள் கோரி சுமார் 20 எம்.பி.க்கள் விண்ணப்பம் – பாதுகாப்பு அமைச்சின் பரிசீலனையில் கோரிக்கை!

பாராளுமன்ற வட்டாரத் தகவல்களின்படி, தமது தனிப்பட்ட பாதுகாப்பிற்காகத் துப்பாக்கிகளை வழங்குமாறு சுமார் 20 நாடாளுமன்ற உறுப்பினர்கள்...

MediaFile 2
இலங்கைசெய்திகள்

அரசாங்கத்தால் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட முடியவில்லை: போதைப்பொருள் கலாசாரம் மேலோங்கியுள்ளதாக சஜித் பிரேமதாச குற்றச்சாட்டு!

தற்போதைய அரசாங்கத்தினால் சட்டம் ஒழுங்கை உரிய வகையில் நிலைநாட்ட முடியாமல் போயுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித்...

MediaFile 3
இலங்கைசெய்திகள்

அரச வருமானம் 24.8% அதிகரிப்பு: 2025 முதல் அரையாண்டில் மொத்த வருமானம் ரூ. 2,321.7 பில்லியன்!

இந்த ஆண்டின் முதல் அரையாண்டில் அன்பளிப்புகள் நீங்கலாக அரசாங்கத்தின் மொத்த வருமானம் 2,321.7 பில்லியன் ரூவாக...

MediaFile 1
இலங்கைசெய்திகள்

உடுகம்பொல சம்பவத்தில் பொலிஸ் அதிகாரிகளுக்கு இடையூறு: ‘உயரதிகாரியின் சகோதரி’ எனக் கூறியவர் போலியானவர் என பொலிஸ் உறுதி!

உடுகம்பொல வாரச் சந்தைக்கு அருகில் போக்குவரத்துக் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரிகளுக்கு இடையூறு விளைவித்த பெண்...