15 17
உலகம்செய்திகள்

ரஷ்யாவை திணற வைத்த ஜெனரலின் படுகொலை: பின்னணியில் இருந்த உளவு அமைப்பு

Share

ரஷ்யாவை திணற வைத்த ஜெனரலின் படுகொலை: பின்னணியில் இருந்த உளவு அமைப்பு

ரஷ்யாவின் (Russia) அணு, உயிரியல் மற்றும் இரசாயன பாதுகாப்பு படைகளின் தலைவராக இருந்த லெப்டினன்ட் ஜெனரல் இகோர் கிரில்லோவ் (Igor Kirillov) உக்ரைனின் SBU உளவுத்துறையால் கொலை செய்யப்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

உக்ரைனுக்கு எதிராக இரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட ரஷ்ய உயர்மட்ட ஜெனரல் ஒருவர் மாஸ்கோவில் படுகொலை செய்யப்பட்டார்.

ரஷ்யாவின் அணு, உயிரியல் மற்றும் இரசாயன பாதுகாப்பு படைகளின் தலைவராக இருந்த லெப்டினன்ட் ஜெனரல் இகோர் கிரில்லோவ், அவரது உதவியாளருடன் அடுக்குமாடி கட்டிடத்திற்கு வெளியே மின்சார ஸ்கூட்டரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு வெடித்ததில் கொல்லப்பட்டதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.

இதன் பின்னணியில், SBU என்ற உக்ரேனிய புலனாய்வு அமைப்பு இருப்பதாகவும் கடுமையான குற்றங்களை விசாரிக்கும் ரஷ்யாவின் விசாரணைக் குழு உறுதிப்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், 54 வயதான கிரில்லோவ், ரஷ்யாவிற்குள் உக்ரைனால் படுகொலை செய்யப்பட்ட மிக மூத்த ரஷ்ய இராணுவ அதிகாரி என கூறப்படுகிறது.

இதேவேளை, அவரது கொலை, இராணுவத்தின் உயர்மட்ட அதிகாரிகளுக்கான பாதுகாப்பு நெறிமுறைகளை மறுபரிசீலனை செய்ய ரஷ்யாவை தூண்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Share
தொடர்புடையது
Untitled 24
செய்திகள்உலகம்

ஈரான் போர் நிறுத்தம் கோருகிறது: ஹோர்முஸ் ஜலசந்தி திறக்கப்படும் வரை தாக்குதல் தொடரும் என டிரம்ப் எச்சரிக்கை!

ஈரானின் புதிய தலைமை (New Regime) அமெரிக்காவிடம் போர் நிறுத்தம் கோரியுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட்...

Untitled 23
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாளை நாடு தழுவிய அளவில் மருத்துவர்கள் வேலைநிறுத்தம்: 24 மணி நேரப் போராட்டத்திற்கு GMOA அழைப்பு!

நாட்டிலுள்ள அனைத்து அரச மருத்துவமனைகளையும் தழுவிய ரீதியில் நாளை (ஏப்ரல் 02, 2026) வியாழக்கிழமை காலை...

Untitled 22
செய்திகள்இந்தியா

மத்திய கிழக்கு போர் எதிரொலி: இந்தியாவில் ஏடிஎஃப் மற்றும் வர்த்தக எரிவாயு விலைகள் உயர்வு!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக உலகளாவிய எரிசக்தி செலவுகள் அதிகரித்துள்ள...

Untitled 21
செய்திகள்உலகம்

வானில் இன்று தோன்றும் ‘இளஞ்சிவப்பு நிலவு’: 50 ஆண்டுகளுக்குப் பின் நிலவுக்கான மனிதப் பயணம் தொடக்கம்!

புதிய வசந்த காலத்தின் வருகையை அறிவிக்கும் வகையில், ஏப்ரல் மாதத்தின் முதல் முழு நிலவான ‘இளஞ்சிவப்பு...