24 65fd666121302
உலகம்செய்திகள்

குலைநடுங்கவைத்த ரஷ்யா… மொத்தமாக இருளில் மூழ்கிய உக்ரைன்

Share

குலைநடுங்கவைத்த ரஷ்யா… மொத்தமாக இருளில் மூழ்கிய உக்ரைன்

ரஷ்யா மீண்டும் மிகப்பெரிய தாக்குதல் ஒன்றை முன்னெடுத்து உக்ரைனின் பெரும்பகுதியை இருளில் மூழ்கடித்துள்ளது.

உக்ரைனுக்கு எதிராக போர் தொடங்கிய பின்னர், இதுவரை ரஷ்யா முன்னெடுத்த தாக்குதல்களில் மிகப்பெரியதாக இது கருதப்படுகிறது. சுமார் 90 ஏவுகணைகள் மற்றும் 60 ட்ரோன்கள் தாக்குதலில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

Dnipro மின் உற்பத்தி நிலையத்தை குறிவைத்தே இந்த தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதனால் பல்வேறு பகுதிகள் இருளில் மூழ்கியுள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

உக்ரைன் ஜனாதிபதி ஜெல்ன்ஸ்கி தெரிவிக்கையில், ஈரான் தயாரிப்பு ட்ரோன்களை ரஷ்யா பயன்படுத்தியுள்ளது என்றார். மட்டுமின்றி, ரஷ்ய பயங்கரவாதிகளின் இலக்கு எது என்பதை உலகம் பார்த்துக்கொண்டு தான் இருக்கிறது.

மின் உற்பத்தி நிலையங்கள், மின்சார விநியோகக் கம்பிகள், நீர்மின் அணை, சாதாரண குடியிருப்பு கட்டிடங்கள் என அவர் பட்டியலிட்டுள்ளார். தொடர்புடைய தாக்குதலில் கொல்லப்பட்டவர்கள் மற்றும் காயமடைந்தவர்கள் தொடர்பான தகவலேதும் இதுவரை வெளியாகவில்லை.

Dnipro மின் உற்பத்தி நிலையமானது உக்ரைனின் மிகப்பெரிய நீர்மின் நிலையமாகும். அது தற்போது கொழுந்துவிட்டெரிகிறது. ஆனால் அந்த தாக்குதலில் இருந்து அணை தப்பியதாகவே கூறப்படுகிறது.

Share
தொடர்புடையது
21 1
இலங்கைசெய்திகள்

விபத்துக்குள்ளான கெப் ரக வாகனம்

புல்மோட்டையிலிருந்து சென்ற கெப் வாகனம் புடவைக்கட்டில் விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று (23) அதிகாலை 04:35 மணியளவில் புல்மோட்டையில்...

19 2
இலங்கைசெய்திகள்

மூதூர் பிரதேச சபை இலங்கை தமிழரசுக் கட்சி வசம்!

திருகோணமலை – மூதூர் பிரதேச சபைக்கான, தவிசாளர் மற்றும் உதவி தவிசாளர் தெரிவு இன்று(23) கிழக்கு...

20
இலங்கைசெய்திகள்

இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (23) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, அமெரிக்க டொலர்...

22 1
உலகம்செய்திகள்

அமெரிக்க நகரங்களில் ட்ரம்பிற்கு எதிராக போராட்டத்தில் குதித்த மக்கள்

ஈரான்(IRAN) மீதான தாக்கு தலை கண்டித்தும் போரை உடனே நிறுத்த வேண்டும் என்றும் அமெரிக்காவில்(USA) பல்வேறு...